Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Thursday, July 3
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»தேசியம்»பிரதமர் மோடி தலைமையில் உயர் மட்ட ஆலோசனை – சிடிஎஸ், முப்படை தளபதிகள் பங்கேற்பு
    தேசியம்

    பிரதமர் மோடி தலைமையில் உயர் மட்ட ஆலோசனை – சிடிஎஸ், முப்படை தளபதிகள் பங்கேற்பு

    adminBy adminMay 11, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    பிரதமர் மோடி தலைமையில் உயர் மட்ட ஆலோசனை – சிடிஎஸ், முப்படை தளபதிகள் பங்கேற்பு
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடி, புதுடெல்லியில் உள்ள தனது இல்லத்தில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் முப்படை தளபதிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் மற்றும் பாதுகாப்பு படைத் தலைவர் ஜெனரல் அணில் சவுகான் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

    இருதரப்பு மோதலை நிறுத்திக்கொள்வது என இந்தியா – பாகிஸ்தான் இடையே நேற்று ஒப்புக்கொள்ளப்பட்டது. இரு நாடுகளின் முப்படைகளும் சனிக்கிழமை மாலை 5 மணி முதல் தாக்குதலை நிறுத்திக் கொள்வதென முடிவு செய்யப்பட்டதாக வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி தெரிவித்தார். அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பும் இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.

    மோதலை முடிவுக்குக் கொண்டு வர உதவியதற்காக பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், டொனால்ட் ட்ரம்ப்புக்கு நன்றி தெரிவித்திருந்தார். இந்நிலையில், நேற்றிரவு பாகிஸ்தான் ஆயுதப் படைகள் ட்ரோன் தாக்குதலை நடத்தின. இதனால், மீண்டும் ஒரு பதற்றச் சூழல் உருவானது.

    எனினும், இன்று காலை முதல் எல்லையோர பகுதிகளில் அமைதி நிலவுகிறது. இதையடுத்து, ராணுவ மோதல் காரணமாக அறிவிக்கப்பட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை அதிகாரிகள் திரும்பப் பெற்றனர்.

    இந்நிலையில், பிரதமர் மோடி தலைமையில் இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், பாதுகாப்பு படைத் தலைவர் ஜெனரல் அணில் சவுகான், முப்படை தளபதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    காஷ்மீரின் பஹல்காம் தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்டதைத் தொடந்து பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாதிகள் நிலைகளைக் குறிவைத்து கடந்த 7ம் தேதி தாக்குதல்கள் நடத்தப்பட்டன.

    இந்தநிலையில், இந்தியா பாகிஸ்தான் இடையே, துப்பாக்கிச்சூடு மற்றும் அனைத்து ராணுவ நடவடிக்கைகளை நிறுத்துவது தொடர்பாக ஒரு ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் சனிக்கிழமை தெரிவித்திருந்தார். மேலும் பயங்கரவாதத்தின் அனைத்து நிலைகளுக்கு எதிரான நிலைப்பாட்டினை இந்தியா சமரசமின்றி தொடரும் என்று தெரிவித்திருந்தார்.

    அவர் தனது எக்ஸ் பக்கத்தில், “துப்பாக்கிச் சூட்டினை நிறுத்துதல் மற்றும் ராணுவ நடவடிக்கை குறித்து இந்தியாவும் பாகிஸ்தானும் இன்று ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தை எட்டியுள்ளன. பயங்கரவாதத்திற்கு எதிராக அதன் அனைத்து வடிவங்களிலும் வெளிப்பாடுகளிலும் இந்தியா உறுதியான மற்றும் சமரசமற்ற நிலைப்பாட்டை தொடர்ந்து பராமரித்து வருகிறது. அது தொடர்ந்து அவ்வாறு செய்யும்” என்று தெரிவித்திருந்தார்.

    இந்தியா மற்றும் பாகிஸ்தான் டிஜிஎம்ஓக்கள் துப்பாகிச்சூடு மற்றும் ராணுவ நடவடிக்கைகளை நிறுத்திக்கொள்ள இந்திய பாகிஸ்தான் தரப்புகள் ஒத்துக்கொண்டதைத் தொடர்ந்து அமைச்சர் இவ்வாறு தெரிவத்திருந்தார்.

