Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Friday, July 4
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»கூவாகம் கூத்தாண்டவர் கோயிலில் தாலி கட்டிக்கொண்டு ஆடிப்பாடிய திருநங்கைகள்
    மாநிலம்

    கூவாகம் கூத்தாண்டவர் கோயிலில் தாலி கட்டிக்கொண்டு ஆடிப்பாடிய திருநங்கைகள்

    adminBy adminMay 14, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    கூவாகம் கூத்தாண்டவர் கோயிலில் தாலி கட்டிக்கொண்டு ஆடிப்பாடிய திருநங்கைகள்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    கள்ளக்குறிச்சி: கூவாகம் கூத்தாண்டவர் திருவிழாவில் ஏராளமான திருநங்கைகள் பூசாரி கரங்களால் தாலிக் கட்டிக் கொண்டு, இரவு முழுவதும் ஆடிப்பாடி மகிழ்ந்தனர்.

    கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையை அடுத்த கூவாகம் கிராமத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கூத்தாண்டவர் கோயிலில் சித்திரைத் திருவிழா ஒவ்வோர் ஆண்டும் 18 நாட்கள் விமரிசையாக நடைபெறும். இதில் பல்வேறு இடங்களில் இருந்து வரும் திருநங்கைகள் திரளாக கூத்தாண்டவரை மணவாளனாக ஏற்று, திருமணம் செய்துகொள்கின்றனர்.

    அதன்படி, கூவாகம் கூத்தாண்டவர் கோயிலில் சித்திரைத் திருவிழா ஏப். 19-ம் தேதி தொடங்கியது. கூவாகத்தைச் சுற்றியுள்ள 8 கிராம மக்கள் கூழ் தயாரித்து கோயிலில் படையலிட்டு, பக்தர்களுக்கு வழங்கினர். தினமும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. முக்கிய நிகழ்வான கூத்தாண்டவர் திருக்கண் திறத்தல் நிகழ்ச்சி நேற்று மாலை நடைபெற்றது. இந்நிகழ்வில் பங்கேற்க தமிழகம் மட்டுமின்றி, வெளி மாநிலங்கள் மற்றும் வெளி நாடுகளில் இருந்தும் ஏராளமான திருநங்கைகள் கூவாகத்தில் நேற்று மதியம் முதலே குவியத் தொடங்கினர்.

    திருநங்கைகள் பட்டுப்புடவை அணிந்து, மலர்கள் சூடி, மணப்பெண் கோலத்தில் கோயிலுக்கு வந்தனர். அவர்கள் மஞ்சள் நாணில் தாலி கோர்த்து கோயில் பூசாரியிடம் கொடுத்து, கூத்தாண்டவரை தன் கணவராகப் பாவித்து தாலி கட்டிக் கொண்டனர். பின்னர், கோயிலை விட்டு வெளியே வந்து கும்மியடித்து, ஆடிப்பாடி மகிழந்தனர்.

    விழாவையொட்டி, குடிநீர், குளியலறை, கழிப்பறை, தங்குமிடங்கள் உள்ளிட்ட ஏற்பாடுகளை கள்ளக்குறிச்சி மாவட்ட நிர்வாகம் செய்திருந்தது. சமூக நலத்துறை மூலம் பால்வினைத் தடுப்பு விழிப்புணர்வு அரங்கம் அமைக்கப்பட்டிருந்தது. உளுந்தூர்பேட்டை விழுப்புரத்தில் இருந்து சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன. கள்ளக்குறிச்சி எஸ்.பி. தலைமையில் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    கூத்தாண்டவரை மணம் முடிக்கும் நிகழ்வு நேற்று மாலை தொடங்கி இரவு வரையிலும் கோயில் வளாகத்தில் தொடர்ந்தது. இன்று சித்திரைத் தேரோட்டம், அரவான் களப்பலி காணும் நிகழ்வு, தொடர்ந்து தாலி அறுத்து திருநங்கைகள் அழுகளம் காணும் நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. நாளை விடையாத்தி நிகழ்வு நடைபெறும். வரும் 16-ம் தேதி தருமர் பட்டாபிஷேகத்துடன் 18 நாள் சித்திரைத் திருவிழா நிறைவு பெறுகிறது. ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள், கிராம மக்கள் மற்றும் விழாக் குழுவினர் செய்துள்ளனர்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    “அஜித்குமார் கொலையில் அழுத்தம் கொடுத்த அதிகாரி பெயரை முதல்வர் வெளியிட வேண்டும்” – நயினார் நாகேந்திரன்

    July 4, 2025
    மாநிலம்

    “அதிமுகவுடன் இணைந்தே பாஜக இனி போராட்டங்களை நடத்தும்” – நயினார் நாகேந்திரன்

    July 4, 2025
    மாநிலம்

    உசிலம்பட்டி அருகே அரசு பள்ளி ஆசிரியை பிரம்பால் அடித்ததில் மாணவர்கள் காயம்

    July 4, 2025
    மாநிலம்

    ‘2026 ஜனவரி முதல் மதுரை தோப்பூரில் ‘எய்ம்ஸ்’ மருத்துவக் கல்லூரி செயல்படும்’

    July 4, 2025
    மாநிலம்

    பள்ளி மாணவர்களை நல்வழிப்படுத்துக: ஈரோடு கொலை சம்பவத்தை முன்வைத்து தமாகா கோரிக்கை

    July 4, 2025
    மாநிலம்

    பாஜக, திமுகவுக்கு கண்டனம் முதல் ‘ஜாக்டோ ஜியோ’ ஆதரவு வரை: தவெக செயற்குழுவின் 20 தீர்மானங்கள்

    July 4, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • ஹான்ஸ் ஸிம்மர், ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பிரம்மாண்டமாக உருவாகும் ‘ராமாயணம்’!
    • “அஜித்குமார் கொலையில் அழுத்தம் கொடுத்த அதிகாரி பெயரை முதல்வர் வெளியிட வேண்டும்” – நயினார் நாகேந்திரன்
    • ஜிம்மிற்கு நேரம் இல்லையா? இந்த எளிய உடற்பயிற்சி உங்கள் இறுதி வயதான எதிர்ப்பு பிழைத்திருத்தம் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • இங்கிலாந்தை காத்த ஜேமி ஸ்மித், ஹாரி புரூக்: 350+ ரன்களை கடந்தது | ENG vs IND 2-வது டெஸ்ட்
    • “அதிமுகவுடன் இணைந்தே பாஜக இனி போராட்டங்களை நடத்தும்” – நயினார் நாகேந்திரன்

    Recent Comments

    No comments to show.

    Archives

    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.