Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Thursday, July 3
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»முதல்வர் தலைமையில் பிரம்மாண்ட பேரணி: இந்திய ராணுவத்துக்கு ஆதரவாக அணிதிரண்ட மக்கள்
    மாநிலம்

    முதல்வர் தலைமையில் பிரம்மாண்ட பேரணி: இந்திய ராணுவத்துக்கு ஆதரவாக அணிதிரண்ட மக்கள்

    adminBy adminMay 11, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    முதல்வர் தலைமையில் பிரம்மாண்ட பேரணி: இந்திய ராணுவத்துக்கு ஆதரவாக அணிதிரண்ட மக்கள்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    பாகிஸ்தானுடனான போர் சூழலில் இந்திய ராணுவத்துக்கு ஆதரவு தெரிவித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னெடுத்த பிரமாண்ட பேரணியில் ஆயிரக்கணக்கானோர் திரளாக பங்கேற்றனர். அவர்கள் அனைவரும் தேசிய கொடியேந்தி அணிவகுத்துச் சென்று, இந்திய ராணுவத்துக்கு உறுதுணையாக இருப்பதை வெளிப்படுத்தினர்.

    பாகிஸ்தானின் அத்துமீறல்கள், தீவிரவாத தாக்குதல்களுக்கு எதிரான போரில் இந்திய ராணுவத்துக்கு ஆதரவை வெளிப்படுத்தும் வகையில் சென்னை, கடற்கரைச் சாலையில் ‘இந்திய ராணுவத்துக்கு துணை நிற்கும் பேரணி’ நடத்தப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அதனடிப்படையில் பேரணிக்கு வருகை தரும் பொதுமக்களின் தேவைகளுக்காகப் பல்வேறு ஏற்பாடுகளை தமிழக அரசு செய்திருந்தது. அதன்படி, 200 இடங்களில் அரேபியன் கூடாரங்கள், பெண்களுக்கான ஒப்பனை அறை உட்பட 16 இடங்களில் கழிப்பறை வசதிகள், 70-க்கும் மேற்பட்ட இடங்களில் குடிநீர் வசதி, 10 இடங்களில் மருத்துவ முகாம், 15 ஆம்புலன்ஸ் என அனைத்தும் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தன.

    கடந்த ஆண்டு மெரினா சாகச நிகழ்ச்சியில் 5 பேர் உயிரிழந்த நிலையில், மீண்டும் எவ்வித அசம்பாவிதமும் ஏற்படாத வகையில் மிகுந்த கவனத்துடன் அரசு ஏற்பாடுகளை செய்திருந்தது. இந்நிலையில், பிற்பகல் முதலே கடற்கரை காமராஜர் சாலையில் ராணுவ முன்னாள் இந்நாள் அதிகாரிகள், மாணவர்கள் என பல்வேறு தரப்பிலானவர்களும் குவியத் தொடங்கினர்.

    டிஜிபி அலுவலகம் அருகே வருகை தந்த முதல்வர் மு.க.ஸ்டாலின், தேசிய கொடியை ஏந்தியவாறு பேரணியை தொடங்கினார். அவருடன் துணை முதல்வர் உதயநிதி, அமைச்சர்கள் கே.என்.நேரு, பி.கே.சேகர்பாபு, மா.சுப்பிரமணியன், கோவி.செழியன், டி.ஆர்.பி.ராஜா உள்ளிட்ட அமைச்சர்கள், சென்னை மேயர் ஆர்.பிரியா, கனிமொழி, டி.ஆர்.பாலு, தயாநிதி மாறன் உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள், தலைமைச் செயலர் நா.முருகானந்தம், டிஜிபி சங்கர் ஜிவால், கூட்டணி கட்சித் தலைவர்களான கி.வீரமணி, வைகோ, இரா.முத்தரசன், திருமாவளவன், செல்வப்பெருந்தகை, ஈ.ஆர்.ஈஸ்வரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். முதல்வர் உள்ளிட்ட அனைவரும் இந்திய ராணுவம் வெல்லட்டும் என்ற வாசகத்துடன் கூடிய பேட்ஜ் அணிந்து, கட்சி அடையாளமின்றி பேரணியில் பங்கேற்றனர். காவல் துறையினரும் பதாகைகளை ஏந்தி தங்கள் உணர்வை வெளிப்படுத்தினர். 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்களும் தேசிய கொடியேந்தியபடி, இந்திய ராணுவம் வெல்லட்டும் என்று முழங்கியவாறு அணிவகுத்தனர்.

