Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Tuesday, July 1
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»தேசியம்»ஆபரேஷன் சிந்தூர்: கர்னல் சோபியா குரேஷி, விங் கமாண்டர் வியோமிகா சிங் பின்புலம் என்ன?
    தேசியம்

    ஆபரேஷன் சிந்தூர்: கர்னல் சோபியா குரேஷி, விங் கமாண்டர் வியோமிகா சிங் பின்புலம் என்ன?

    adminBy adminMay 7, 2025No Comments3 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    ஆபரேஷன் சிந்தூர்: கர்னல் சோபியா குரேஷி, விங் கமாண்டர் வியோமிகா சிங் பின்புலம் என்ன?
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    புதுடெல்லி: ‘ஆபரேஷன் சிந்தூர்’ குறித்து செய்தியாளர்களிடம் விளக்கிய கர்னல் சோபியா குரேஷி, விங் கமாண்டர் வியோமிகா சிங் ஆகிய இரு பெண் அதிகாரிகள் சமூக வலைதளங்களில் வைரலாகின்றனர்.

    கடந்த ஏப்ரல் 22-ம் தேதி காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு இந்திய ராணுவம் ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் நள்ளிரவு பதிலடி கொடுத்தது. இந்த தாக்குதல் நடவடிக்கையின் தகவல்கள் செய்தியாளர்களுக்கு இன்று (மே.7) காலை விவரிக்கப்பட்டது. முதலில் வெளியுறவுச் செயலர் விக்ரம் மிஸ்ரி பாகிஸ்தான் மீது தாக்குதல் ஏன் நடத்தப்பட்டது என்பதை விவரித்தார்.

    அப்போது அவர், ”பஹல்காம் தாக்குதல் நடந்த 15 நாட்களுக்குப் பின்னர் திட்டமிட்டு, பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்களை மட்டுமே வெகு நேர்த்தியாகக் குறிவைத்து, பொறுப்புடன் தாக்குதல் நடத்தியுள்ளோம். அங்குள்ள 9 முகாம்கள் அழிக்கப்பட்டுள்ளன. இந்த நடவடிக்கையின் மூலம் பயங்கரவாதத்தின் மீது பதிலடி கொடுக்கும் நமது உரிமையை நாம் நிலை நாட்டியுள்ளோம்.” என்று அவர் கூறினார்.

    தொடர்ந்து பெண் அதிகாரிகளான விங் கமாண்டர் வியோமிகா சிங். மற்றும் கர்னல் சோபியா குரேஷியும் தாக்குதல் எப்படி நடத்தப்பட்டது, எங்கெங்கு நடத்தப்பட்டது போன்ற விவரங்களைப் பகிர்ந்தனர். பஹல்காம் தாக்குதலை அடுத்து நீதி கோரி உயிரிழந்தவர்களின் வீட்டுப் பெண்கள் எழுப்பிய குரலைத் தொடர்ந்து இந்தத் தாக்குதல் குறித்த விவரிப்பை இரண்டு பெண் அதிகாரிகள் கொண்டு ராணுவம் எடுத்துரைத்துள்ளது. இதனையடுத்து அவர்கள் இருவரும் தேசிய அளவில் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகின்றனர்.

    யாரிந்த வியோமிகா சிங்? – விங் கமாண்டர் வியோமிகா சிங், 6 ஆம் வகுப்பு படிக்கும் போதிருந்தே விமானப் படையில் சேரும் ஆர்வம் கொண்டிருந்திருக்கிறார். ‘வியோமிகா’ என்ற அவரது பெயரின் அர்த்தம் ‘வானத்தில் வசிப்பவள்’ என்பதாகும். இதனை பள்ளியில் கூறிய நாள் முதலே தனது லட்சியக் கனவாக விமானப் படையில் சேர்வதை அவர் கொண்டிருக்கிறார். அவர் தம் பள்ளிப்படிப்பை முடித்தபோது, விமானப் படையில் பெண்கள் மிகக் குறைவான அளவில் மட்டுமே சேர்வதாகக் அறிந்துள்ளார். எனவே அவர், மத்திய அரசின் யுபிஎஸ்சி தேர்வில் மூலம் விமானப் படையில் சேரும் தகுதி பெற்றுள்ளார்.

    பின்னர் வியோமிகா இந்திய ராணுவத்தின் ஹெலிகாப்டர் விமானியானார். 13 ஆண்டுகளுக்குப் பிறகு விங் கமாண்டர் என உயர்ந்தார். கடந்த டிசம்பர் 18, 2004 அன்று இந்திய விமானப் படையில் நியமிக்கப்பட்டார்.

    தற்போது இந்திய ராணுவத்தின் சிறந்த விங் கமாண்டர்களில் ஒருவராக வியோமிகா கருதப்படுகிறார். அவருக்கு போர் ஹெலிகாப்டர்களை இயக்குவதில் சிறந்த அனுபவம் உள்ளது. சீட்டா சேதக் போன்ற போர் ஹெலிகாப்டர்களை இயக்குவதில் அவருக்கு நிபுணத்துவம் உள்ளது. வியோமிகா சிங் 2500-க்கும் மேற்பட்ட மணி நேரங்களை பறக்கும் அனுபவத்தைக் கொண்டுள்ளார்.

