Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Tuesday, July 1
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»மறைந்த உயர் நீதிமன்ற நீதிபதி சத்யநாராயண பிரசாத்துக்கு தமிழக அரசு சார்பில் இறுதி மரியாதை
    மாநிலம்

    மறைந்த உயர் நீதிமன்ற நீதிபதி சத்யநாராயண பிரசாத்துக்கு தமிழக அரசு சார்பில் இறுதி மரியாதை

    adminBy adminMay 7, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    மறைந்த உயர் நீதிமன்ற நீதிபதி சத்யநாராயண பிரசாத்துக்கு தமிழக அரசு சார்பில் இறுதி மரியாதை
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சென்னை: சென்னையில் நேற்றிரவு மாரடைப்பால் உயிரிழந்த உயர் நீதிமன்ற நீதிபதி ஜெ.சத்யநாராயண பிரசாத்துக்கு தமிழக அரசின் சார்பில் காவல்துறை அணிவகுப்புடன் இறுதி மரியாதை செலுத்தப்பட்டு அவரது உடல் பெசன்ட் நகர் மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

    முன்னதாக அவரது உடலுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் மற்றும் தமிழக அமைச்சர்கள், உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி உள்ளிட்ட நீதிபதிகள், வழக்கறிஞர்கள் என பலரும் அஞ்சலி செலுத்தினர். சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றியவர் ஜெ.சத்யநாராயண பிரசாத் (56). நீதிபதிகளுக்கான பணிமூப்பு தரவரிசைப்பட்டியலில் 42-வது இடத்தில் உள்ளார்.

    கிரீன்வேஸ் சாலையில் உள்ள நீதிபதிகளுக்கான குடியிருப்பில் வசித்து வந்த இவருக்கு செவ்வாய்க்கிழமை இரவு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. குடும்பத்தினர் அவரை அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் மாரடைப்பால் அவர் இறந்து விட்டதை உறுதி செய்துள்ளனர். இதையடுத்து அவருடைய உடல் ஆம்புலன்ஸ் மூலமாக அவரது இல்லத்துக்கு கொண்டு வரப்பட்டது.

    இறந்த நீதிபதி ஜெ.சத்யநாராயண பிரசாத்தின் உடலுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், சேகர்பாபு, சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம் மற்றும் நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், எம்.எஸ்.ரமேஷ், எம்.வேல்முருகன், சி.வி.கார்த்திகேயன், ஆர்.எம்.டி.டீக்காராமன், ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா உள்ளிட்ட நீதிபதிகள், உயர் நீதிமன்ற தலைமைப் பதிவாளர் எஸ்.அல்லி தலைமையில் உயர் நீதிமன்ற நீதித்துறை அதிகாரிகள், மாவட்ட நீதிபதிகள், மூத்த வழக்கறிஞர்கள், நீதிமன்ற ஊழியர்கள் அஞ்சலி செலுத்தினர்.

    இதேபோல திமுக எம்.பி பி.வில்சன், தமிழக அரசின் மாநில தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா, கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஜெ.ரவீந்திரன் உள்ளிட்ட அரசு வழக்கறிஞர்கள், தமிழ்நாடு புதுச்சேரி பார் கவுன்சில் தலைவர் பி.எஸ்.அமல்ராஜ், சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் ஜி.மோகனகிருஷ்ணன், செயலாளர் ஆர்.கிருஷ்ணகுமார், மெட்ராஸ் பார் அசோசியேஷன் சங்க நிர்வாகிகள் என பலரும் அஞ்சலி செலுத்தினர்.

    அவரது உடல் புதன்கிழமை மாலை அவரது இல்லத்தில் இருந்து ஊர்வலமாக பெசன்ட் நகர் மின் மயானத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டது. அங்கு தமிழக அரசின் சார்பில் போலீஸாரின் அணிவகுப்புடன் அவருக்கு இறுதி மரியாதை செலுத்தப்பட்டு, உடல் தகனம் செய்யப்பட்டது.

