Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Tuesday, July 1
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»விளையாட்டு»எஞ்சியுள்ள போட்டிகளை நடத்த ஐபிஎல் ஆணையம் தீவிரம்: மத்திய அரசின் முடிவுக்காக காத்திருக்கும் பிசிசிஐ
    விளையாட்டு

    எஞ்சியுள்ள போட்டிகளை நடத்த ஐபிஎல் ஆணையம் தீவிரம்: மத்திய அரசின் முடிவுக்காக காத்திருக்கும் பிசிசிஐ

    adminBy adminMay 12, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    எஞ்சியுள்ள போட்டிகளை நடத்த ஐபிஎல் ஆணையம் தீவிரம்: மத்திய அரசின் முடிவுக்காக காத்திருக்கும் பிசிசிஐ
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    மும்பை: எஞ்​சி​யுள்ள போட்​டிகளை நடத்​து​வதற்கு ஐபிஎல் ஆணை​யம் தீவிர​மாக உள்​ளது. போட்​டிகளை நடத்​து​வது தொடர்​பாக மத்​திய அரசு முடிவுக்​காக தற்​போது இந்​திய கிரிக்​கெட் கட்​டுப்​பாட்டு வாரி​யம் (பிசிசிஐ) காத்​திருக்​கிறது.

    இந்​தி​யா, பாகிஸ்​தான் இடையே போர் பதற்​றம் நில​வியதை தொடர்ந்து கடந்த 8-ம் தேதி 18-வது ஐபிஎல் தொடர் பாதி​யிலேயே நிறுத்​தப்​பட்​டது. அன்​றைய தினம் பஞ்​சாப் – டெல்லி அணி​கள் இடையி​லான ஆட்​டம் தரம்​சாலா​வில் நடை​பெற்று கொண்​டிருந்​தது. 10.1 ஓவர்​களில் இந்த ஆட்​டம் நிறுத்​தப்​பட்டு மைதானத்​தில் இருந்த ரசிகர்​கள் பாது​காப்​பாக வெளி​யேற்​றப்​பட்​டனர்.

    இதைத் தொடர்ந்து ஐபிஎல் தொடர் ஒரு​வார காலத்​துக்கு நிறுத்தி வைக்​கப்​படு​வ​தாக பிசிசிஐ அறி​வித்​தது. இதையடுத்து ஐபிஎல் தொடரில் அனைத்து அணி​களி​லும் இடம் பெற்​றிருந்த வெளி​நாட்டு வீரர்​களை பாது​காப்​பாக அவர்​களது தாயகத்​துக்கு அனுப்பி வைக்​கும் பணி​கள் மேற்​கொள்​ளப்​பட்​டன. மேலும் இந்​திய வீரர்​கள் தங்​களது நகரங்​களுக்கு சென்​றடைய​வும் நடவடிக்கை எடுக்​கப்​பட்​டது.

    இந்​நிலை​யில் பெரும்​பாலான வெளி​நாட்டு வீரர்​கள் தாயகம் திரும்​பி​யுள்​ளனர். இதனிடையே, நேற்று முன்​தினம் மாலை இந்​தி​யா,​பாகிஸ்​தான் இடையே போர் நிறுத்த அறி​விப்பு வெளி​யானது. இதனால் எல்​லைப் பகு​தி​யில் இயல்பு நிலை விரை​வில் திரும்​பும் என எதிர்​பார்க்​கப்​படு​கிறது.

    இதைத் தொடர்ந்து எஞ்​சி​யுள்ள 18 போட்​டிகளை நடத்​து​வதற்கு ஐபிஎல் ஆணை​யம் நடவடிக்கை எடுத்து வரு​கிறது. போட்​டிகளை நடத்​து​வது தொடர்​பாக மத்​திய அரசின் ஒப்​புதலுக்​காக பிசிசிஐ தற்​போது காத்​திருக்​கிறது.

