Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Thursday, August 28
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»தேசியம்»தீவிரவாதிகளின் இறுதிச் சடங்கில் பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகள்: புகைப்பட ஆதாரத்துடன் இந்தியா குற்றச்சாட்டு
    தேசியம்

    தீவிரவாதிகளின் இறுதிச் சடங்கில் பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகள்: புகைப்பட ஆதாரத்துடன் இந்தியா குற்றச்சாட்டு

    adminBy adminMay 10, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    தீவிரவாதிகளின் இறுதிச் சடங்கில் பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகள்: புகைப்பட ஆதாரத்துடன் இந்தியா குற்றச்சாட்டு
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    ஜெய்ஷ் இ முகமது தீவிரவாதி அப்துல் ரவூப் அசாரின் இறுதிச் சடங்கில் பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகள் பங்கேற்றனர் என்று புகைப்பட ஆதாரத்துடன் இந்தியா குற்றம் சாட்டி உள்ளது. கடந்த 1999-ம் ஆண்டு இந்தியன் ஏர்லைன்ஸ் பயணிகள் விமான கடத்தலில் பாகிஸ்தானை சேர்ந்த தீவிரவாதி அப்துல் ரவூப் அசார் மூளையாக செயல்பட்டார். அவரது அண்ணன் மசூத் அசார் ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பின் தலைவராக உள்ளார்.

    அண்ணனும் தம்பியும் பாகிஸ்தானின் பாவல்பூரில் உள்ள ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத முகாமில் தங்கியிருந்தனர். சில நாட்களுக்கு முன்பு மசூத் அசார் அங்கிருந்து வெளியேறிவிட்டார். இந்த சூழலில் கடந்த 7-ம் தேதி இந்திய விமானப்படை பாவல்பூர் ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத முகாமின் மீது தாக்குதல் நடத்தியது. இதில் மசூத் அசாரின் தம்பி அப்துல் ரவூப் அசார் கொல்லப்பட்டார். அவரது குடும்பத்தை சேர்ந்த 10 பேரும் உயிரிழந்தனர்.

    இந்த விவகாரம் தொடர்பாக பிரிட்டனுக்கான இந்திய தூதராக பணியாற்றும் விக்ரம் துரைசாமி, தனியார் தொலைக்காட்சிக்கு லண்டனில் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது: தீவிரவாத முகாம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் தீவிரவாதி அப்துல் ரவூப் அசார் கொல்லப்பட்டு உள்ளார். அவரது இறுதிச் சடங்கில் பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர்.

    ஜெய்ஷ் இ முகமது அமைப்பின் தீவிரவாதி அப்துல் ரவூப் அசாரின்

    இறுதிச் சடங்கில் பங்கேற்ற பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகள்.

    இதுதொடர்பான புகைப்படங்கள் அனைத்து ஊடகங்களிலும் வெளியாகி உள்ளன. ஐ.நா. சபையால் சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்கப்பட்ட அப்துல் ரவூப் அசாரின் இறுதிச் சடங்கில் பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகள் பங்கேற்றிருப்பது அந்த நாட்டின் இரட்டை வேடத்தை வெளிப்படுத்துகிறது. இவ்வாறு விக்ரம் துறைசாமி தெரிவித்தார். மத்திய வெளியுறவுத் துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரியும் இதே குற்றச்சாட்டை தெரிவித்தார்.

    அவர் நேற்று முன்தினம் கூறியபோது, “இந்தியா நடத்திய தாக்குதலில் தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டு உள்ளனர். ஆனால் அவர்களின் உடல்களுக்கு பாகிஸ்தானின் தேசிய கொடி போர்த்தப்பட்டு அரசு மரியாதை அளிக்கப்பட்டு உள்ளது. தீவிரவாதிகளின் இறுதிச் சடங்கில் பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகள் பங்கேற்று உள்ளனர்” என்று தெரிவித்தார். இதுதொடர்பான புகைப்படத்தையும் இந்திய வெளியுறவுத் துறை வெளியிட்டது.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    தேசியம்

    ஆளுநரும், முதல்வரும் ஒரே உறையில் இரண்டு வாள்களாக இருக்க முடியாது: உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்

    August 28, 2025
    தேசியம்

    சத்தீஸ்கரில் ரூ.81 லட்சம் வெகுமதி அறிவிக்கப்பட்டிருந்த 30 மாவோயிஸ்டுகள் சரண்

    August 28, 2025
    தேசியம்

    மகாராஷ்டிராவில் அடுக்குமாடி குடியிருப்பு இடிந்து விபத்து: பலி எண்ணிக்கை 15 ஆக அதிகரிப்பு

    August 28, 2025
    தேசியம்

    பருவமழையால் தத்தளிக்கும் வட மாநிலங்கள்: ஜம்மு காஷ்மீரில் உயிரிழப்பு எண்ணிக்கை 41 ஆக உயர்வு

    August 28, 2025
    தேசியம்

    தமிழகத்தில் பிஹாரிக்கள் தாக்கப்பட்டபோது ஸ்டாலின் எங்கே போனார்? – பிரசாந்த் கிஷோர்

    August 28, 2025
    தேசியம்

    ஜம்மு காஷ்மீரில் என்கவுன்ட்டர்: 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

    August 28, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • குடியரசுத் தலைவர் வருகையை முன்னிட்டு சென்னையில் செப்.2, 3 தேதிகளில் ‘ட்ரோன்’ பறக்க தடை
    • பிஸ்தா உடன் இணைக்கப்பட்ட சால்மோனெல்லா வெடிப்பு: கொட்டைகள் பெரிய சுகாதார பிரச்சினைகளை ஏற்படுத்த முடியுமா, பாதுகாப்பை எவ்வாறு உறுதிப்படுத்துவது | – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • கண்ணப்பர் திடலில் நாய் கருத்தடை மையம் அமைக்க தடை கோரிய வழக்கு: சென்னை மாநகராட்சி பதிலளிக்க உத்தரவு
    • உரிய விலை கிடைக்காமல் குறைந்த விலையில் ஏலம் போகும் வாழைத்தார்கள் – கோவை விவசாயிகள் கவலை
    • கரப்பான் பூச்சிகள் உங்கள் சமையலறைக்குள் நுழைவதைத் தடுக்க 7 எளிதான ஹேக்குகள் | – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா

    Recent Comments

    No comments to show.

    Archives

    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.