    இறந்த நீதிபதி ஜெ.சத்யநாராயண பிரசாத்தின் தந்தை ஆர்.ஜெய்பிரசாத் மாவட்ட நீதிபதியாக பதவி வகித்து ஓய்வு பெற்றவர். இவரது தாயார் லட்சுமி. கடந்த 1969-ம் ஆண்டு மார்ச் 15 அன்று தஞ்சாவூரில் பிறந்த நீதிபதி ஜெ.சத்யநாராயண பிரசாத்தின் பூர்வீகம் அரக்கோணம் அருகே உள்ள மின்னல் கிராமம். வேலூரில் பள்ளிப்படிப்பை முடித்த இவர், சென்னை லயோலா கல்லூரியில் பிஏ வரலாறும், டெல்லி பல்கலைக்கழகத்தில் எம்ஏ வரலாறும் முடித்தார்.

    அதன்பிறகு டெல்லியில் சட்டப்படிப்பை முடித்த இவர், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சிலில் கடந்த 1997-ம் ஆண்டு வழக்கறிஞராக பதிவு செய்து வழக்கறிஞர் ஏ. இளங்கோவிடம் ஜூனியராக பணியாற்றினார். கடந்த 2021-ம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக பதவியேற்றார்.

    நீதிபதி ஜெ.சத்யநாராயண பிரசாத்தின் மறைவையொட்டி சென்னை உயர் நீதிமன்றத்தின் விடுமுறை கால அமர்வுகள் மற்றும் தமிழகம், புதுச்சேரியில் உள்ள கீழமை நீதிமன்றங்களுக்கு உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம் உத்தரவுப்படி, தலைமைப் பதிவாளர் எஸ்.அல்லி இன்று (மே 7) ஒருநாள் விடுமுறை அறிவித்து உத்தரவிட்டார்.

    நீதிபதியின் மறைவுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின், அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி, தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்ட பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    “கொல்லும் நோக்கம் கொண்டோர் கூட இப்படி தாக்கியிருக்க மாட்டார்கள்” – அஜித்குமார் வழக்கில் நீதிபதிகள் வேதனை

    July 1, 2025
    மாநிலம்

    காஞ்சிபுரம் தேவராஜ சுவாமி கோயில் சாய்தள பாதை பணிகளுக்கு ஐகோர்ட் அனுமதி

    July 1, 2025
    மாநிலம்

    ‘சாரி’தான் பதிலா? அஜித்குமாரின் உயிரை திருப்பித் தர முடியுமா? – முதல்வர் ஸ்டாலினுக்கு பழனிசாமி கேள்வி

    July 1, 2025
    மாநிலம்

    “தமிழகத்தில் 4 ஆண்டுகளில் 63.6% மின் கட்டணம் உயர்வு” – தொழில்முனைவோர் கூட்டமைப்பினர் விரக்தி

    July 1, 2025
    மாநிலம்

    அஜித்குமார் கொலை வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி முதல்வர் ஸ்டாலின் உத்தரவு

    July 1, 2025
    மாநிலம்

    21 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி புதுச்சேரியில் ஜூலை 9 தொழிற்சங்கங்கள் பந்த்

    July 1, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • “கொல்லும் நோக்கம் கொண்டோர் கூட இப்படி தாக்கியிருக்க மாட்டார்கள்” – அஜித்குமார் வழக்கில் நீதிபதிகள் வேதனை
    • முடி வளர்ச்சிக்கு ஃபிட்காரியை எவ்வாறு பயன்படுத்துவது | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • ‘கடையை சாத்திக் கொண்டு தென் ஆப்பிரிக்கா செல்ல நேரிடும்’ – மஸ்க்கை மிரட்டும் ட்ரம்ப்?
    • காஞ்சிபுரம் தேவராஜ சுவாமி கோயில் சாய்தள பாதை பணிகளுக்கு ஐகோர்ட் அனுமதி
    • குடல் ஆரோக்கியம்: செரிமான பிரச்சினைகளுடன் போராடுகிறீர்களா? ஹார்வர்ட் டாக்டர் இயற்கையாகவே குடலை குணப்படுத்தக்கூடிய 6 பானங்களைப் பகிர்ந்து கொள்கிறார் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    Recent Comments

    No comments to show.

    Archives

    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.