    முன்னதாக, வெளியுறவுத் துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி, “பாகிஸ்தானின் ராணுவ நடவடிக்கைகளுக்கான இயக்குநர்கள் (DGMO) இன்று பிற்பகல் 3:35 மணிக்கு இந்திய DGMO-வை அழைத்தனர். இந்திய நேரப்படி மாலை 5 மணி முதல் நிலம், வான், கடல் என அனைத்து வகையான துப்பாக்கிச் சூடு மற்றும் ராணுவ நடவடிக்கைகளையும் இரு தரப்பினரும் நிறுத்துவதாக அவர்களுக்கு இடையே ஒப்புக் கொள்ளப்பட்டது.

    இதை செயல்படுத்த இரு தரப்பினருக்கும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. ராணுவ நடவடிக்கைகளுக்கான இயக்குநர்கள் ஜெனரல்கள் மே 12-ஆம் தேதி 12 மணிக்கு மீண்டும் பேசுவார்கள்” என்று தெரிவித்திருந்தார்.

    போர்நிறுத்த ஒப்பந்தம் ஏற்றுக்கொள்ளப்பட்ட சில மணிநேரங்களுக்குள் “இரு நாடுகளுக்கும் இடையிலான புரிந்துணர்வை பாகிஸ்தான் மீறி வருகிறது. இந்திய ராணுவம் இந்த எல்லை ஊடுருவலுக்கு பதிலடி கொடுத்து சமாளித்து வருகிறது. இந்த ஊடுருவல் மிகவும் கண்டிக்கத்தக்கது என்று இந்தியா சனிக்கிழமை குற்றம்சாட்டியிருந்தது.

    இந்த ஊடுருவல் மிகவும் கண்டிக்கத்தக்கது, இதற்கு பாகிஸ்தான் தான் பொறுப்பு. பாகிஸ்தான் இந்த சூழ்நிலையை சரியாகப் புரிந்துகொண்டு, இந்த ஊடுருவலைத் தடுக்க உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்கும் என்று நாங்கள் நம்புகிறோம் வெளியுறவுத் துறை செயலர் விக்ரம் மிஸ்ரி தெரிவித்திருந்தார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    தேசியம்

    உ.பி.யில் 2 ஆண்டில் 97,000 குற்றவாளிக்கு தண்டனை

    July 3, 2025
    தேசியம்

    ரஷ்யாவில் நடைபெற்ற விழாவில் தமால் போர்க்கப்பல் இந்திய கடற்படையில் இணைப்பு

    July 3, 2025
    தேசியம்

    திடீர் மரணங்களுக்கு கரோனா தடுப்பூசி காரணம் அல்ல: ஐசிஎம்ஆர், என்சிடிசி ஆய்வில் தகவல்

    July 3, 2025
    தேசியம்

    இமாச்சலில் கனமழைக்கு 51 பேர் உயிரிழப்பு: இதுவரை 22 பேரை காணவில்லை

    July 3, 2025
    தேசியம்

    நடுவானில் விலகிய ஸ்பைஸ்ஜெட் விமானத்தின் ஜன்னல் ஃப்ரேம்: விமான நிறுவனம் விளக்கம்

    July 2, 2025
    தேசியம்

    புதிய குற்றவியல் சட்டங்கள் ‘குழப்பம் தரும் வீண் வேலை’ – ப.சிதம்பரம் முன்வைக்கும் காரணம்

    July 2, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • ட்ரம்ப் அதிபர் பதவியேற்ற பிறகு அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக ஊடுருவும் இந்தியர்கள் எண்ணிக்கை 70% குறைந்தது
    • இயக்குநர் புகார்: நடிகை மினு முனீர் கைது
    • தனிப்படை போலீஸார் தாக்கியதில் உயிரிழந்த மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமாரின் சகோதரருக்கு அரசு பணி
    • உ.பி.யில் 2 ஆண்டில் 97,000 குற்றவாளிக்கு தண்டனை
    • எல்லா படமும் ‘பான் இந்தியா’ படம் ஆகாது: நாகார்ஜுனா

    Recent Comments

    No comments to show.

    Archives

    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.