Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Monday, June 30
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»விளையாட்டு»“மூன்று நோ-பால்கள் பெரும் குற்றம்!” – ஹர்திக் பாண்டியா ஒப்புதல்
    விளையாட்டு

    “மூன்று நோ-பால்கள் பெரும் குற்றம்!” – ஹர்திக் பாண்டியா ஒப்புதல்

    adminBy adminMay 7, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    “மூன்று நோ-பால்கள் பெரும் குற்றம்!” – ஹர்திக் பாண்டியா ஒப்புதல்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    மும்பை, வான்கடேயில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற த்ரில் ஐபிஎல் போட்டியில் குஜராத் டைட்டன்சிடம் மும்பை இந்தியன்ஸ் கடைசி வரை போராடி தோல்வி கண்டது. குறிப்பாக தீபக் சாஹர் கடைசி ஓவரில் முக்கியக் கட்டத்தில் வீசிய நோ-பாலும், அதற்கு முன்பாக 8=வது ஓவரில் ஹர்திக் பாண்டியா வீசிய 2 நோபால்களும் மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்டியாவினால் தோல்விக்கான காரணமாக சுட்டப்பட்டுள்ளது.

    பொதுவாக, களத்திலேயே கோபத்தைக் காட்டுபவராக தொடங்கி இப்போது சற்றே நிதானம் காட்டும் முதிர்ச்சி பெற்றிருக்கும் ஹர்திக் பாண்டியா போட்டி முடிந்த பிறகு அணியின் ஆட்டத்தை விமர்சிக்கத் தயங்க மாட்டார். ரோஹித் சர்மா போல் வழவழா கொழகொழா சாக்குப் போக்குகளெல்லாம் சொல்ல மாட்டார்.

    தான் வீசிய 8-ஆவது ஓவரில் 2 நோபால்கள் வீசியதால் அந்த ஓவரில் 18 ரன்கள் விளாசப்பட்டது. கடைசி ஓவரில் 14 ரன்களைத் தடுக்க வேண்டிய கட்டத்தில் முக்கியமான ஒரு மேட்ச் சூழ்நிலையில் தீபக் சாஹர் நோ-பால் ஒன்றை வீசினார். இதோடு திலக் வர்மா, ஷுப்மன் கில்லிற்கு (43) கேட்சை விட்டார், அப்போது கில் 35 ரன்களில் இருந்தார். ஆனால் ஹர்திக் கேட்ச் டிராப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தவில்லை என்றார்.

    “கேட்ச் டிராப் அவ்வளவு பெரிய இழப்பை ஏற்படுத்தவில்லை. ஆனால் நோ-பால்கள், என்னுடைய 2 நோ-பால்களும் தீபக் சாஹரின் கடைசி ஓவர் நோ-பாலும் நிச்சயம் என் பார்வையில் பெரும் குற்றங்களே. இத்தகையக் குற்றங்கள் போட்டியையே தாரை வார்த்து விடும். அதுதான் நடந்தது. ஆனால் ஒன்று மட்டும் பெருமையளிக்கக் கூடியது வீரர்கள் கடைசி வரை விட்டுக் க்கொடுக்காமல் விடாப்பிடியாக ஆடினர். 120% தங்களை அர்ப்பணித்தனர்.

    நிச்சயம் பிட்ச் 150 ரன்களுக்கான பிட்ச் அல்ல. அதற்கு மேல் எடுத்திருக்க வேண்டிய பிட்ச்தான் 175 ரன்களை எடுத்திருக்க வேண்டும். எனவே பேட்டிங்கில் 30 ரன்கள் குறைவாக எடுத்ததும் பெரிய காரணமாக நம் முன் நிற்கிறது. பவுலர்கள் நிச்சயம் நன்றாக வீசினர். சரியான பகுதிகளில் வீசினர். முதல் இன்னிங்ஸில் பந்து ஈரமாகவில்லை, ஆனால் 2ம் பாதியில் பந்து முழுதும் ஈரமானது. இதுவும் எங்களுக்குக் கடினமாக்கியது” என்றார்.

    பவர் ப்ளேயில் பும்ரா பிரமாதமாக வீசினார், சாய் சுதர்ஷன் விரைவில் பெவிலியன் திரும்ப ஷுப்மன் கில் நிதானம் கடைப்பிடித்தார், பவர் ப்ளே ஆட்டம் டெஸ்ட் கிரிக்கெட் போல் அமைந்தது. அதாவது பந்துகள் ஸ்விங், பவுன்ஸ் ஆனது. அதனால் நார்மல் கிரிக்கெட்டை குஜராத் டைட்டன்ஸ் ஆடினர்.

    பவர் ப்ளேயில் குஜராத் 29 ரன்களையே எடுத்தனர். பிறகு ஜாஸ் பட்லரும் ஷுப்மன் கில்லும் 72 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். ஆனால் கடைசியில் 13 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்தது குஜராத். இதனால் மழை வந்தபோது டக்வொர்த் முறையில் மும்பை அணிதான் வெற்றி நிலையில் இருந்தது. ஆனால் கூட்சி, ராகுல் திவேத்தியா குஜராத்தை கரை சேர்த்தனர்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    விளையாட்டு

    ‘என் ஊரில் ஆடுகளம் கூட இல்லை!’ – இந்திய கால்பந்து அணியில் அசத்தும் தமிழக வீராங்கனை பிரியதர்ஷினி

    June 30, 2025
    விளையாட்டு

    பயிற்சியாளர்களின் கைப்பாவையா ஷுப்மன் கில்? – ‘கேப்டன்சி’ ஒரு பார்வை

    June 30, 2025
    விளையாட்டு

    ‘இந்திய அணிக்கு ஃபீல்டிங் சரியில்லாதது பெரிய பிரச்சினை அல்ல’ – புதிர் போடும் கிரெக் சாப்பல்

    June 30, 2025
    விளையாட்டு

    சதம் விளாசி டூப்ளசி சாதனை: எம்ஐ நியூயார்க்கை வீழ்த்திய சூப்பர் கிங்ஸ் @ MLC 2025

    June 30, 2025
    விளையாட்டு

    ​விம்​பிள்​டன் டென்​னிஸ் போட்டி இன்று தொடக்​கம்!

    June 30, 2025
    விளையாட்டு

    திண்டுக்கல்லில் கால்பந்து வீரர்கள் தேர்வு!

    June 30, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • ஸ்டாண்ட்போர்டை தளமாகக் கொண்ட நரம்பியல் விஞ்ஞானி 3 நாட்களுக்குள் காலை நபராக மாற 3 சிறந்த படிகளை அறிவுறுத்துகிறார்
    • காவலாளி அஜித்குமார் மரணம்: மடப்புரத்தில் குற்றவியல் நடுவர் விசாரணை – நடந்தது என்ன?
    • இதயத்தின் வயதானது மீளக்கூடியதா? புதிய ஆய்வு ‘ஆம்’ என்று கூறுகிறது; இதய ஆரோக்கியத்தை ஆதரிக்க சில வாழ்க்கை முறை உதவிக்குறிப்புகள் இங்கே | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • ராமதாஸ் மீது திடீர் பாசமா? – அன்புமணிக்கு திருமாவளவன் விளக்கம்
    • ஆப்டிகல் மாயை: மிகவும் கவனிக்கும் கண்கள் மட்டுமே இறகுகளை வேகமாகக் காணும் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    Recent Comments

    No comments to show.

    Archives

    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.