Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Saturday, September 13
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»பொள்ளாச்சி பாலியல் வழக்கு குற்றவாளிகள் 9 பேருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை விதிப்பு
    மாநிலம்

    பொள்ளாச்சி பாலியல் வழக்கு குற்றவாளிகள் 9 பேருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை விதிப்பு

    adminBy adminMay 13, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    பொள்ளாச்சி பாலியல் வழக்கு குற்றவாளிகள் 9 பேருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை விதிப்பு
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    கோவை: பொள்ளாச்சி பாலியல் வழக்கில் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்ட 9 பேருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து கோவை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. மேலும், பாதிக்கப்பட்ட 8 பெண்களுக்கும் ஒட்டுமொத்தமாக ரூ.85 லட்சம் இழப்பீடு வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

    இந்நிலையில், குற்றவாளிகள் 30 நாட்களுக்குள் மேல் முறையீட்டுக்குச் செல்லும் வாய்ப்பு அவர்களுக்கு உள்ளது என்று அரசுத் தரப்பு வழக்கறிஞர் சுரேந்திரமோகன் தெரிவித்தார்.

    வழக்கும், தீர்ப்பும்: கோவையை அடுத்த பொள்ளாச்சியில் இளம் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் துன்புறுத்தல் செய்த சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட இளம்பெண் ஒருவர் கடந்த 2019 பிப்ரவரி மாதம் பொள்ளாச்சி அனைத்து மகளிர் காவல் துறையில் புகார் அளித்தார்.

    புகாரின் பேரில் சபரிராஜன், திருநாவுக்கரசு, சதீஷ், வசந்தகுமார், மணிவண்ணன், பாபு, ஹேரன்பால், அருளானந்தம் மற்றும் அருண்குமார் ஆகிய 9 பேர் கைது செய்யப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

    இந்த வழக்கில் 48 சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டது. சுமார் 200-க்கும் மேற்பட்ட ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டன. வழக்கில் லேப்டாப், செல்போன், மெமரிகார்டு, கார் உள்ளிட்ட 30 எலக்ட்ரானிக்ஸ் ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. குற்றப்பத்திரிகை 390 பக்கங்கள் என வழக்கு விசாரணை ஆவணங்கள் மொத்தம் 1,500 பக்கங்கள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன.

    இந்திய தண்டனை சட்ட பிரிவில் 120பி, 366, 342, 354 (ஏ), 354 (பி), 376 (டி), 376 (2) (என்), 509 மற்றும் தகவல் தொழில்நுட்ப சட்டம், தமிழ்நாடு பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் சட்ட பிரிவு 4 ஆகிய பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அரசு தரப்பில் சிபிஐ சிறப்பு வழக்கறிஞர் சுரேந்திரமோகன், எதிர்தரப்பில் வழக்கறிஞர் பாண்டிராஜ் ஆகியோர் ஆஜராகினர்.

    அண்மையில் கைதான 9 பேரும் கோவை மகளிர் நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்பட்டு ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களிடம் நீதிபதி நந்தினிதேவி, சாட்சி விசாரணை குறித்து தனித்தனியாக சுமார் 50 கேள்விகளை கேட்டார்.

    தொடர்ந்து எதிர்தரப்பு சாட்சி விசாரணைக்காக பொள்ளாச்சி நகர சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் பொள்ளாச்சி அரசு மருத்துவமனை இருப்பிட மருத்துவரிடம் விசாரணை நடைபெற்றது. வழக்கில் அரசு மற்றும் எதிர்தரப்பு விசாரணை முடிவடைந்த நிலையில், வழக்கின் தீர்ப்பு மே 13-ம் தேதி வழங்கப்படும் என மகளிர் நீதிமன்றம் அறிவித்தது.

    9 பேருக்கும் சாகும் வரை ஆயுள்: அதன்படி, பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைதான 9 பேரும் குற்றவாளிகள் என்று கோவை மகளிர் நீதிமன்ற நீதிபதி நந்தினிதேவி இன்று (மே.13) தீர்ப்பு வழங்கினார். 9 பேருக்குமான தண்டனை விவரம் மதியம் அறிவிக்கப்படும் என்றார். அதன்படி பகல் 12.50 மணியளவில் தண்டனை விவரம் வெளியானது.

    அதன்படி, பொள்ளாச்சி பாலியல் வழக்கில் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்ட 9 பேருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து கோவை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. மேலும், பாதிக்கப்பட்ட 8 பெண்களுக்கும் ஒட்டுமொத்தமாக ரூ.85 லட்சம் இழப்பீடு வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    தூய்மை பணியாளர்களுக்கு இலவச உணவு வழங்க ரூ.150 கோடி ஒதுக்கீடு: டெண்டர் கோரியது மாநகராட்சி

    September 13, 2025
    மாநிலம்

    மாநிலங்களுக்கு முழு நிதி சுயாட்சி தேவை: காமன்வெல்த் மாநாட்டில் பேரவை தலைவர் அப்பாவு வலியுறுத்தல்

    September 13, 2025
    மாநிலம்

    “பெரியார், காமராஜர் பற்றி விஜய்க்கு 10 நிமிடம் பேசத் தெரியுமா?” – சீமான்

    September 13, 2025
    மாநிலம்

    திருச்சி வந்தடைந்த விஜய்: தொண்டர்கள் குவிந்ததால் பிரச்சார இடத்தை அடைவதில் தாமதம்

    September 13, 2025
    மாநிலம்

    சீ​தா​ராம் யெச்​சூரி​யின் முதலா​மாண்டு நினைவு தினம்: மார்க்​சிஸ்ட் கட்​சி​யினர் உடல் தானம் 

    September 13, 2025
    மாநிலம்

    ஐ.டி. துறையில் உலக அளவில் தமிழர்களின் பங்களிப்பு அதிகரிப்பு: அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பெருமிதம்

    September 13, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • எப்போதும் வலியுறுத்தப்பட்டதா? உயர் கார்டிசோல் அமைதியாக மூளை செல்களை ‘கொன்றுவிடுகிறது’, மேலும் நினைவகத்தை கூட பாதிக்கக்கூடும் என்று ஆராய்ச்சி கூறுகிறது – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • ட்ரம்பின் வரிவிதிப்பால் இந்தியாவுக்கு பாதிப்பு: காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் குற்றச்சாட்டு
    • தூய்மை பணியாளர்களுக்கு இலவச உணவு வழங்க ரூ.150 கோடி ஒதுக்கீடு: டெண்டர் கோரியது மாநகராட்சி
    • NYC காலாவில் $ 3M வைர நெக்லஸ் மற்றும் ஒளிரும் கவுனில் லாரன் சான்செஸ்-பெசோஸ் கிளிட்டர்ஸ் | – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • ‘இது வெறும் ரயில் பாதை இணைப்பு மட்டுமல்ல; மாற்றத்துக்கான உயிர்நாடி’ – பிரதமர் மோடி @ மிசோரம்

    Recent Comments

    No comments to show.

    Archives

    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.