Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Sunday, July 20
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»தமிழ் கடவுள் முருகனுக்கு பெருமை சேர்க்க மருதமலை, திண்டல், திமிரியில் சிலைகள் – சேகர்பாபு பேட்டி
    மாநிலம்

    தமிழ் கடவுள் முருகனுக்கு பெருமை சேர்க்க மருதமலை, திண்டல், திமிரியில் சிலைகள் – சேகர்பாபு பேட்டி

    adminBy adminMay 11, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    தமிழ் கடவுள் முருகனுக்கு பெருமை சேர்க்க மருதமலை, திண்டல், திமிரியில் சிலைகள் – சேகர்பாபு பேட்டி
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    கன்னியாகுமரி: தமிழ் கடவுள் முருகனுக்கு பெருமை சேர்க்கின்ற வகையில் மருதமலையில் 184 அடி உயரத்திலும், ஈரோடு மாவட்டம், திண்டலில் 180 அடி உயரத்திலும், இராணிப்பேட்டை மாவட்டம், குமரகிரி திமிரியில் 114 அடி உயரத்திலும் முருகன் சிலைகள் அமைக்கப்பட உள்ளதாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

    கன்னியாகுமரி மாவட்டம், திருவிதாங்கோடு அருள்மிகு மகாதேவர் திருக்கோயில், மண்டைக்காடு அருள்மிகு பகவதியம்மன் திருக்கோயில் திருக்குடமுழுக்கு நன்னீராட்டுப் பெருவிழாக்களில் கலந்து கொண்ட பி.கே.சேகர்பாபு, 1000 ஆண்டு பழமையான பத்மநாபபுரம் அருள்மிகு நீலகண்ட சுவாமி திருக்கோயிலில் ரூ. 1.93 கோடி மதிப்பீட்டிலான 9 திருப்பணிகளையும், இரணியலில் அமைந்துள்ள தொன்மை வாய்ந்த அரண்மனையை ரூ.4.85 கோடி மதிப்பீட்டில் புதுப்பித்திடும் வகையிலான திருப்பணிகளையும், சுசீந்தரம் அருள்மிகு தாணுமாலய சுவாமி திருக்கோயிலில் ரூ.3 கோடி மதிப்பீட்டில் திருக்குளம் சீரமைத்தல் மற்றும் கருங்கல் தரைதளம் அமைக்கும் பணிகளையும் தொடங்கி வைத்தார்.

    பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பி.கே.சேகர்பாபு, “பத்மநாபபுரத்தில் அமைந்துள்ள 1000 ஆண்டுகள் பழமையான அருள்மிகு நீலகண்ட சுவாமி திருக்கோயிலில் ரூ. 1,93 கோடி மதிப்பீட்டிலான திருப்பணிகளையும், இரணியலில் அமைந்துள்ள மன்னர் காலத்து பொக்கிஷமான தொன்மை வாய்ந்த அரண்மனையை பாதுகாத்திடும் வகையில் ரூ.4.85 கோடி மதிப்பீட்டிலான திருப்பணிகளையும், சுசீந்திரம் அருள்மிகு தாணுமாலைய சுவாமி திருக்கோயிலில் ரூ.3 கோடி மதிப்பீட்டில் திருக்குளம் சீரமைத்தல் மற்றும் கருங்கல் தரைதளம் அமைக்கின்ற பணியினையும் தொடங்கி வைத்துள்ளோம். அனைத்து பணிகளும் இந்த ஆண்டு இறுதிக்குள் நிறைவு செய்யப்படும்.

    இந்த ஆட்சியானது ஒரு ஆன்மீக ஆட்சி என்பதை நிரூபிக்கின்ற வகையில் கன்னியாகுமரியில் மென்மேலும் இது போன்ற திருப்பணிகளும், குடமுழுக்குகளும், பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் பணிகளும் தொடர்ந்து நடைபெறும்.

