Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Monday, July 14
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»தேசியம்»‘போர் ஒரு தீர்வல்ல’ – இந்தியா, பாக். பேச்சுவார்த்தை நடத்த முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் வலியுறுத்தல்
    தேசியம்

    ‘போர் ஒரு தீர்வல்ல’ – இந்தியா, பாக். பேச்சுவார்த்தை நடத்த முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் வலியுறுத்தல்

    adminBy adminMay 9, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    ‘போர் ஒரு தீர்வல்ல’ – இந்தியா, பாக். பேச்சுவார்த்தை நடத்த முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் வலியுறுத்தல்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    புதுடெல்லி: எந்தவொரு பிரச்சினைக்கும் போர் ஒரு தீர்வாகாது என்பது உண்மை என தெரிவித்துள்ள அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம், இந்தியாவும் பாகிஸ்தானும் தங்கள் பிரச்சினைகளை இருதரப்பு உரையாடல்கள் மற்றும் விவாதங்கள் மூலம் தீர்க்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.

    இந்தியா – பாகிஸ்தான் இடையேயான ராணுவ மோதல் கடந்த 7-ம் தேதி முதல் தீவிரமடைந்துள்ள நிலையில், இது தொடர்பாக அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியத்தின் நிர்வாகிகளின் சிறப்பு ஆன்லைன் கூட்டத்தில், பின்வரும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது:

    இந்தியா – பாகிஸ்தான் எல்லையில் அதிகரித்து வரும் பதற்றத்தை அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் மிகுந்த கவலையுடன் பார்க்கிறது. தேசம் மற்றும் மக்களின் பாதுகாப்புக்காக எடுக்கப்படும் ஒவ்வொரு தேவையான நடவடிக்கையையும் இது ஆதரிக்கிறது. இந்த நெருக்கடியான காலங்களில், பொதுமக்கள், அரசியல் கட்சிகள், ஆயுதப்படைகள் மற்றும் அரசாங்கம் இந்த அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள ஒன்றிணைய வேண்டும் என்பதை இது வலியுறுத்துகிறது.

    பயங்கரவாதம் மற்றும் அப்பாவி பொதுமக்களைக் கொல்வது ஒரு பெரிய கவலை. இஸ்லாமிய போதனைகள், உலகளவில் அங்கீகரிக்கப்பட்ட கொள்கைகள் மற்றும் மனித விழுமியங்களில் பயங்கரவாதத்திற்கு முற்றிலும் இடமில்லை. எனவே, நாடுகள் தங்கள் பிரச்சினைகளை இருதரப்பு உரையாடல்கள் மற்றும் விவாதங்கள் மூலம் தீர்க்க வேண்டும். எந்தவொரு பிரச்சினைக்கும் போர் ஒரு தீர்வாகாது என்பதும் உண்மை. குறிப்பாக, ​​இந்தியாவும் பாகிஸ்தானும் அணு ஆயுதங்களைக் கொண்டிருக்கும்போது, போர் சரியானது அல்ல.

    அத்தகைய மோதல் இரு நாட்டு மக்களையும் தீர்க்க முடியாத சிரமங்களிலும், துன்பங்களிலும் ஆழ்த்தக்கூடும். எனவே, அனைத்து பிரச்சினைகளையும் உரையாடல் மற்றும் பிற ராஜதந்திர வழிமுறைகள் மூலம் தீர்க்க வேண்டும்.

    முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் வழக்கம் போல் அதன் வக்பை பாதுகாப்போம் (Save Waqf) பிரச்சாரத்தைத் தொடரும். இருப்பினும், தற்போதைய சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, அதன் பொதுக் கூட்டங்கள் மற்றும் நிகழ்வுகள் அடுத்த ஒரு வாரத்திற்கு (மே 16 வரை) ஒத்திவைக்கப்படுகின்றன. அதேநேரத்தில், சக குடிமக்களுடனான வட்டமேசை கூட்டங்கள், மதங்களுக்கு இடையேயான உரையாடல்கள், மசூதிகளில் பிரசங்கங்கள், மாவட்ட ஆட்சியர்களிடம் மனு அளித்தல் மற்றும் பத்திரிகையாளர் சந்திப்புகளை நடத்துதல் போன்ற உட்புற நிகழ்ச்சிகள் திட்டமிட்டபடி தொடரும்.

    தற்போதைய மோசமான நிலைமை விரைவில் தீர்க்கப்பட்டு இயல்புநிலை திரும்பும் என்று வாரியம் நம்புகிறது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    தேசியம்

    முன்னாள் வெளியுறவு செயலர் உட்பட மாநிலங்களவைக்கு 4 எம்.பி.க்களை நியமித்தார் குடியரசு தலைவர்

    July 14, 2025
    தேசியம்

    ‘உங்களது அரசமைப்பு பற்று போற்றத்தக்கது’ – நியமன எம்.பி. உஜ்வால் நிகாமுக்கு பிரதமர் வாழ்த்து

    July 13, 2025
    தேசியம்

    டெல்லியில் நடைபாதையில் உறங்கிய ஐவர் மீது பாய்ந்த சொகுசு கார்: நள்ளிரவில் பயங்கர சம்பவம்

    July 13, 2025
    தேசியம்

    பிஹார் வாக்காளர் பட்டியல் திருத்தம்: வெளிநாட்டினர் அதிகம் கண்டறியப்பட்டதாக தேர்தல் ஆணையம் தகவல்

    July 13, 2025
    தேசியம்

    ஏமனில் கொல்லப்பட்டவரின் குடும்பத்துக்கு ரூ.8.60 கோடி குருதிப் பணம் தர செவிலியர் நிமிஷா பிரியா குடும்பத்தார் முயற்சி

    July 13, 2025
    தேசியம்

    நாய் கடித்ததால் ரேபிஸ் தடுப்பூசி செலுத்துவதற்கு 20 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்ற 95 வயது மூதாட்டி

    July 13, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • புதிய போக்குவரத்து திட்டங்களுக்கு அனுமதி பெற முதல்வர் தலைமையில் விரைவில் போக்குவரத்து ஆணைய கூட்டம்
    • சென்னை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் ஜூலை 16, 17-ம் தேதிகளில் கனமழைக்கு வாய்ப்பு
    • 14 ஆண்​டு​களுக்கு பிறகு திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் இன்று கும்பாபிஷேகம்
    • தமிழகத்தில் விரைவில் மின்சார ஆட்டோ, டாக்ஸி வாகனங்களுக்கு 500 இடங்களில் பேட்டரி மாற்று, ‘சார்ஜிங்’ மையங்கள்
    • முன்னாள் வெளியுறவு செயலர் உட்பட மாநிலங்களவைக்கு 4 எம்.பி.க்களை நியமித்தார் குடியரசு தலைவர்

    Recent Comments

    No comments to show.

    Archives

    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.