    கடந்த 2021 ஆம் ஆண்டு மணிராங் மலை ஏறிய விமானப் படையின் பெண்கள் பிரிவின் ஒரு பகுதியாகவும் வியோமிகா இருந்துள்ளார். இன்று, ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலுக்கு பிறகு, வியோமிகா சிங் பற்றி பரவலாக விவாதிக்கப்படுகிறது.

    ராணுவ குடும்பத்தைச் சேர்ந்த சோபியா குரேஷி! கர்னல் சோபியா குரேஷி குஜராத்தைச் சேர்ந்தவராவார். குஜராத்தின் வதோதராவாசியான சோபியா குரேஷி, இந்திய ராணுவத்தில் லெப்டினன்ட் கர்னலாக நியமிக்கப்பட்டுள்ளார். அவர் சிக்னல் கார்ப்ஸில் உள்ளார். சோபியா குரேஷி 1999 இல் ஷார்ட் சர்வீஸ் கமிஷன்(குறுகிய சேவை ஆணையம்) கீழ் ராணுவத்தில் சேர்ந்தார். அப்போது 17 வயதுதான் அவருக்கு.

    சோபியாவின் குடும்பம் ராணுவத்தில் பணியாற்றிய பின்னணியைக் கொண்டது. சோபியாவின் தாத்தாவும் ராணுவத்தில் இருந்தார். அவரது கணவர் ராணுவத்தின் இயந்திரமயமாக்கப்பட்ட காலாட்படை பிரிவில் பணியாற்றி வருகிறார். மார்ச் 2016-ல், பன்னாட்டு ராணுவப் பயிற்சியில் ராணுவப் படையை வழிநடத்தும் முதல் பெண் அதிகாரி என்ற பெருமையை சோபியா குரேஷி பெற்றார்.

    இவரது தலைமையிலான ‘உடற்பயிற்சிப் படை 18’ பயிற்சித் திட்டம் இதுவரை இல்லாத மிகப்பெரிய வெளிநாட்டு ராணுவப் பயிற்சியாகும். இதில் தென்கிழக்கு ஆசிய நாடுகளின் சங்கமான ‘ஆசியான்’ உறுப்பு நாடுகள் இடம்பெற்றன. இந்தியா, ஜப்பான், சீனா, ரஷ்யா, அமெரிக்கா, கொரியா, நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா ஆகியவை கலந்து கொண்டன. இந்த பயிற்சித் திட்டமானது, மகராஷ்டிராவின் புனேவில் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    தேசியம்

    தெலங்கானா ரசாயன ஆலை வெடிவிபத்து – உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 37 ஆக அதிகரிப்பு

    July 1, 2025
    தேசியம்

    ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு பிறகு 52 கண்காணிப்பு செயற்கைக்கோள் ஏவும் பணி தீவிரம்

    July 1, 2025
    தேசியம்

    உளவாளியாக செயல்பட ரஷ்யாவிடமிருந்து நிதியுதவி பெற்ற 150 காங்கிரஸ் எம்.பி.க்கள்: பாஜக எம்.பி. குற்றச்சாட்டு

    July 1, 2025
    தேசியம்

    ஓமன் சென்ற எண்ணெய் கப்பலில் திடீர் தீ: மீட்புப் பணிக்கு விரைந்தது இந்திய கடற்படை

    July 1, 2025
    தேசியம்

    கடந்த 10 ஆண்டுகளில் சமூக பாதுகாப்பு திட்டத்தில் பயனடைவோர் 64.3% அதிகரிப்பு

    July 1, 2025
    தேசியம்

    வேலை இல்லாததால் இந்தியாவுக்கு வர எல்லை கடந்தபோது பாக். இந்து தம்பதி பாலைவனத்தில் உயிரிழப்பு

    July 1, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • திரைப் பார்வை: மார்கன் | ஓர் இரக்கமற்ற படத்தொகுப்பாளரின் நெத்தியடி!
    • காவல்நிலைய மரணம் எதிரொலி: சிவகங்கை எஸ்பி ஆசிஷ் ரவாத் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்
    • கொழுப்பு கல்லீரல்: நீங்கள் பொருத்தமாக இருக்கிறீர்களா என்று சரிபார்க்க 5 எளிய பயிற்சிகளை மருத்துவர் பரிந்துரைக்கிறார் – இந்தியாவின் நேரங்கள்
    • ‘இந்தியாவில் டெஸ்ட் தொடரை வெல்ல வேண்டும்’ – நேதன் லயன் ஆசை!
    • அஜித்குமார் மரண வழக்கு விசாரணை சிபிசிஐடி-க்கு மாற்றம்: தமிழக அரசு உத்தரவு

    Recent Comments

    No comments to show.

    Archives

    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.