    சுமார் 50 நிமிடத்தில் 3.7 கிமீ தொலைவை கடந்து போர் நினைவு சின்னம் அருகே முதல்வர் பேரணியை நிறைவு செய்தார். அங்கு பஹல்காம் தாக்குதலில் உயிரிழந்த சுற்றுலா பயணிகள், நாட்டுக்காக உயிர்த் தியாகம் செய்த ராணுவ அதிகாரிகளின் உருவப் படத்துக்கு முதல்வர் உள்ளிட்ட அனைவரும் மலர் தூவி மரியாதை செலுத்தினர். பின்னர் போர் நினைவுச் சின்ன வளாகத்தில் ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரிகளிடம் தமிழகம் அவர்களுக்கு என்றும் துணை நிற்கும் என்ற வாசகத்துடன் கூடிய தேசியக் கொடியை நினைவு சின்னமாக முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

    முதல்வருக்கு ஆளுநர் நன்றி: ராணுவத்துக்கு ஆதரவாக பேரணி நடத்தியமைக்காக முதல்வருக்கு நன்றி தெரிவித்து ஆளுநர் ஆர்.என்.ரவி சமூக வலைதள பக்கத்தில், “பாகிஸ்தானிய ராணுவ ஆக்கிரமிப்பு செயல்களுக்கு எதிராக நாட்டை துணிச்சலுடனும் வெற்றிகரமாகவும் பாதுகாக்கும் இந்திய ராணுவத்துடன் நமது 8 கோடி தமிழக மக்களின் தெளிவான ஒற்றுமையை வெளிப்படுத்தும் வகையில் பிரமாண்டமான மக்கள் பேரணியை நடத்தியதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மனமார்ந்த நன்றி. நமது ராணுவத்துடன் நமது நாடு ஒற்றுமையாகவும் உறுதியாகவும் துணைநிற்பது, பயங்கரவாதத்தின் அனைத்து முனைகளையும் அழித்தொழித்து நமது தேசிய இறையாண்மையைப் பாதுகாப்பதற்கான நமது ஈடுபாட்டை மீண்டும் உறுதிப்படுத்துகிறது” என குறிப்பிட்டுள்ளார். அமைதி நீடிக்கட்டும்

    பேரணி புகைப்படத்தை பகிர்ந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் சமூக வலைதள பக்கத்தில், “இந்திய முப்படை வீரர்களுக்கு ஆதரவாகத் தமிழகம் பேரணியாகத் திரண்டது. போர்நிறுத்த அறிவிப்பை வரவேற்கிறேன். இந்த அமைதி எப்போதும் நீடிக்கட்டும். நமது எல்லையைப் பாதுகாக்கும் வீரர்களின் துணிச்சலுக்கு நம் நெஞ்சார்ந்த வீர வணக்கங்கள்” என தெரிவித்துள்ளார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    எடப்பாடி பழனிசாமியை சந்தித்து ரிதன்யாவின் பெற்றோர் மனு அளித்தது ஏன்?

    July 3, 2025
    மாநிலம்

    தனிப்படை போலீஸார் தாக்கியதில் உயிரிழந்த மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமாரின் சகோதரருக்கு அரசு பணி

    July 3, 2025
    மாநிலம்

    தனிப்படை போலீஸ் விசாரணைக்கு அழுத்தம் கொடுத்த அதிகாரி யார்? – காவல் துறை தெளிவுபடுத்த கோரிக்கை

    July 3, 2025
    மாநிலம்

    நகை திருட்டு புகார் கூறிய தாய், மகள் பண மோசடி வழக்கில் சிக்கியவர்கள்: திருப்புவனம் சம்பவத்தில் திடீர் திருப்பம்

    July 3, 2025
    மாநிலம்

    காவலாளி கொலை அரச பயங்கரவாதம்: திருமாவளவன் கண்டனம்

    July 3, 2025
    மாநிலம்

    சேலம் மேற்கு தொகுதி பாமக எம்எல்ஏ அருள் கட்சி பதவி பறிப்பு: அன்புமணி திடீர் நடவடிக்கை

    July 3, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • பலி எண்ணிக்கை 40 ஆக உயர்வு: ரூ.1 கோடி நிவாரணம் அளிப்பதாக சிகாச்சி நிறுவனம் அறிவிப்பு
    • ஏஐ, டேட்டா சயின்ஸ் உள்ளிட்ட பாடங்களில் பள்ளி மாணவர்களுக்காக 10 ஆன்லைன் படிப்புகள்: சென்னை ஐஐடி அறிமுகம்
    • வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு 6 மாதம் சிறை: சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் உத்தரவு
    • எடப்பாடி பழனிசாமியை சந்தித்து ரிதன்யாவின் பெற்றோர் மனு அளித்தது ஏன்?
    • ஆயுள் காப்பீட்டு திட்டங்களை விற்க ஏ.யு.ஸ்மால் பைனான்ஸ் வங்கி, எல்ஐசி இணைந்து செயல்படும்

    Recent Comments

    No comments to show.

    Archives

    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.