Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Tuesday, July 1
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»“முதல்வர் ஸ்டாலினிடம் வேண்டி விரும்பிக் கேட்டுக் கொள்கிறேன்!” – தொப்புள்கொடி உறவுகளுக்காக பேசும் பழ.நெடுமாறன்
    மாநிலம்

    “முதல்வர் ஸ்டாலினிடம் வேண்டி விரும்பிக் கேட்டுக் கொள்கிறேன்!” – தொப்புள்கொடி உறவுகளுக்காக பேசும் பழ.நெடுமாறன்

    adminBy adminMay 7, 2025No Comments5 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    “முதல்வர் ஸ்டாலினிடம் வேண்டி விரும்பிக் கேட்டுக் கொள்கிறேன்!” – தொப்புள்கொடி உறவுகளுக்காக பேசும் பழ.நெடுமாறன்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன். அகவை 93-ஐ எட்டினாலும் இன்னமும் தமிழர் நலனுக்காக சிந்தித்து செயலாற்றிக் கொண்டிருப்பவர். நிகழ்ச்சி ஒன்றுக்காக திருப்பூர் வந்திருந்த அவரிடம், இலங்கையை சீனா ஆக்கிரமித்து வரும் பிரச்சினை, எல்லையில் இந்தியாவுக்கு ஏற்பட்டிருக்கும் அச்சுறுத்தல்கள், உலகத் தமிழர்களின் இன்றைய நிலை உள்ளிட்டவை குறித்து பேசினோம்.

    இன்றைய சூழலில் எத்தனை நாடுகளில் தமிழர்கள் வாழ்கிறார்கள்?

    இலங்​கை, பர்​மா, மலேசி​யா, சிங்​கப்​பூர், மொரிஷியஸ், தென்​னாப்​பிரிக்கா உள்​ளிட்ட நாடு​களில் தமி​ழர்​கள் அதி​க​மாக வாழ்​கி​றார்​கள். ஆங்​கிலேயர்​களுக்கு அடுத்​த​படி​யாக உலகம் முழு​வதும் தமி​ழர்​கள் தான் அதி​க​மான நாடு​களில் வாழ்​கி​றார்​கள். இந்​நாடு​களை கைப்​பற்​றிய ஆங்​கிலேயர்​கள், ரப்​பர், தேயிலை, காபி போன்ற பணப்​ப​யிர்​களை விளைவிக்க கிரா​மப்​புற உழைப்​பாளி​களை​யும், பட்​டியலின மக்​களை​யும் இங்​கிருந்து கப்​பல், கப்​பலாக ஏற்றி இந்த நாடு​களில் குடியமர்த்​தினர். அப்​படித்​தான் இன்​றைக்கு உலகம் முழு​வதும் 70-க்​கும் மேற்​பட்ட நாடு​களில் தமி​ழர்​கள் வாழ்​கி​றார்​கள்.

    தமிழர்களின் உழைப்பால் தான் ஆங்கிலேயர்கள் தங்களை செல்வந்தர்கள் ஆக்கிக் கொண்டார்களா?

    பர்​மா​வின் ஐராவதி சமவெளிப் பகு​தி​யில் நெல் விளைவிக்க இங்​கிருந்து 3 லட்​சம் தமி​ழர்​களை கொண்டு சென்​றார்​கள். அதில் சுமார் 2 லட்​சம் பேர் காடு​களை திருத்​தும்​பணி​யில் ஈடு​பட்​ட​போது, கொடிய மிரு​கங்​கள் மற்​றும் தொற்று நோய்​கள் தாக்கி உயி​ரிழந்​தனர். மலேசி​யா​வில் ரப்​பர், தேயிலை தோட்​டங்​களுக்​காக 5 லட்​சம் தமி​ழர்​கள் கொண்டு செல்​லப்​பட்​டார்​கள். தென்​னாப்​பிரிக்​கா​வின் கரும்பு தோட்​டங்​களுக்கு தமி​ழர்​கள் கூட்​டம், கூட்​ட​மாக அழைத்​துச் செல்​லப்​பட்​டார்​கள். ஆகவே, நிச்​சய​மாக தமி​ழர்​களின் அளவற்ற உழைப்​பால்​தான், ஆங்​கிலேயர்​கள் செல்​வந்​தர்​களாக மாறி​னார்​கள்.

