Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Monday, June 30
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»வணிகம்»உ.பி.யில் அமைகிறது இந்தியாவின் 6-வது செமிகண்டக்டர் ஆலை: மத்திய அமைச்சரவை ஒப்புதல்
    வணிகம்

    உ.பி.யில் அமைகிறது இந்தியாவின் 6-வது செமிகண்டக்டர் ஆலை: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

    adminBy adminMay 14, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    உ.பி.யில் அமைகிறது இந்தியாவின் 6-வது செமிகண்டக்டர் ஆலை: மத்திய அமைச்சரவை ஒப்புதல்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    புதுடெல்லி: உத்தரப் பிரதேசத்தின் ஜெவாரில் நாட்டின் 6-வது செமிகண்டக்டர் ஆலை அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. ஹெச்சிஎல் மற்றும் ஃபாக்ஸ்கான் கூட்டு முயற்சியுடன் அமைக்கப்பட உள்ள இந்த ஆலை ஜெவார் விமானநிலையத்துக்கு அருகில் அமைய உள்ளது. இது 2027-ல் இருந்து இயங்கத் தொடங்கும்.

    ஹார்ட்வேர் உருவாக்கம் மற்றும் உற்பத்தியில் நீண்ட கால வரலாறு கொண்டது ஹெச்சிஎல் நிறுவனம். ஃபாக்ஸ்கான், சர்வதேச அளவில் மிகப்பெரிய மின்பொருள் உற்பத்தி நிறுவனமாகும். இந்த இரண்டு நிறுவனங்களும் இணைந்து, யமுனா விரைவுச்சாலை தொழில்துறை மேம்பாட்டு ஆணையம் அல்லது YEIDA-வில் உள்ள ஜெவார் விமானநிலைத்துக்கு அருகில் செமிகண்டக்டர் ஆலையை அமைக்கவுள்ளது. இந்த சிப் உற்பத்தி நிறுவனம் சுமார் ரூ.37,000 கோடி முதலீட்டை ஈர்க்கும்.

    நாட்டின் 6-வது செமிகண்டக்டர் ஆலையாக அமையவுள்ள இதற்கான ஒப்புதல் பிரதமர் மோடி தலைமையில் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் வழங்கப்பட்டது.

    கூட்டத்துக்கு பின்பு செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறுகையில், “ஜெவாரில் அமைக்கப்படும் அலகு, மாதத்துக்கு 20,000 வேஃபர்கள் மற்றும் 3.6 கோடி சிப்கள் உற்பத்தி செய்யும் திறன்கொண்டதாக இருக்கும். ஜெவார் ஆலையில் தயாரிக்கப்படும் சிப்கள் மொபைல் போன்கள், லேப்டாப்கள், ஆட்டோ மொபைல்ஸ், கணினிகளில் பயன்படுத்தப்படும்.

    மற்ற ஐந்து செமி கண்டக்டர் ஆலைகளுக்கான பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. அவைகள் இந்த ஆண்டின் இறுதியில் திறக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆறு ஆலைகளுடன் மூலோபாய ரீதியாக செமி கண்டக்டர் தொழில்துறையை வளர்ப்பதற்கான பயணத்தில் இந்தியா முன்னேறி வருகிறது.” என்றார்.

    ஏற்கெனவே, குஜராத் மாநிலத்தில் சனந்த் மற்றும் தோலேரா ஆகிய 2 இடங்களிலும், அசாமில் மோரிகானிலும் என மொத்தம் 3 புதிய செமிகண்டக்டர் ஆலைகள் கட்டப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்தியாவும் செமி கண்டக்டர் துறையும்! இந்தியாவில் செமி கண்டக்டர் தொழில் இன்னும் தொடக்க நிலையிலேயே உள்ளது. இதன் பரந்த திறன்களை பயன்படுத்திக்கொள்ள உள்ளூர் மற்றும் பன்னாட்டு நிறுவனங்கள் விரும்புகின்றன.

    கரோனா பொதுமுடக்க காலத்தில் ஏற்பட்ட சிப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யவும், தேசிய பாதுகாப்பு மற்றும் உள்நாட்டு கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்கவும், செமி கண்டக்டர்களின் உள்நாட்டு உற்பத்தியின் முக்கியத்துவம் உணரப்பட்டது.

    செமிகண்டக்டர் உற்பத்தி பயணத்தில் நாடு முன்னேறிச் செல்லும் போது, அதன் துணைத் தொழில்களும் நாட்டில் அதன் வசதிகளை மேம்படுத்தும் என்பதும் கணிக்கப்பட்டது. அப்லைடு மெட்டிரீயல்ஸ் மற்றும் லாம் ரிசர்ச் ஆகிய இரண்டு மிகப்பெரிய உதிரி பாக உற்பத்தியாளர்கள் தற்போது நாட்டில் கால் பதித்துள்ளனர்.

    இந்தச் சூழலில் ஜெவாரில் அமைக்கப்படும் அலகு, மாதத்துக்கு 20,000 வேஃபர்கள் மற்றும் 3.6 கோடி சிப்கள் உற்பத்தி செய்யும் திறன்கொண்டதாக இருக்கும். ஜெவார் ஆலையில் தயாரிக்கப்படும் சிப்கள் மொபைல் போன்கள், லேப்டாப்கள், ஆட்டோ மொபைல்ஸ், கணினிகளில் பயன்படுத்தப்படும். இது இத்துறையில் தேசம் தன்னிறைவு பெற உதவியாக இருக்கும் என்று நிபுணர்கள் கணிக்கின்றனர்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    வணிகம்

    ரிப்பேர் பார்க்க ஒப்பந்தம் போடவில்லை: வனத்துறை அலுவலகங்களில் பழுதாகி நிற்கும் இ-பைக்குகள்

    June 30, 2025
    வணிகம்

    தங்கம் விலை இன்று பவுனுக்கு ரூ.120 குறைந்தது

    June 30, 2025
    வணிகம்

    இந்தியாவில் பெண் தொழில்முனைவோர் உலக சராசரியைவிட மிகவும் குறைவு

    June 30, 2025
    வணிகம்

    சுந்தரம் பைனான்ஸ் நிறுவன வட்டி விகிதங்கள் மாற்றம்

    June 30, 2025
    வணிகம்

    இந்தியாவின் தடை காரணமாக பாதிப்பு பாகிஸ்தானில் சரக்கு கட்டணம் கடும் உயர்வு

    June 30, 2025
    வணிகம்

    தங்கம் ஒரு பவுன் ரூ.440 குறைந்து ரூ.71,440-க்கு விற்பனை

    June 29, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • விழுப்புரம் திமுக எம்எல்ஏ மீதான பணமோசடி வழக்கை வேறு நீதிமன்றத்துக்கு மாற்றக் கோரிய மனு தள்ளுபடி
    • ரிப்பேர் பார்க்க ஒப்பந்தம் போடவில்லை: வனத்துறை அலுவலகங்களில் பழுதாகி நிற்கும் இ-பைக்குகள்
    • ஷகா அல்லது சங்கு ஷெல் ஏன் இந்து சடங்குகளிலும் பல்வேறு வகையான ஷாங்காக்களிலும் ஊதப்படுகிறது
    • ‘எனக்கும் சிவகுமாருக்கும் இடையே வலுவான பிணைப்பு உள்ளது’ – கர்நாடகா முதல்வர் சித்தராமையா
    • இன்ஸ்டகிராமில் இந்தியர்கள் முன்னிலை

    Recent Comments

    No comments to show.

    Archives

    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.