Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Monday, July 21
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»கல்வி»பொறியியல் படிப்புக்கான வரவேற்பு குறையாதது ஏன்? – ஒரு விரைவுப் பார்வை
    கல்வி

    பொறியியல் படிப்புக்கான வரவேற்பு குறையாதது ஏன்? – ஒரு விரைவுப் பார்வை

    adminBy adminMay 13, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    பொறியியல் படிப்புக்கான வரவேற்பு குறையாதது ஏன்? – ஒரு விரைவுப் பார்வை
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    உயர் கல்வியாக பொறியியல் படிக்கலாமா, படித்தால் வேலை கிடைக்குமா? – பிளஸ் 2 படிக்கும் மற்றும் படித்து முடித்து உயர் கல்வியை தேடும் மாணவர்களை கொண்ட குடும்பங்கள் அனைத்திலும் இந்த பேச்சு தான் ஓடிக்கொண்டிருக்கும்.

    தமிழகத்தில் பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வு ஒவ்வொரு ஆண்டும் ஏராளமான இடங்களுக்கு நடத்தப் பட்டு வருகின்றன. அதேசமயம், ஆண்டுதோறும் பல்வேறு பொறியியல் கல்லூரிகள் மூடுவிழா கண்டு வருகின்றன. மேலும், பல கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்தாகின்றன. இவற்றின் மத்தியில் இஞ்சினியரிங் படித்தால் வேலை கிடைக்குமா என்ற கிலியும் அதிகரித்து வருகிறது. நகைச்சுவை துணுக்குகள் முதல் திரைப்படங்கள் வரை பொறியியல் படிப்புக்கு எதிரான கிண்டல்கள் மற்றும் சீண்டல்களில் நிதர்சனமும் நிறைந்திருக்கிறது.

    இது தொடர்பாக கல்வியாளர்கள் கூறியது: பொறியியல் படிப்பில் 50-க்கும் மேற்பட்ட துறைகள் உள்ளன. ஒரு காலத்தில் மெக்கானிக்கல், எலெக்ட்ரிக்கல், சிவில் போன்ற பாரம்பரியப் பொறியியல் படிப்புகளை எடுத்து படிக்க மாணவர்கள் ஆர்வம் காட்டினர். ஆனால், கணினி துறை சார்ந்த வேலை வாய்ப்புகள் கடந்த 20 ஆண்டுகளில் பெருகிய நிலையில், அந்தப் படிப்புகளில் மாணவர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

    பொறியியல் படிப்புக்கான வரவேற்பு மாணவ, மாணவிகளிடம் குறையவில்லை என்பதை ஒவ்வொரு ஆண்டும் நாம் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறோம். ஆண்டுதோறும் பல லட்சம் பொறியியல் பட்டதாரி கள் வேலை வாய்ப்பு சந்தையில் ஐக்கியமாகிறார்கள். ஏற்கெனவே உரிய வேலையின்றி காத்திருப்போரு டன் அவர்கள் போட்டியிட்டாக வேண்டும்.

    நாளுக்கு நாள் நவீனமடைந்து வரும் பொறியியல் துறையில், ஓரிரு ஆண்டுகள் தாமதிப்பதும் பட்டதாரிகளி ன் திறன்களில் பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்பாகும். வேலை கொடுப்போரை தயங்கச் செய்யும். எனினும், பொறியியல் படிப்பில் சேர மாணவர்கள் குவியக் காரணம், பொறியியல் என்பது எவர்க்ரீன் துறையாக நீடிப்பதுதான். பொறியியல் படிப்புக்கும், வேலை வாய்ப்புக்கும் என்றுமே மவுசு குறையாது.

    அதிலும் இந்தியா போன்ற பொருளாதாரம், உள்கட்டமைப்பு, அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறைகளில் அசுரப் பாய்ச்சல் எடுக்கும் தேசத்தில் பொறியியல் பட்டதாரிகளுக்கான தேவை தொடரவே செய்யும். எனவே, பொறியியல் படிக்கலாமா, படித்தால் வேலை கிடைக்குமா என்பதைவிட, எந்த துறையில் படிக்கலாம், எங்கே படிக்கலாம் என்பதைப் பொறுத்தே வேலைவாய்ப்புகள் அமைய வாய்ப்பாகின்றன.