    தமிழ் கடவுள் முருகனுக்கு பெருமை சேர்க்கின்ற வகையில் மருதமலையில் 184 அடி உயரத்திலும், ஈரோடு மாவட்டம், திண்டலில் 180 அடி உயரத்திலும், இராணிப்பேட்டை மாவட்டம், குமரகிரி திமிரியில் 114 அடி உயரத்திலும் முருகன் சிலைகள் அமைக்கப்பட உள்ளன. முதல்வரின் அனுமதியை பெற்று, இப்பணிகள் துரிதப்படுத்தப்பட்டு வருகின்றன. பக்தர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் ஏற்படுத்தி தரும் வகையில் ஒருங்கிணைந்த பெருந்திட்ட வரைவின் கீழ் 19 திருக்கோயில்களில் ரூ. 1,770 கோடி மதிப்பீட்டில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    திருச்செந்தூரில் HCL நிறுவனத்தின் சார்பில் 200 கோடி ரூபாய்க்கு மேலாகவும், திருக்கோயில் சார்பில் 100 கோடி ரூபாய்க்கு மேலாகவும் திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்பணிகள் முழுமையாக நிறைவு பெறுகின்ற போது பக்தர்களுக்கு தேவையான கூடுதல் வசதிகள் கிடைப்பதோடு மட்டுமல்லாமல் தமிழகத்திற்கு மட்டுமல்ல இந்தியாவிற்கே வழிகாட்டுகின்ற அளவிற்கு திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் திகழும்” என்று தெரிவித்தார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    நடப்பாண்டில் 3-வது முறையாக நிரம்பிய மேட்டூர் அணை

    July 20, 2025
    மாநிலம்

    பணிநிரந்தரம் கோரி சென்னையில் 3 ஆயிரம் பேர் பேரணி: பகுதிநேர ஆசிரியர்களின் தொடர் போராட்டம் முடிவுக்கு வந்தது

    July 20, 2025
    மாநிலம்

    பாலியல் புகார்களுக்காக கல்லூரிகளிலும் உள்ளக குழுவை அமைக்காதது ஏன்? – அரசுக்கு நயினார் நாகேந்திரன் கேள்வி

    July 20, 2025
    மாநிலம்

    ‘கவனிப்பு’ பிரச்சினையால் களேபரமான திருப்பத்தூர் நகர்மன்றம்! – திமுக சேர்மனுக்கு திருகுவலியை உண்டாக்கும் திமுக கவுன்சிலர்கள்

    July 20, 2025
    மாநிலம்

    அதிமுக எம்எல்ஏ தலைமையில் வீடு வீடாக துண்டு பிரசுரம் வழங்கல்

    July 20, 2025
    மாநிலம்

    வைகை, தாமிரபரணியை சுத்தப்படுத்துவதாக கூறுவது ஊழலுக்கு அச்சாரம்: எல்.முருகன் விமர்சனம்

    July 20, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆடிப்பூர தேரோட்ட திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்
    • நடப்பாண்டில் 3-வது முறையாக நிரம்பிய மேட்டூர் அணை
    • பிலடெல்பியா முதல் மேற்கு நைல் வைரஸ் கொசு குளத்தை உறுதிப்படுத்துகிறது; வைரஸ் நோய், அறிகுறிகள் மற்றும் சிகிச்சை பற்றி அனைத்தையும் அறிந்து கொள்ளுங்கள் – இந்தியாவின் நேரங்கள்
    • பணிநிரந்தரம் கோரி சென்னையில் 3 ஆயிரம் பேர் பேரணி: பகுதிநேர ஆசிரியர்களின் தொடர் போராட்டம் முடிவுக்கு வந்தது
    • இன்சுலின் எதிர்ப்பை இயற்கையாகவே மாற்றியமைக்க 5 பயனுள்ள வழிகள் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    Recent Comments

    No comments to show.

    Archives

    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.