Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Friday, July 18
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»தேசியம்»‘காஷ்மீரை கைப்பற்ற 30 ஆண்டுகளாக பயங்கரவாதிகளை அனுப்பும் பாகிஸ்தான்’ – சசி தரூர்
    தேசியம்

    ‘காஷ்மீரை கைப்பற்ற 30 ஆண்டுகளாக பயங்கரவாதிகளை அனுப்பும் பாகிஸ்தான்’ – சசி தரூர்

    adminBy adminMay 10, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    ‘காஷ்மீரை கைப்பற்ற 30 ஆண்டுகளாக பயங்கரவாதிகளை அனுப்பும் பாகிஸ்தான்’ – சசி தரூர்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    புதுடெல்லி: காஷ்மீரைக் கைப்பற்றும் நோக்கத்தில் பாகிஸ்தான் 30 ஆண்டுகளாக பயங்கரவாதிகளை அனுப்பி வருவதாகக் குற்றஞ்சாட்டியுள்ள காங்கிரஸ் எம்.பி சசி தரூர், இன்னும் 30 ஆண்டுகள் முயன்றாலும் பாகிஸ்தானால் வெற்றிபெற முடியாது என்று தெரிவித்துள்ளார்.

    செய்தி தொலைக்காட்சி ஒன்றில் பேசிய காங்கிரஸ் மூத்த தலைவரும் திருவனந்தபுரம் எம்.பி.யுமான சசி தரூர், பாகிஸ்தானை கடுமையாக விமர்சித்தார். அந்த நாட்டில் உள்ள எதையும் இந்தியா விரும்பவில்லை என்றும் அந்த நாட்டை கைவிட்டுவிடுவதில் இந்தியா மகிழ்ச்சி அடைகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

    “இந்தியா ஒரு நிலையான சக்தி. பாகிஸ்தானிடம் உள்ள எதையும் அது விரும்பவில்லை. இந்தியா தனது பொருளாதாரத்தை வளர்ப்பதிலும், தனது உயர் தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதிலும், தனது இளைஞர்களுக்கு எதிர்காலத்தை வழங்குவதிலும் அது கவனம் செலுத்துகிறது.

    பாகிஸ்தானை கைவிட்டதில் அது முற்றிலும் மகிழ்ச்சியடைகிறது. அதோடு, அது பாகிஸ்தானை தனிமைப்படுத்தி விட்டுவிடும்.” என்று தெரிவித்துள்ளார்.

    காஷ்மீரைக் கைப்பற்றும் நோக்குடன் பாகிஸ்தான் 30 ஆண்டுகளாக பயங்கரவாதிகளை அனுப்பி வருவதாக அவர் குற்றம் சாட்டினார். “இந்தியா வைத்திருக்கும் பகுதியை பாகிஸ்தான் உரிமை கோருகிறது. அங்கு வசிக்கும் மக்கள் பாகிஸ்தான் மக்கள் பின்பற்றும் மதத்தை பின்பற்றுகிறார்கள் என்ற ஒரே காரணத்துக்காக இந்தியாவின் சில பகுதிகளைக் கைப்பற்றத் துடிக்கும் ஒரு மதவெறி கொண்ட சக்தி அது.

    ஆயிரம் வெட்டுக்களால் இந்தியாவை ரத்தம் சிந்தச் செய்து காஷ்மீரைக் கைப்பற்ற வேண்டும் என்ற அவர்களின் விருப்பத்திற்காக அவர்கள் 30 ஆண்டுகளாக பயங்கரவாதிகளை அனுப்பி வருகின்றனர். அவர்கள் அதைப் பெறப் போவதில்லை. அவர்கள் 30 ஆண்டுகளாகத் தோல்வியடைந்துள்ளனர். இன்னும் 30 ஆண்டுகளுக்கும் அவர்கள் தோல்வியடைவார்கள்.” என்று சசி தரூர் தெரிவித்துள்ளார்.

    பாகிஸ்தானுடன் போர் புரிய இந்தியா ஆர்வம் காட்டவில்லை என்றும், ஆனால் அவர்கள் விரும்பினால் பதிலடி கொடுக்கப்படும் என்றும் சசி தரூர் கூறினார். “பாகிஸ்தானுடன் போர் புரிவதில் எங்களுக்கு ஆர்வமில்லை. ஆனால் பாகிஸ்தான் போரை விரும்பினால், அவர்கள் அதைப் பெறுவார்கள். ராணுவ மோதல் தீவிரமடைந்து வரும் நிலையிலும், இந்தியா நிதானத்தைக் கடைப்பிடித்து வருகிறது.” என சசி தரூர் தெரிவித்துள்ளார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    தேசியம்

    பிஹாரில் மின்னல் தாக்குதலால் கடந்த இரண்டு நாட்களில் 33 பேர் பலி

    July 18, 2025
    தேசியம்

    75 வயது தலைவர்களுக்கு ஓய்வு: மோகன் பாகவத் கருத்தால் பிஹார் பாஜகவுக்கு சிக்கல்

    July 18, 2025
    தேசியம்

    ராபர்ட் வதேராவுக்கு எதிரான குற்றப்பத்திரிகை அரசியல் உள்நோக்கம் கொண்டது: ராகுல் காந்தி

    July 18, 2025
    தேசியம்

    ‘தி ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட்’ பயங்கரவாத அமைப்பாக அறிவிப்பு: அமெரிக்காவுக்கு ஜெய்சங்கர் வரவேற்பு

    July 18, 2025
    தேசியம்

    டெல்லியை அடுத்து பெங்களூருவிலும் 15 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

    July 18, 2025
    தேசியம்

    கல்​லூரி மாணவி தற்​கொலையை கண்டித்து ஒடிசாவில் 12 மணி நேர முழு அடைப்பு

    July 18, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • பிஹாரில் மின்னல் தாக்குதலால் கடந்த இரண்டு நாட்களில் 33 பேர் பலி
    • பாடத்திட்டங்களில் சிறுபான்மையினருக்கு எதிரான வெறுப்பை வளர்ப்பதா? – முத்தரசன் கண்டனம்
    • லாக்டோஸ் சகிப்புத்தன்மையை எவ்வாறு அடையாளம் காண்பது: அறிகுறிகள், காரணங்கள் மற்றும் நிர்வகிக்க உதவிக்குறிப்புகள் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • சூரிய கிரகணம் ஆகஸ்ட் 2 மொத்த இருளின் 6 நிமிடங்கள் கொண்டு வரும்; 100-வருடங்களுக்கு ஒரு முறை சரிபார்க்கவும், தேதி, நேரம் மற்றும் தெரிவுநிலை பகுதிகள் | – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • 75 வயது தலைவர்களுக்கு ஓய்வு: மோகன் பாகவத் கருத்தால் பிஹார் பாஜகவுக்கு சிக்கல்

    Recent Comments

    No comments to show.

    Archives

    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.