    பொறியியல் கல்லூரிக்கான அடிப்படை வசதி ஏதுமற்ற, உரிய பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் இல்லாத, தனியார் கல்லூரி ஒன்றில் சேரும் மாணவரு க்கு படிப்பை முடிப்பதே பெரும்பாடாகி விடும். சிறந்த கல்லூரியில் படிப்பை முடித்த பட்டதாரியுடன் அவர்களால் வேலை வாய்ப்பு சந்தையில் மோதுவதும் பெரும் சவாலாகும். இதனால் பெயரளவில் இஞ்ஜினியரிங் பட்டத்தோடு முடங்கவோ, படித்த படிப்புக்கு சற்றும் பொருந்தாத பணியி ல் எதிர்காலத்தை பணயம் வைக்கவோ அவர்கள் தலைப்படுகின்றனர்.

    இதர புறக்காரணிகளை விட, உயர் கல்வியில் சேர விரும்பும் மாணவருக்கு, பொறியியல் படிப்பில் இயல்பாகவே நாட்டம் உள்ளதா என்பதும் இங்கே முக்கியமானது. பள்ளிப் படிப்பில், கணக்குப் பாடத்தில் ஈடுபாடு கொண்டிருப்பது மட்டுமே, உயர் கல்வியாக பொறியியலை தீர்மானிக்க போதுமானதல்ல. பொறியியலிலும், அதன் குறிப்பிட்ட துறையில் தன்னிச்சையாய் ஆர்வம் கொண்டவர்கள், பொறியியல் உயர்கல்வியில் ஜொலிப்பது இயல்பாக நடந்து விடும்.

    எனவே, பொறியியல் படிப்பில் பிள்ளைகளை சேர்க்க விரும்பும் பெற்றோர், சிறந்த கல்லூரி மற்றும் சிறப்பான பாடப்பிரிவு ஆகியவற்றை தெரிவு செய்வதற்கு இணையாக, கல்லூரியில் சேரவிருக்கும் மாணவரின் உள்ளக்கிடக்கை என்ன என்பதையும் அறிந்து கொண்டு செயல்படுவது நல்லது. இவ்வாறு அவர்கள் கூறினர்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    கல்வி

    டிஎன்பிஎஸ்சி குரூப்-1 முதன்மை தேர்வுக்கு ஜிடிஎன் அகாடமி சார்பில் இலவச உணவு, உறைவிட வசதியுடன் 3 மாதங்கள் பயிற்சி

    July 21, 2025
    கல்வி

    தமிழக அரசின் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது: ஆசிரியர்கள் ஆக.3-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்

    July 21, 2025
    கல்வி

    10-ம் வகுப்பு சான்றிதழில் திருத்தமா? – உரிய ஆவணங்களை இணைக்க தேர்வு துறை அறிவுறுத்தல்

    July 21, 2025
    கல்வி

    கால்நடை மருத்துவ கலந்தாய்வு நாளை தொடக்கம்!

    July 20, 2025
    கல்வி

    பொறியியல் முதல் சுற்று கலந்தாய்வில் 30,552 மாணவர்களுக்கு ஒதுக்கீட்டு ஆணை

    July 20, 2025
    கல்வி

    அரசு பள்ளிகளில் ஜூலை 25-ல் மேலாண்மை குழு கூட்டம்: பள்ளிக்கல்வி இயக்குநரகம் உத்தரவு

    July 19, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • ஆகஸ்ட் மாதத்துக்குள் ஏசி மயமாகிறது புதுச்சேரி மணக்குள விநாயகர் கோயில்!
    • “மார்க்சிஸ்ட் கட்சிக்கு இளைஞர்களை ஈர்த்தவர் அச்சுதானந்தன்” – முத்தரசன் புகழஞ்சலி
    • ஆப்டிகல் மாயை: வெறும் 15 வினாடிகளுக்குள் படத்தில் மறைக்கப்பட்ட குதிரையைக் கண்டறியவும்! – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • பாஜக செய்வது மொழி பயங்கரவாதம்: மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு
    • 50 பதக்கங்கள் பெற்ற தமிழக காவல்துறை அணியை நேரில் அழைத்து பாராட்டிய டிஜிபி சங்கர் ஜிவால்

    Recent Comments

    No comments to show.

    Archives

    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.