Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Friday, July 18
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»தேசியம்»கர்னல் சோபியா குரேஷி குறித்து சர்ச்சை கருத்து: ம.பி அமைச்சர் மீது வழக்குப் பதிய ஐகோர்ட் உத்தரவு
    தேசியம்

    கர்னல் சோபியா குரேஷி குறித்து சர்ச்சை கருத்து: ம.பி அமைச்சர் மீது வழக்குப் பதிய ஐகோர்ட் உத்தரவு

    adminBy adminMay 14, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    கர்னல் சோபியா குரேஷி குறித்து சர்ச்சை கருத்து: ம.பி அமைச்சர் மீது வழக்குப் பதிய ஐகோர்ட் உத்தரவு
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    போபால்: கர்னல் சோபியா குரேஷி குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த பாஜக ஆளும் மத்தியப் பிரதேச மாநிலத்தின் அமைச்சர் விஜய் ஷா மீது நான்கு மணி நேரத்துக்குள் வழக்குப் பதிவு செய்யுமாறு காவல் துறைக்கு மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கர்னல் சோபியா குரேஷியை ‘பயங்கரவாதத்தின் சகோதரி’ என்று அவர் அழைத்ததாக நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.

    இந்த விவகாரம் குறித்து தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட மத்தியப் பிரதேச உயர் நீதிமன்ற நீதிபதி அதுல் ஸ்ரீதரன், அமைச்சர் விஜய் ஷா மீது பாரதிய நியாய சன்ஹிதா பிரிவுகள் 196 (குழுக்களுக்கு இடையே பகையை தூண்டுதல்) மற்றும் 152 (இந்திய இறையாண்மை, ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டுக்கு ஆபத்து விளைவிக்கும் செயல்) போன்ற கடுமையான குற்றப் பிரிவுகளின் கீழ் நான்கு மணி நேரத்துக்குள் வழக்கு பதிவு செய்யவேண்டும் என்று டிஐஜிக்கு உத்தரவிட்டார்.

    செய்தி அறிக்கைகளை கவனத்தில் எடுத்துக்கொண்டதாக கூறிய நீதிபதி ஸ்ரீதரன், “‘பஹல்காமில் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளின் சகோதரி கர்னல் சோபியா குரேஷி’ என்ற அமைச்சரின் அறிக்கை, பிரிவினைவாத உணர்வுகளின் நடவடிக்கைகளை ஊக்குவிக்கிறது. இதனால், இந்தியாவின் இறையாண்மை மற்றும் ஒற்றுமைக்கு ஆபத்து ஏற்படுகிறது என்பது முதல் பார்வையிலேயே தெரிகிறது. அமைச்சர் விஜய் ஷாவின் கருத்து மிகவும் ஆபத்தானது. இப்போது அவர்கள் இந்த நாட்டின் பாதுகாப்பு படைகளை நெருங்கியுள்ளனர்” என்று தெரிவித்தார்.

    உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு பின்பு, முதல்வர் அலுவலகத்தைச் சேர்ந்த உயர் அதிகாரி கூறுகையில், “அமைச்சர் விஜய் ஷாவுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கான சாத்தியக்கூறு பற்றி மூத்த பாரதிய ஜனதா கட்சித் தலைவர்களுடன் விவாதம் நடந்து வருகிறது” என்றார்.

    மத்தியப் பிரதேசத்தின் பழங்குடிகள் நலம் மற்றும் போபால் எரிவாயு துயர நிவாரணம் மற்றும் மறுவாழ்வு துறையின் அமைச்சரான விஜய் ஷா தனது பேச்சால் மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார். அவர், பஹல்காம் தாக்குதல் பயங்கவாதிகளுடன் ராணுவ கர்னல் குரேஷியை தொடர்புபடுத்தியுள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன.

