Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Wednesday, July 2
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»தேசியம்»ஆபரேஷன் சிந்தூரில் 100 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்: அனைத்து கட்சி கூட்டத்தில் ராஜ்நாத் சிங் தகவல்
    தேசியம்

    ஆபரேஷன் சிந்தூரில் 100 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்: அனைத்து கட்சி கூட்டத்தில் ராஜ்நாத் சிங் தகவல்

    adminBy adminMay 9, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    ஆபரேஷன் சிந்தூரில் 100 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்: அனைத்து கட்சி கூட்டத்தில் ராஜ்நாத் சிங் தகவல்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    புதுடெல்லி: கடந்த 22-ம் தேதி காஷ்மீரின் பஹல்காமில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர். இதற்கு பதிலடியாக கடந்த புதன்கிழமை அதிகாலை பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் செயல்படும் 9 தீவிரவாத முகாம்களை இந்திய ராணுவம் ஏவுகணைகளை வீசி அழித்தது. இந்த ராணுவ நடவடிக்கைக்கு ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்று பெயர் சூட்டப்பட்டு உள்ளது.

    இதுதொடர்பாக டெல்லியில் நேற்று அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது. மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூட்டத்துக்கு தலைமை வகித்தார். மத்திய அமைச்சர்கள், அமித்ஷா, ஜெய்சங்கர், ஜே.பி.நட்டா, நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோர் கூட்டத்தில் பங்கேற்றனர்.

    மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, திரிணமூல் காங்கிரஸ் மூத்த தலைவர் சந்தீப் பண்டோபாத்யா, திமுக எம்பி டி.ஆர்.பாலு, சமாஜ்வாதி மூத்த தலைவர் ராம் கோபால் யாதவ், ஆம் ஆத்மி மூத்த தலைவர் சஞ்சய் சிங், சிவசேனா (உத்தவ் அணி) மூத்த தலைவர் சஞ்சய் ராவத், தேசியவாத காங்கிரஸ் (சரத் பவார் அணி) மூத்த தலைவர் சுப்ரியா சுலே, மார்க்சிஸ்ட் மூத்த தலைவர் ஜான் பிரிட்டாஸ், பிஜு ஜனதா தள மூத்த தலைவர் சஸ்மத் பத்ரா, ஐக்கிய ஜனதா தள மூத்த தலைவர் சஞ்ஜய் ஜா, ஏஐஎம்ஐஎம் தலைவர் அசாதுதீன் ஓவைசி உட்பட பல்வேறு கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியதாவது: இந்த கூட்டம் அரசியலுக்கான கூட்டம் கிடையாது. நாட்டை கட்டி எழுப்புவதற்கான முக்கிய ஆலோசனைக் கூட்டம் ஆகும். இந்தியாவின் முப்படைகளும் இணைந்து ‘ஆபரேஷன் சிந்தூரை’ வெற்றிகரமாக நடத்தி உள்ளன. இந்த ராணுவ நடவடிக்கை மூலம் 100-க்கும் மேற்பட்ட பாகிஸ்தான் தீவிரவாதிகள் கொல்லப்பட்டு உள்ளனர்.

    ‘ஆபரேஷன் சிந்தூர்’ இன்னும் முடியவடையவில்லை. ராணுவ நடவடிக்கை தொடர்கிறது. இப்போதைய நிலையில் எவ்வாறு தாக்குதல் நடத்தப்பட்டது, எங்கெல்லாம் தாக்குதல் நடைபெற்று கொண்டிருக்கிறது என்பது குறித்து பகிரங்கமாக கூற முடியாது.

    முப்படைகளின் மூத்த அதிகாரிகள் மிக முக்கிய பணிகளில் பங்கேற்றிருப்பதால், அவர்களால் இந்த கூட்டத்தில் பங்கேற்க முடியவில்லை. இந்த நேரத்தில் ராணுவத்தின் நடவடிக்கைகளுக்கு அனைத்து கட்சிகளும் ஆதரவு அளிக்க வேண்டுகிறேன். இவ்வாறு அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசினார்.

    அப்போது கூட்டத்தில் பங்கேற்ற பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் ஒருமித்த குரலில் மத்திய அரசின் நடவடிக்கைகள், ராணுவ நடவடிக்கைகளுக்கு முழு ஆதரவு அளிப்பதாக உறுதி அளித்தனர்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    தேசியம்

    பரமக்குடி – ராமநாதபுரம் இடையே ரூ.1,853 கோடியில் நான்கு வழிச் சாலை திட்டம்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

    July 2, 2025
    தேசியம்

    ஜிஎஸ்டியால் 8 ஆண்டுகளில் 18 லட்சம் நிறுவனங்கள் மூடல்: ராகுல் காந்தி

    July 1, 2025
    தேசியம்

    மகாராஷ்டிராவில் ஒலிபெருக்கி கட்டுப்பாடு எதிரொலி: மசூதிகளின் பாங்கு ஒலிக்கும் ‘செயலி’க்கு வரவேற்பு!

    July 1, 2025
    தேசியம்

    பெண்களுக்கான வாக்குறுதிகளை நிறைவேற்றும் தமிழகம் உள்ளிட்ட 18 மாநிலங்கள்: செலவு என்ன?

    July 1, 2025
    தேசியம்

    வேலைவாய்ப்புடன் கூடிய ஊக்கத் தொகை திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

    July 1, 2025
    தேசியம்

    பிராமணர்களுக்கு தடை விதித்த பிஹார் கிராமம் – பின்னணி என்ன?

    July 1, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • அஜித்குமார் கொலை வழக்கு: ஜூலை 3-ல் சென்னையில் தவெக கண்டன ஆர்ப்பாட்டம்
    • தவெக கொடியில் யானை சின்னத்தை பயன்படுத்த தடை கோரிய வழக்கு: ஜூலை 3-ல் தீர்ப்பு
    • திமுக கூட்டணிக் கட்சிகளுக்கு கூடுதல் இடம் கொடுக்கப்படுமா? – முதல்வர் ஸ்டாலின் பதில்
    • அரசே தனது குடிமகனை கொலை செய்துள்ளது: அஜித்குமார் வழக்கில் நீதிமன்றம் கூறியது என்ன?
    • பள்ளி கல்வித்துறை பணியாளர்களுக்கு இடமாறுதல் கலந்தாய்வு: ஜூலை 8, 9-ம் தேதிகளில் நடைபெறுகிறது

    Recent Comments

    No comments to show.

    Archives

    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.