Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Monday, July 21
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»தமிழகத்தில் 12 மாவட்டங்களில் சமுதாய அளவிலான புற்றுநோய் கண்டறியும் திட்டம் தொடங்கி வைப்பு
    மாநிலம்

    தமிழகத்தில் 12 மாவட்டங்களில் சமுதாய அளவிலான புற்றுநோய் கண்டறியும் திட்டம் தொடங்கி வைப்பு

    adminBy adminMay 12, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    தமிழகத்தில் 12 மாவட்டங்களில் சமுதாய அளவிலான புற்றுநோய் கண்டறியும் திட்டம் தொடங்கி வைப்பு
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    திருவள்ளூர்: மாநில அளவில் 12 மாவட்டங்களில் சமுதாய அளவிலான புற்றுநோய் கண்டறியும் திட்ட விரிவாக்கத்தை திருவள்ளூர் அருகே திருப்பாச்சூரில் சுகாதார துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். “ஆரம்பகட்டத்திலேயே, புற்றுநோயை கண்டறிந்து தடுக்கும் வகையில் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள வேண்டும்,” என்று அமைச்சர் பொதுமக்களைக் கேட்டுக் கொண்டார்.

    திருவள்ளூர் அருகே திருப்பாச்சூர் துணை சுகாதாரம் நிலையத்தில், மாநில அளவில் 12 மாவட்டங்களில் சமுதாய அளவிலான புற்றுநோய் கண்டறியும் திட்ட விரிவாக்கம் தொடக்க விழா இன்று (மே 12) காலை நடைபெற்றது. திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பிரதாப் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் சுகாதார துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று சமுதாய அளவிலான புற்று நோய் கண்டறியும் திட்ட விரிவாக்கத்தை தொடங்கி வைத்தார். தொடர்ந்து, அவர் நோயாளிகளிடம் நோய் பாதிப்பு குறித்து கேட்டறிந்தார்.

    பின்னர் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசியதாவது: தற்போதைய நிலையில் பொதுமக்களிடையே புற்றுநோய் அதிகரித்து வருகிறது. மாநில அளவில் ஏற்கெனவே ஈரோடு, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்களில் 20 லட்சம் பேருக்கு புற்று நோய் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் 15.48 லட்சம் பேர் பரிசோதனை செய்தனர். அதில் 351 பேருக்கு புற்றுநோய் உள்ளது கண்டறியப்பட்டது. அவர்கள் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இந்நிலையில் ரூ.27 கோடி ஒதுக்கீடு செய்து மாநில அளவில் கருர், திருப்பூர், வேலூர், தேனி உள்ளிட்ட 12 மாவட்டங்களில் வாய்ப் புற்றுநோய், கர்ப்பப்பை வாய் புற்றுநோய், மார்பக புற்றுநோய்களை கண்டறியும் திட்ட விரிவாக்கம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. எனவே ஆரம்பத்திலேயே புற்றுநோயை கண்டறிந்து தடுக்கும் வகையில் பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இதற்கு ஒவ்வொரு குடும்பமும் ஒத்துழைக்க வேண்டும். தமிழகத்தில் 14 வயதுக்குட்பட்ட பெண்களுக்கு கர்ப்ப வாய் புற்றுநோய் தடுப்பூசி செலுத்தப்பட உள்ளன,” என்று அவர் கூறினார்.

    தொடர்ந்து அமைச்சர் மா.சுப்பிரமணியன், உலக செவிலியர் தினத்தை கொண்டாடும் வகையில் நிகழ்ச்சியில் பங்கேற்ற செவிலியர்கள் உடன் கேக் வெட்டி இனிப்புகள் வழங்கினார். இந்நிகழ்வுகளில், சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் சா.மு.நாசர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    திமுகவின் ‘ஓரணியில் தமிழ்நாடு’ உறுப்பினர் சேர்க்கையில் ஓடிபி பெற ஐகோர்ட் மதுரை அமர்வு தடை

    July 21, 2025
    மாநிலம்

    ‘இதுவே கடைசி வாய்ப்பு; வன்னியர்களுக்கு உள் இடஒதுக்கீட்டை உடனே வழங்குக’ – அன்புமணி

    July 21, 2025
    மாநிலம்

    கிட்னியை விற்பனை செய்தவர் வெளியிட்ட ஆடியோ வைரல் – நாமக்கல் சுகாதாரத் துறையினர் ஆய்வு

    July 21, 2025
    மாநிலம்

    ரஷ்யாவில் ஸ்ரீமுஷ்ணம் மருத்துவ மாணவரை கைது செய்து போருக்கு அனுப்ப திட்டம்: பெற்றோர் கூறுவது என்ன?

    July 21, 2025
    மாநிலம்

    தமிழகத்தில் மட்டும்தான் இந்த நிலை; எம்.பி.க்களுக்கு அலுவலகம் கிடைக்காதா? – துரை.ரவிக்குமார் ஆதங்கம்

    July 21, 2025
    மாநிலம்

    அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்தது ஏன்? – அன்வர் ராஜா பேட்டி

    July 21, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • மஞ்சள் காமாலை காரணங்கள்: ஹெபடைடிஸ் ஒரு வழக்குகள் அதிகரித்து வருகின்றன: மஞ்சள் காமாலை நடப்பதற்கான 5 காரணங்கள் மற்றும் பாதுகாப்பாக இருப்பது எப்படி
    • திமுகவின் ‘ஓரணியில் தமிழ்நாடு’ உறுப்பினர் சேர்க்கையில் ஓடிபி பெற ஐகோர்ட் மதுரை அமர்வு தடை
    • உங்கள் பூனை நீரிழப்பு செய்யப்பட்டதா என்று எப்படி சொல்வது: 5 எச்சரிக்கை அறிகுறிகள் மற்றும் அதை எவ்வாறு சிகிச்சையளிப்பது | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • சூலக்கல் மாரியம்மன் | ஆடி மாதமும் அம்மன் திருவருளும்
    • ‘இதுவே கடைசி வாய்ப்பு; வன்னியர்களுக்கு உள் இடஒதுக்கீட்டை உடனே வழங்குக’ – அன்புமணி

    Recent Comments

    No comments to show.

    Archives

    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.