    முன்னதாக, மே 12-ம் தேதி பொதுக் கூட்டம் ஒன்றில் பேசிய அமைச்சர் விஜய் ஷா, “அவர்கள் (பயங்கரவாதிகள்) நமது சகோதரிகளின் சிந்தூரை அழித்தனர். அவர்களை அழிக்க நாம் அவர்களின் சகோதரியை அனுப்பி பழிவாங்கினோம். அவர்கள் (பயங்கராவாதிகள்) நமது இந்து சகோதரர்களைக் கொன்றனர். பிரதமர் மோடி, அவர்களின் (பயங்கரவாதிகளின்) சகோதரியை ராணுவ விமானத்தில் அனுப்பி அவர்களின் வீடுகளைத் தாக்கி பதிலடி கொடுத்தார். அவர்கள் (பயங்கரவாதிகள்) நமது சகோதரிகளை விதவைகளாக்கினர். பிரதமர் மோடி, அவர்கள் சமூகத்தைச் சேர்ந்த சகோதரியை அவர்களுக்கு பாடம் கற்பிக்க அனுப்பினார்” என்று சர்ச்சைக்குரிய வகையில் பேசினார்.

    தனது பேச்சில் ராணுவ கர்னல் குரேஷியின் பெயரை அமைச்சர் குறிப்பிடவில்லை என்றாலும், சர்ச்சை வெடித்த பின்பு கொடுத்த விளக்கங்களில் சோபியா குரேஷியின் பெயரைக் குறிப்பிட்டு, தனது அறிக்கை சிதைக்கப்பட்டுள்ளது என்று கூறினார். நாடு முழுவதிலும் உள்ள அரசியல் தலைவர்கள் மற்றும் கட்சிகள் அமைச்சர் விஜய் ஷாவின் கருத்துகளுக்காக அவரைச் சாடியுள்ளனர். மேலும், விஜய் ஷாவை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    தேசியம்

    இஸ்லாம்பூரின் பெயர் ஈஷ்வர்பூர் என மாற்றப்படும்: மகாராஷ்டிரா சட்டப்பேரவையில் அறிவிப்பு

    July 18, 2025
    தேசியம்

    நீதிபதி வர்மா பதவி நீக்க தீர்மானத்தை கொண்டுவருவது அரசு அல்ல: மத்திய அமைச்சர் விளக்கம்

    July 18, 2025
    தேசியம்

    குருகிராம் நில விவகார வழக்கில் ராபர்ட் வதேரா மீது அமலாக்க துறை குற்றப்பத்திரிகை தாக்கல்

    July 18, 2025
    தேசியம்

    “பிஹாரில் 20 லட்சம் பெண்கள் இப்போது லட்சாதிபதிகள்” – பிரதமர் மோடி பெருமிதம்

    July 18, 2025
    தேசியம்

    மதுபானக் கொள்கை முறைகேடு: சத்தீஸ்கர் முன்னாள் முதல்வர் பூபேஷ் பாகேலின் மகன் கைது

    July 18, 2025
    தேசியம்

    நாட்டின் தூய்மையான நகரங்கள் பட்டியல்: 8-வது முறையாக இந்தூர் முதலிடம்

    July 18, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • உங்கள் ஆரோக்கியத்திற்கு அமைதியாக தீங்கு விளைவிக்கும் 5 காபி குடிக்கும் பழக்கம், நிபுணர்கள் கூறுகிறார்கள் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • இஸ்லாம்பூரின் பெயர் ஈஷ்வர்பூர் என மாற்றப்படும்: மகாராஷ்டிரா சட்டப்பேரவையில் அறிவிப்பு
    • அமைதிப் பேச்சுவார்த்தைகள் முடுக்கிவிடப்பட வேண்டும் என்பதில் உக்ரைனுடன் உடன்படுகிறேன் – புதின்
    • ‘நான்கரை ஆண்டுகளில் கிடைக்காத தீர்வு 45 நாட்களில் கிடைக்கும் என்பது நகைச்சுவை’ – டிட்டோ ஜேக் நிர்வாகி பேச்சு
    • வயதானவர்களுக்கு ஆரோக்கியமாகவும் வலுவாகவும் இருக்க சிறந்த 5 வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    Recent Comments

    No comments to show.

    Archives

    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.