Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Saturday, July 19
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»தேசியம்»இந்தியா – பாக். போர் நிறுத்த ஒப்பந்தத்தில் அமெரிக்க தலையீடு: மீண்டும் வலியுறுத்திய ட்ரம்ப்
    தேசியம்

    இந்தியா – பாக். போர் நிறுத்த ஒப்பந்தத்தில் அமெரிக்க தலையீடு: மீண்டும் வலியுறுத்திய ட்ரம்ப்

    adminBy adminMay 14, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    இந்தியா – பாக். போர் நிறுத்த ஒப்பந்தத்தில் அமெரிக்க தலையீடு: மீண்டும் வலியுறுத்திய ட்ரம்ப்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சவுதி அரேபியா: இந்தியா – பாகிஸ்தான் போர் நிறுத்த ஒப்பந்தத்தில் தனது தலையீடு இருந்தது என்று மீண்டும் வலியுறுத்திப் பேசியுள்ளார் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப். “நண்பர்களே வாருங்கள் நாம் ஒரு ஒப்பந்தம் செய்துகொள்வோம். கொஞ்சம் வர்த்தகம் செய்வோம். அணு ஆயுதங்களை விற்க வேண்டாம். நீங்கள் உருவாக்கும் அழகான பொருட்களை விற்பனை செய்வோம். இரண்டு நாடுகளிலும் சக்தி வாய்ந்த, வலிமையான, நல்ல தலைவர்கள் உள்ளனர் என்றேன்.” என்று தனது சமரசப் பேச்சு விவரத்தை அவர் பகிர்ந்துள்ளார்.

    சவுதி அரேபியா இளவரசர் முகம்மது பின் சல்மான், டெஸ்லா சிஇஒ எலான் மஸ்க், அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் மார்கோ ரூபியோ ஆகியோர் கலந்து கொண்ட அமெரிக்க சவுதி அரேபிய முதலீட்டாளர்கள் மன்றத்தில் உரையாற்றிய அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறியதாவது: இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் ஒரு சாத்தியமான அணு ஆயுதப்போரை தவிர்த்து அமைதியை நிலைநாட்ட தனது நிர்வாகம் உதவியது. போர் நடந்திருந்தால் லட்சக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டிருக்கலாம்.

    துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் மற்றும் வெளியுறவுச் செயலாளர் ரூபியோ தலையிட்டு நடத்திய பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து இந்தியாவும் பாகிஸ்தானும் உண்மையில் ஒத்துப்போயின. அவர்கள் இணக்கமாக இருக்கிறார்கள் என்று நான் எண்ணுகிறேன். நாம் அவர்களை இன்னும் கொஞ்சம் தூரம் அழைத்துச் செல்லலாம். அவர்கள் இருவரும் இணைந்து வெளியே சென்று இரவு உணவு சாப்பிடவேண்டும். அது நன்றாக இருக்கும் இல்லையா?

    சில நாட்களுக்கு முன்பு இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதற்றத்தைத் தணிக்க எனது நிர்வாகம் ஒரு வெற்றிகரமான முயற்சியை மேற்கொண்டது. அதற்காக நான் பெரும் அளவில் வர்த்தகத்தை பயன்படுத்தினேன். நான் அவர்களிடம் சொன்னேன், “நண்பர்களே வாருங்கள் நாம் ஒரு ஒப்பந்தம் செய்துகொள்வோம். கொஞ்சம் வர்த்தகம் செய்வோம். அணு ஆயுதங்களை விற்க வேண்டாம். நீங்கள் உருவாக்கும் அழகான பொருட்களை விற்பனை செய்வோம். இரண்டு நாடுகளிலும் சக்தி வாய்ந்த, வலிமையான, நல்ல தலைவர்கள் உள்ளனர் என்றேன்.” இவ்வாறு அதிபர் ட்ரம்ப் பேசினார்.

    பஹல்காமில் சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா நடந்திய ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலைத் தொடர்ந்து பாகிஸ்தானும் எதிர்தாக்குதல் நடத்தியது. இதனால், இரண்டு நாடுகளுக்கும் இடையே போர் பதற்றம் ஏற்பட்டது. நான்கு நாட்கள் நடந்த தாக்குதல்களுக்கு பின்பு அமெரிக்கா மத்தியஸ்தம் செய்தது.

    இதனிடையே இந்தியா – பாகிஸ்தான் இடையேயான போர் நிறுத்தத்தில் மூன்றாம் தரப்பின் தலையீடு இல்லை என்றும், அது இரண்டு நாடுகளுக்கு இடையேயான நேரடி பேச்சுவார்த்தையால் ஏற்பட்டது என்று இந்தியா தெரிவித்திருந்தது. இந்தநிலையில் அமெரிக்க அதிபர், இந்தியா – பாகிஸ்தான் போர் நிறுத்த ஒப்பந்தத்தில் தனது தலையீடு இருந்தது என்று மீண்டும் வலியுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    தேசியம்

    வளர்ச்சி அடைந்த பிஹாரை உருவாக்க மத்திய அரசு தீவிரம்: பிரதமர் மோடி உறுதி

    July 19, 2025
    தேசியம்

    ஹைதராபாத் கார் விபத்தில் 5 பேர் உயிரிழப்பு

    July 19, 2025
    தேசியம்

    ‘பாரதத்தின் மண்ணிலும் நீரிலும் இந்துத்துவா ஆழமாக கலந்துள்ளது’- சிவராஜ் சிங் சவுகான் கருத்து

    July 18, 2025
    தேசியம்

    அடுத்த வீரர் உள்நாட்டு விண்கலத்தில் பயணம் செய்வார்: மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் தகவல்

    July 18, 2025
    தேசியம்

    “மோடியின் தலைமை இல்லையெனில் பாஜக 150 இடங்களில் கூட வென்றிருக்காது” – நிஷிகாந்த் துபே

    July 18, 2025
    தேசியம்

    “வளர்ச்சி அடைந்த இந்தியாவுக்கான பயணத்தை இளைஞர்கள் வழிநடத்த வேண்டும்” – பியூஷ் கோயல்

    July 18, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • பாஜகவோடு கூட்டணி வைத்திருக்கும் கட்சியோடு சேரமாட்டோம்: அதிமுக சர்ச்சைக்கு தவெக பதில்
    • புத்த, சமண மதத்தினர் புனித பயணம்: தமிழக அரசு நிதியுதவி பெற விண்ணப்பங்கள் வரவேற்பு
    • நீலகிரி, கோவை உள்ளிட்ட 10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
    • வளர்ச்சி அடைந்த பிஹாரை உருவாக்க மத்திய அரசு தீவிரம்: பிரதமர் மோடி உறுதி
    • பாகிஸ்தானை சேர்ந்த டிஆர்எப் உலகளாவிய தீவிரவாத அமைப்பு – அமெரிக்கா அறிவிப்பு; இந்தியா வரவேற்பு

    Recent Comments

    No comments to show.

    Archives

    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.