Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Monday, July 21
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»100 வார்டுகளில் மொத்தம் 38,348 தெருநாய்கள் தானா? – மதுரை மாநகராட்சி சர்வே ‘சர்ச்சை’ 
    மாநிலம்

    100 வார்டுகளில் மொத்தம் 38,348 தெருநாய்கள் தானா? – மதுரை மாநகராட்சி சர்வே ‘சர்ச்சை’ 

    adminBy adminMay 13, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    100 வார்டுகளில் மொத்தம் 38,348 தெருநாய்கள் தானா? – மதுரை மாநகராட்சி சர்வே ‘சர்ச்சை’ 
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    மதுரை: மதுரை மாநராட்சியில் கடந்த 2020-ம் ஆண்டில் 53,826 தெருநாய்கள் இருந்த நிலையில் தற்போது புதிதாக நகர்நலப் பிரிவு சார்பில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில் 100 வார்டுகளிலும் சேர்த்து மொத்தமே 38,348 தெருநாய்கள் இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. 5 ஆண்டுகளில் எண்ணிக்கை குறைந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளதால் இந்த கணக்கெடுப்பு குறித்து சர்ச்சையும், கேள்விகளும் எழுந்துள்ளன.

    மதுரை மாநகராட்சியில் 100 வார்டுகளில் பொதுமக்களை அச்சுறுத்தும் தெருநாய்களை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கை எடுக்கப்படுகிறது. தெருநாய்களால் விபத்துகள், போக்குவரத்து இடையூறு, சுகாதார சீர்கேடுகள் ஏற்படுவதாக மாநகராட்சி நகர்நல துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். அதனால் 100 வார்டுகளில் சுற்றித் திரியும் தெருநாய்களின் எண்ணிக்கையை கண்டறிய மாநகராட்சியில் தனியார் நிறுவனம், விலங்குகள் நலத்தொண்டு நிறுவனம் ஆகியவற்றுடன் இணைந்து மதுரை மாநகராட்சி நகர் நலத்துறை, கடந்த மார்ச் 17-ம் தேதி முதல் 23 வரை தெருநாய்கள் கணக்கெடுப்பு மேற்கொண்டது.

    இந்த சர்வே முடிவு அடிப்படையில் மாநகராட்சி 100 வார்டுளில் மொத்தமே 38,348 தெருநாய்கள் மட்டுமே இருப்பதாக நகநகர்நலத் துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. மாநகராட்சியில் திரும்பிய பக்கமெல்லாம் கூட்டம் கூட்டமாக தெருநாய்கள் சுற்றி திரியும் நிலையில் அதனை கட்டுப்படுத்த மண்டலத் தலைவர்கள், கவுன்சிலர்கள் ஒவ்வொரு கூட்டத்திலும் நகர்நலத் துறை அதிகாரியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்படியிருந்தும் தெருநாய்கள் எண்ணிக்கையை மாநகராட்சியால் கட்டுப்படுத்த முடியவில்லை.

    இந்த சூழ்நிலையில் கணக்கெடுப்பில் தெருநாய்கள் எண்ணிக்கை குறைத்து காட்டப்படுவதாக விலங்குகள் நல ஆர்வலர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளதால் சர்ச்சை எழுந்துள்ளது. கடந்த 2020-ம் ஆண்டில் தெருநாய்கள் எண்ணிக்கை 53,826 தெருநாய்கள் இருந்ததாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2012-ம் ஆண்டு சர்வேயில் 47,573 தெருநாய்கள் இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

    இதுகுறித்து மாநகராட்சி நகர்நல அலுவலர் இந்திராவிடம் கேட்டபோது, “முதன்முறையாக விஞ்ஞான முறையில் இந்த கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. தெருநாய்கள் 100-வது வார்டில் அதிகமாகவும், 49,80 ஆகிய வார்டுகளில் குறைந்த எண்ணிக்கைலும் இருப்பதாகவும் கண்டறியப்பட்டுள்ளது. கண்டறியப்பட்ட நாய்களில் 65 சதவீதம் ஆண் நாய்களும், 35 சதவீதம் பெண் நாய்களும் உள்ளதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.

    மொத்த நாய்களில் 83 சதவீதம் ஆரோக்கியமாகவும், 17 சதவீதம் நாய்கள் அடிபட்டு, காயம், தோல் நோய்கள் மற்றும் பிற உடல் உபாதைகளுடன் உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்த கணக்கெடுப்பை அடிப்படையாக கொண்டு எதிர்காலத்தில் தெருநாய்கள் கருத்தடை பணிகளை தீவிரப்படுத்த மாநகராட்சி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது” என்றார்.

    நன்றி மறவேல் சமூக நாய்கள் நல ஆர்வலர் மாரிகுமார் பரமசிவம் கூறுகையில், “மக்களையும், நீதிமன்றத்தையும் ஏமாற்றுவதற்காகவே இந்த கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது. இப்படியொரு கணக்கெடுப்பு எடுக்கப்பட்டதே விலங்குகள் நல ஆர்வலர்களுக்கு தெரியவில்லை. அவர்களையெல்லாம் தவிர்த்துவிட்டு எப்படி கணக்கெடுப்பு நடத்தினார்கள்? என்பது தெரியவில்லை. அதனால், இந்த எண்ணிக்கை சரியானதா? என்ற குழப்பமும், கேள்விகளும் எழுந்துள்ளன” என்றார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    இலங்கை தமிழர்களின் திருமணங்களை பதிய ஜூலை 25, 26-ல் பதிவு துறை சிறப்பு முகாம்

    July 21, 2025
    மாநிலம்

    பழனிசாமியின் சுற்றுப்பயணத்தை தமிழக மக்கள் ஏற்க மாட்டார்கள்: செல்வப்பெருந்தகை திட்டவட்டம்

    July 21, 2025
    மாநிலம்

    பஞ்சாலை தொழிற்சங்கத்தின் சொத்துகளை எந்தக் கட்சியும் கட்டுப்படுத்த முடியாது: வைகோவுக்கு திருப்பூர் துரைசாமி பதில்

    July 21, 2025
    மாநிலம்

    பழனிசாமி பேச்சில் உள்நோக்கம் எதுவுமில்லை: நயினார் நாகேந்திரன் கருத்து

    July 21, 2025
    மாநிலம்

    முதல்வர் ஸ்டாலினை சந்தித்தது ஏன்? – சீமான் விளக்கம்

    July 21, 2025
    மாநிலம்

    மார்க்சிஸ்ட் கட்சி இல்லாமல் மதச்சார்பின்மை காக்க முடியுமா? – ராகுல் காந்திக்கு சண்முகம் கண்டனம்

    July 21, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • நீதித்துறை முடிவெடுப்​பதில் ஏஐ பயன்படுத்த தடை: கேரள உயர் நீதிமன்றம் உத்தரவு
    • எஸ்.ஜே.சூர்யாவின் ‘கில்லரு’க்கு ஜெர்மனியில் இருந்து வந்த கார்
    • இலங்கை தமிழர்களின் திருமணங்களை பதிய ஜூலை 25, 26-ல் பதிவு துறை சிறப்பு முகாம்
    • கருப்பு தேயிலை ஆரோக்கிய நன்மைகள்: ஒவ்வொரு நாளும் ஒரு கப் தேநீர் மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயத்தைக் குறைக்கும் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • நட்பாக பழக கட்டாயப்படுத்துவது லவ் ஜிகாத்தில் ஒன்று: ஹரியானா நீதி​மன்றம் தீர்ப்பு

    Recent Comments

    No comments to show.

    Archives

    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.