Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Friday, July 18
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»தேசியம்»பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத ஏவுதளங்கள் அழிப்பு: இந்திய ராணுவம் வீடியோ வெளியீடு
    தேசியம்

    பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத ஏவுதளங்கள் அழிப்பு: இந்திய ராணுவம் வீடியோ வெளியீடு

    adminBy adminMay 10, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத ஏவுதளங்கள் அழிப்பு: இந்திய ராணுவம் வீடியோ வெளியீடு
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    புதுடெல்லி: பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகளின் ஏவுதளங்களை வெற்றிகரமாக அழித்துள்ளதாக அறிவித்துள்ள இந்திய ராணுவம் அதுதொடர்பான வீடியோவையும் வெளியிட்டுள்ளது.

    இதுதொடர்பாக ராணுவம் எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ள பதிவில், “மே 8 – 9 இடைப்பட்ட இரவில் ஜம்மு-காஷ்மீர் மற்றும் பஞ்சாபின் பல பகுதிகளில் பாகிஸ்தான் மேற்கொண்ட ட்ரோன் தாக்குதல் முயற்சிகளுக்கான பதிலடியாக இந்திய ராணுவம் பயங்கரவாதிகளின் ஏவுதளங்களைக் குறிவைத்து அழித்தது. அவை தடம் தெரியாமல் அழிக்கப்பட்டன. இந்த ஏவுதளங்கள் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டின் அருகே அமைந்துள்ளன. இங்கிருந்துதான் இந்திய மக்கள் மீதும், பாதுகாப்புப் படையினர் மீதும் பயங்கரவாத தாக்குதல் சதிகள் முன்பு நடத்தப்பட்டன. இந்திய ராணுவத்தின் அதிரடியான மற்றும் தீர்க்கமான நடவடிக்கைகள் பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத கட்டமைப்புகள் மற்றும் பயங்கரவாதிகளின் இயங்குதிறனுக்கு பலத்த அடியாக இறங்கியுள்ளது.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    OPERATION SINDOOR

    Indian Army Pulverizes Terrorist Launchpads

    As a response to Pakistan’s misadventures of attempted drone strikes on the night of 08 and 09 May 2025 in multiple cities of Jammu & Kashmir and Punjab, the #Indian Army conducted a coordinated fire assault on… pic.twitter.com/2i5xa3K7uk

    — ADG PI – INDIAN ARMY (@adgpi) May 10, 2025

    இந்தியா – பாக். மோதல்: நடப்பது என்ன? – கடந்த ஏப்ரல் 22-ம் தேதி காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகள் 26 பேர் தீவிரவாதிகளால் கொல்லப்பட்டனர். கொடூரமான இந்தத் தாக்குதலுக்கு பதிலடியாக கடந்த புதன்கிழமை நள்ளிரவில் ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் பாகிஸ்தானின் 9 தீவிரவாத முகாம்களை அழித்தது இந்திய ராணுவம். அதன் தொடர்ச்சியாக, இந்திய எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டருகே உள்ள எல்லை கிராமங்களைக் குறிவைத்து பாகிஸ்தான் தொடர் தாக்குதல் நடத்தி வருகிறது.

    ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான், குஜராத் ஆகிய 4 எல்லை மாநிலங்களில் வியாழக்கிழமை இரவு 36 இடங்களை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய 400-க்கும் மேற்பட்ட துருக்கி தயாரிப்பு ட்ரோன்களை ‘சுதர்சன சக்கரம்’ (எஸ்-400) உள்ளிட்ட வான் பாதுகாப்பு ஆயுதங்களால் இந்திய ராணுவம் சுட்டு வீழ்த்தியது. அதன் பின்னரும், பாகிஸ்தானின் வான்வழித் தாக்குதல்களும், இந்தியாவின் பதிலடி தாக்குதல்களும் நீடிப்பது கவனிக்கத்தக்கது.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    தேசியம்

    75 வயது தலைவர்களுக்கு ஓய்வு: மோகன் பாகவத் கருத்தால் பிஹார் பாஜகவுக்கு சிக்கல்

    July 18, 2025
    தேசியம்

    ராபர்ட் வதேராவுக்கு எதிரான குற்றப்பத்திரிகை அரசியல் உள்நோக்கம் கொண்டது: ராகுல் காந்தி

    July 18, 2025
    தேசியம்

    ‘தி ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட்’ பயங்கரவாத அமைப்பாக அறிவிப்பு: அமெரிக்காவுக்கு ஜெய்சங்கர் வரவேற்பு

    July 18, 2025
    தேசியம்

    டெல்லியை அடுத்து பெங்களூருவிலும் 15 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

    July 18, 2025
    தேசியம்

    கல்​லூரி மாணவி தற்​கொலையை கண்டித்து ஒடிசாவில் 12 மணி நேர முழு அடைப்பு

    July 18, 2025
    தேசியம்

    மகாராஷ்டிரா மாநிலத்தில் கார், பைக் மோதியதில் 7 பேர் உயிரிழப்பு

    July 18, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • பாடத்திட்டங்களில் சிறுபான்மையினருக்கு எதிரான வெறுப்பை வளர்ப்பதா? – முத்தரசன் கண்டனம்
    • லாக்டோஸ் சகிப்புத்தன்மையை எவ்வாறு அடையாளம் காண்பது: அறிகுறிகள், காரணங்கள் மற்றும் நிர்வகிக்க உதவிக்குறிப்புகள் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • சூரிய கிரகணம் ஆகஸ்ட் 2 மொத்த இருளின் 6 நிமிடங்கள் கொண்டு வரும்; 100-வருடங்களுக்கு ஒரு முறை சரிபார்க்கவும், தேதி, நேரம் மற்றும் தெரிவுநிலை பகுதிகள் | – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • 75 வயது தலைவர்களுக்கு ஓய்வு: மோகன் பாகவத் கருத்தால் பிஹார் பாஜகவுக்கு சிக்கல்
    • முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணிக்கு எதிரான தேர்தல் வழக்கை ரத்து செய்ய ஐகோர்ட் மறுப்பு

    Recent Comments

    No comments to show.

    Archives

    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.