    அநேக​மாக வரும் 15 அல்​லது 16-ம் தேதி போட்​டிகள் மீண்​டும் தொடங்க வாய்ப்​புள்​ளது. ஒரே நாளில் இரண்​டு, இரண்டு ஆட்​டங்​களாக நடத்​த​வும் முடிவு செய்​யப்​பட்​டுள்​ளது. மேலும் மே 30-ம் தேதி இறு​திப் போட்​டியை நடத்​த​வும் பிசிசிஐ முடிவு செய்​துள்​ள​தாகத் தெரி​கிறது.

    இதுகுறித்து பிசிசிஐ செயலர் தேவஜித் சைக்​கியா கூறும்​போது, “ஒரு வாரத்​துக்கு போட்​டிகளை நாங்​கள் தள்​ளி​வைத்​தோம். அந்​தக் காலக்​கெடு முடிவதற்கு இன்​னும் 4 நாட்​கள் உள்​ளன.

    போர்ப்​ப​தற்​றம் தொடர்​பாக தற்​போது நடந்து வரும் சூழ்​நிலையை பிசிசிஐ உன்​னிப்​பாக கவனித்து வரு​கிறது. இதையடுத்து ஐபிஎல் பங்​கு​தா​ரர்​கள், அணி நிர்​வாகங்​கள், மத்​திய அரசின் உயர் அதி​காரி​களு​டன் பேச்​சு​வார்த்தை நடத்​திய பின்​னர் போட்​டியை மீண்​டும் தொடங்​கு​வது தொடர்​பாக அறிவிக்​கப்​படும். ஒரே நாளில் 2 ஆட்​டங்​களை நடத்​த​வும் முடிவு செய்​துள்​ளோம்.

    இது​போன்ற சூழ்​நிலைகளில் மத்​திய அரசின் ஒப்​புதலைப் பெறு​வது அவசி​ய​மாகும். விரை​வில் போட்​டி தொடங்​கவுள்​ள தேதியை பிசிசிஐ அறிவிக்​கும்​” என்​றார்​.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    விளையாட்டு

    ‘என் ஊரில் ஆடுகளம் கூட இல்லை!’ – இந்திய கால்பந்து அணியில் அசத்தும் தமிழக வீராங்கனை பிரியதர்ஷினி

    June 30, 2025
    விளையாட்டு

    பயிற்சியாளர்களின் கைப்பாவையா ஷுப்மன் கில்? – ‘கேப்டன்சி’ ஒரு பார்வை

    June 30, 2025
    விளையாட்டு

    ‘இந்திய அணிக்கு ஃபீல்டிங் சரியில்லாதது பெரிய பிரச்சினை அல்ல’ – புதிர் போடும் கிரெக் சாப்பல்

    June 30, 2025
    விளையாட்டு

    சதம் விளாசி டூப்ளசி சாதனை: எம்ஐ நியூயார்க்கை வீழ்த்திய சூப்பர் கிங்ஸ் @ MLC 2025

    June 30, 2025
    விளையாட்டு

    ​விம்​பிள்​டன் டென்​னிஸ் போட்டி இன்று தொடக்​கம்!

    June 30, 2025
    விளையாட்டு

    திண்டுக்கல்லில் கால்பந்து வீரர்கள் தேர்வு!

    June 30, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • தந்தை பேச்சை கேட்காத மனோஜித் மீது ஏற்கெனவே பல்வேறு வழக்குகள் உள்ளன: கொல்கத்தா போலீஸ் தகவல்  
    • சென்னையில் 120 மின்சார பேருந்துகள் சேவை: ஒருமுறை சார்ஜ் செய்தால் 200 கி.மீ. வரை இயங்கும்
    • 65 ஆண்டுக்கு பிறகு ஜூன் மாதத்தில் கிருஷ்ணராஜ சாகர் அணை நிரம்பியது: பூஜை செய்து வழிபட்ட சித்தராமையா
    • போதை தொடர்பான காட்சிகள் இல்லாத திரைப்படங்களே இல்லை: ஐகோர்ட் காட்டம்
    • ரோஸ்மேரி வாட்டர் Vs ரோஸ்மேரி எண்ணெய்: முடி வளர்ச்சிக்கு எது சிறந்தது?

    Recent Comments

    No comments to show.

    Archives

    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.