Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Wednesday, July 2
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»தேசியம்»தீவிரவாதிகளின் இறுதிச் சடங்கில் பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகள்: புகைப்பட ஆதாரத்துடன் இந்தியா குற்றச்சாட்டு
    தேசியம்

    தீவிரவாதிகளின் இறுதிச் சடங்கில் பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகள்: புகைப்பட ஆதாரத்துடன் இந்தியா குற்றச்சாட்டு

    adminBy adminMay 10, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    தீவிரவாதிகளின் இறுதிச் சடங்கில் பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகள்: புகைப்பட ஆதாரத்துடன் இந்தியா குற்றச்சாட்டு
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    ஜெய்ஷ் இ முகமது தீவிரவாதி அப்துல் ரவூப் அசாரின் இறுதிச் சடங்கில் பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகள் பங்கேற்றனர் என்று புகைப்பட ஆதாரத்துடன் இந்தியா குற்றம் சாட்டி உள்ளது. கடந்த 1999-ம் ஆண்டு இந்தியன் ஏர்லைன்ஸ் பயணிகள் விமான கடத்தலில் பாகிஸ்தானை சேர்ந்த தீவிரவாதி அப்துல் ரவூப் அசார் மூளையாக செயல்பட்டார். அவரது அண்ணன் மசூத் அசார் ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பின் தலைவராக உள்ளார்.

    அண்ணனும் தம்பியும் பாகிஸ்தானின் பாவல்பூரில் உள்ள ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத முகாமில் தங்கியிருந்தனர். சில நாட்களுக்கு முன்பு மசூத் அசார் அங்கிருந்து வெளியேறிவிட்டார். இந்த சூழலில் கடந்த 7-ம் தேதி இந்திய விமானப்படை பாவல்பூர் ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத முகாமின் மீது தாக்குதல் நடத்தியது. இதில் மசூத் அசாரின் தம்பி அப்துல் ரவூப் அசார் கொல்லப்பட்டார். அவரது குடும்பத்தை சேர்ந்த 10 பேரும் உயிரிழந்தனர்.

    இந்த விவகாரம் தொடர்பாக பிரிட்டனுக்கான இந்திய தூதராக பணியாற்றும் விக்ரம் துரைசாமி, தனியார் தொலைக்காட்சிக்கு லண்டனில் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது: தீவிரவாத முகாம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் தீவிரவாதி அப்துல் ரவூப் அசார் கொல்லப்பட்டு உள்ளார். அவரது இறுதிச் சடங்கில் பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர்.

    ஜெய்ஷ் இ முகமது அமைப்பின் தீவிரவாதி அப்துல் ரவூப் அசாரின்

    இறுதிச் சடங்கில் பங்கேற்ற பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகள்.

    இதுதொடர்பான புகைப்படங்கள் அனைத்து ஊடகங்களிலும் வெளியாகி உள்ளன. ஐ.நா. சபையால் சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்கப்பட்ட அப்துல் ரவூப் அசாரின் இறுதிச் சடங்கில் பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகள் பங்கேற்றிருப்பது அந்த நாட்டின் இரட்டை வேடத்தை வெளிப்படுத்துகிறது. இவ்வாறு விக்ரம் துறைசாமி தெரிவித்தார். மத்திய வெளியுறவுத் துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரியும் இதே குற்றச்சாட்டை தெரிவித்தார்.

    அவர் நேற்று முன்தினம் கூறியபோது, “இந்தியா நடத்திய தாக்குதலில் தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டு உள்ளனர். ஆனால் அவர்களின் உடல்களுக்கு பாகிஸ்தானின் தேசிய கொடி போர்த்தப்பட்டு அரசு மரியாதை அளிக்கப்பட்டு உள்ளது. தீவிரவாதிகளின் இறுதிச் சடங்கில் பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகள் பங்கேற்று உள்ளனர்” என்று தெரிவித்தார். இதுதொடர்பான புகைப்படத்தையும் இந்திய வெளியுறவுத் துறை வெளியிட்டது.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    தேசியம்

    பரமக்குடி – ராமநாதபுரம் இடையே ரூ.1,853 கோடியில் நான்கு வழிச் சாலை திட்டம்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

    July 2, 2025
    தேசியம்

    ஜிஎஸ்டியால் 8 ஆண்டுகளில் 18 லட்சம் நிறுவனங்கள் மூடல்: ராகுல் காந்தி

    July 1, 2025
    தேசியம்

    மகாராஷ்டிராவில் ஒலிபெருக்கி கட்டுப்பாடு எதிரொலி: மசூதிகளின் பாங்கு ஒலிக்கும் ‘செயலி’க்கு வரவேற்பு!

    July 1, 2025
    தேசியம்

    பெண்களுக்கான வாக்குறுதிகளை நிறைவேற்றும் தமிழகம் உள்ளிட்ட 18 மாநிலங்கள்: செலவு என்ன?

    July 1, 2025
    தேசியம்

    வேலைவாய்ப்புடன் கூடிய ஊக்கத் தொகை திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

    July 1, 2025
    தேசியம்

    பிராமணர்களுக்கு தடை விதித்த பிஹார் கிராமம் – பின்னணி என்ன?

    July 1, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • காவல் நிலைய மரணங்கள் எதிர்காலத்தில் நடக்காதவாறு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: துரை வைகோ
    • நீண்ட ஆயுளை அதிகரிக்கவும் ஆரோக்கியமான வாழ்க்கையை நடத்தவும் 3 எளிய வழிகளை சத்குரு பரிந்துரைக்கிறார்
    • தொழில், வணிக நிறுவனங்களுக்கு மின் கட்டண உயர்வு அமல்: அமைச்சர் சிவசங்கர் விளக்கம்
    • போலீஸ் விசாரணையில் அஜித்குமார் உயிரிழந்த சம்பவம்: மானாமதுரை டிஎஸ்பி பணியிடை நீக்கம்
    • அஜித்குமார் கொலை வழக்கு: ஜூலை 3-ல் சென்னையில் தவெக கண்டன ஆர்ப்பாட்டம்

    Recent Comments

    No comments to show.

    Archives

    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.