Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Monday, December 1
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»சித்ரா பவுர்ணமி | தி.மலை கிரிவலம் செல்லும் பக்தர்களால் நிரம்பிய சேலம் பேருந்து நிலையம்
    மாநிலம்

    சித்ரா பவுர்ணமி | தி.மலை கிரிவலம் செல்லும் பக்தர்களால் நிரம்பிய சேலம் பேருந்து நிலையம்

    adminBy adminMay 11, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    சித்ரா பவுர்ணமி | தி.மலை கிரிவலம் செல்லும் பக்தர்களால் நிரம்பிய சேலம் பேருந்து நிலையம்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சேலம்: சித்ரா பவுர்ணமி கிரிவலத்தையொட்டி, திருவண்ணாமலை செல்வதற்கு வந்த பக்தர்கள், பேருந்துகளில் இடம் பிடிப்பதற்காக சேலம் புதிய பேருந்து நிலையத்தில் அலைமோதியதால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    திருவண்ணாமலையில் உள்ள அண்ணாமலையார் கோயிலையும், அங்குள்ள மலையையும் பவுர்ணமி நாளில் வலம் வந்து வழிபடுவது, நற்பலன்களை அளிக்கும் என்ற நம்பிக்கை உள்ளதால், மாதந்தோறும் பவுர்ணமி நாளில் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், அண்டை மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் ஏராளமானோர் திருவண்ணாமலைக்கு சென்று வருகின்றனர். பவுர்ணமிகளில், சித்ரா பவுர்ணமி வழிபாடு மேலும் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

    இந்நிலையில், சித்திரை மாத முழு நிலவு நாளான, சித்ரா பவுர்ணமி இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு, பக்தர்கள் திருவண்ணாமலை சென்று வர வசதியாக, சேலம் கோட்ட அரசுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, சேலம், பெங்களூரு, சென்னை, ஓசூர், கோவை, திருப்பூர், திருவண்ணாமலை, சிதம்பரம் ஆகிய நகரங்களின் பேருந்து நிலையங்களில் இருந்து, பயணிகளின் தேவைக்கேற்ப 500 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

    இதனிடையே, திருவண்ணாமலை கிரிவலம் செல்வதற்காக, பக்தர்கள் ஆயிரக்கணக்கானோர் இன்று காலை முதலே சேலம் புதிய பேருந்து நிலையத்துக்கு வரத்தொடங்கினர். நேரம் செல்லச்செல்ல பக்தர்கள் வருகை அதிகரித்துக் கொண்டே வந்தது. குறிப்பாக, இன்று நண்பகலுக்குப் பின்னர் மாலை வரையிலும் பக்தர்கள் கூட்டம் கூட்டமாக வந்தனர். இதனால், பேருந்து நிலையத்தில் இருந்து புறப்பட்ட பேருந்துகள் அனைத்தும் உடனுக்குடன் பயணிகளால் நிரம்பின. வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்த நிலையில், பக்தர்கள் பேருந்து நிலையத்துக்கு உள்ளே வரத்தொடங்கிய அனைத்துப் பேருந்துகளிலும் நெருக்கியடித்து ஏறினர். எனினும் பேருந்துகளில் பலருக்கும் இருக்கை கிடைக்கவில்லை.

    இதனிடையே, பேருந்து நிலையத்தை ஒட்டி அமைந்துள்ள சேலம் கோட்ட அரசுப் பேருந்துக்கழகத்தில் பணிமனைக்கு, பக்தர்கள் கூட்டம் கூட்டமாகச் சென்று, அங்கேயே பேருந்தினுள் இடம் பிடித்தனர். இதனால், சேலம் புதிய பேருந்து நிலைய வளாகமும், அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனையும் பரபரப்பாக இருந்தது.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    முனைவர் ஆனார் அமைச்சர் அன்பில் மகேஸ்

    December 1, 2025
    மாநிலம்

    காங்கிரஸுடன் இருந்தால் உங்களையும் மூழ்கடித்து விடுவார்கள் – ஸ்டாலினுக்கு தமிழிசை அட்வைஸ்

    December 1, 2025
    மாநிலம்

    ‘கிங்’ தலைவர் Vs ‘சேகர’மான மாண்புமிகு | உள்குத்து உளவாளி

    December 1, 2025
    மாநிலம்

    தமிழகம் உள்ளிட்ட 12 மாநில எஸ்ஐஆர் பணிகள்: மாநில நிர்வாகிகளுடன் கார்கே இன்று ஆலோசனை

    December 1, 2025
    மாநிலம்

    ‘அதிமுக வாக்குகள் தான் அதிகம் காலியாகப் போகிறது!’ – சீமான் புதிய கண்டுபிடிப்பு

    December 1, 2025
    மாநிலம்

    ‘புதியவர்கள் அரசியலுக்கு வருவதை வரவேற்கிறோம்’ – மதில் மேல் பூனையாய் நிற்கும் ரங்கசாமி கருத்து

    December 1, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • என்டிஏ அரசுக்கு லாலு மகன் தேஜ் பிரதாப் ஆதரவு
    • பொன்னேரி அருகே அரசின் உரிய அங்கீகாரம் இன்றி செயல்பட்ட தனியார் பள்ளிக்கு ‘சீல்’
    • ஆஸி. பிட்ச்களில் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சு ‘செல்ஃப்’ எடுக்காது: ஸ்டீவ் ஸ்மித்
    • அமெரிக்காவில் வெளி​நாட்​டினருக்கு வழங்​கப்​பட்ட தானி​யங்கி முறை பணி நீட்​டிப்பு அனுமதி ரத்து
    • வெளியிடப்படாத கையெழுத்து பிரதிகளின் பதிப்புகளை வெளிக்கொண்டு வர வேண்டும்: ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் அறிவுறுத்தல்

    Recent Comments

    No comments to show.

    Archives

    • December 2025
    • November 2025
    • October 2025
    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.