    ஐந்​தாறு தலை​முறைக்கு முன்பு இங்​கிருந்து அழைத்​துச் செல்​லப்​பட்ட தமி​ழர்​கள் இன்​றைக்கு அந்த நாடு​களில் உழைப்​பாலும், கல்​வி​யாலும் உயர்வு பெற்று அங்கே மக்​களவை உறுப்​பினர்​களாக​வும், அமைச்​சர்​களாக​வும், உயர் அதி​காரி​களாக​வும் இருக்​கி​றார்​கள். சிங்​கப்​பூரில் 60 சதவீதத்​துக்கு மேல் சீனர்​களும், 25 சதவீதத்​துக்கு மேல் மலேசி​யர்​களும் வாழ்​கின்​ற​னர்.

    ஆனால், 10 சதவீதம் மட்​டுமே இருக்​கும் தமி​ழர்​கள் 2 முறை அந்த நாட்​டின் குடியரசுத் தலை​வ​ராக இருந்​திருக்​கி​றார்​கள். இப்​போதும் அங்கு ஐந்​தாறு தமி​ழர்​கள் அமைச்​சர்​களாக​வும், பலர் மக்​களவை உறுப்​பினர்​களாக​வும் இருக்​கி​றார்​கள். இவர்​களின் உயர்​வுக்கு இந்​தி​யா​வோ, தமிழ்​நாடோ காரணம் அல்ல. ஒரு காலத்​தில் அடிமை​களாக வைக்கப்பட்டு இருந்​தவர்​கள் இப்​போது தங்​களது சொந்த முயற்​சி​யில் அந்​த​நாட்டை ஆட்சி செய்​யும் அளவுக்கு உயர்ந்​திருக்​கி​றார்​கள்.

    தமிழர்களாக அவர்கள் இழந்தவை எவை?

    வெளி​நாடு வாழ் தமி​ழர்​களுக்கு தாய்த்​தமி​ழர்​களு​ட​னான உறவு முற்​றி​லும் அறுந்​து​போய்​விட்​டது. இதனால், நம்​முடைய மொழி, கலை, இலக்​கி​யம், பண்​பாடு, பழக்​கவழக்​கங்​களை இழந்த நிலை​யில் அவர்​கள் வாழ்​கி​றார்​கள். தென்​னாப்​பிரிக்​கா​வில் தமி​ழர்​களின் வீட்​டுக்​குள்​ளும் ஆங்​கிலம். வீட்​டுக்கு வெளி​யிலும் ஆங்​கிலம். இந்​தநிலை மாற தாய்த்​தமி​ழர்​களின் பங்​களிப்பு மிக​வும் முக்​கி​யம். தமிழக அரசு அமைத்​துள்ள உலகத்​தமிழ்ச்​சங்​கம், தமி​ழ​ராய்ச்சி நிறு​வனம் போன்​றவை மூலம், வெளி​நாடு வாழ்​தமி​ழர்​களுக்கு இவற்​றையெல்​லாம் கற்​றுத்தர ஆசிரியர்​கள் அனுப்​பப்பட வேண்​டும்.

    அடிக்​கடி தமி​ழர்​கள் வாழும் நாடு​களுக்கு இங்​கிருந்து கலைஞர்​கள் தூதுக்​குழுக்​களாக அனுப்​பப்பட வேண்​டும். பிரிட்​டிஷ் காலனி ஆதிக்​கத்​தில் பிரிட்​டிஷ்கினியா நாடு உள்​ளது. அங்கு முதல் பிரதம​ராக செட்டி ஜெகன் என்​பவர் பதவி​யேற்​றார். அவர் தனது மூதாதையர்​கள் தமி​ழர்​கள் என்​பதை அறிந்​து, இங்கு வந்து காரைக்​குடி பகு​தி​யில் பூர்வி​கத்தை தேடிப் பார்த்​தார். அவருக்கு ஏமாற்​றமே மிஞ்​சி​யது. வெளி​நாடு​களில் தமி​ழர்​கள் வாழ்​கி​றார்​கள். ஆனால், வள்​ளலார் பாடலை ஆங்​கிலத்​தில் எழுதி வைத்​துத்​தான் பாடு​கி​றார்​கள்.

    போருக்கு பின் இலங்கை எப்படி இருக்கிறது?

    போருக்கு பின்பு ஒட்​டுமொத்​த​மாக இலங்​கை​யின் பொருளா​தா​ரம் சீர்​குலைந்​துள்​ளது. உணவுப்​பொருட்​களின் விலை சாமானிய மக்​கள் வாங்க முடி​யாத அளவுக்கு உயர்ந்​து​விட்​ட​தால் சிங்கள மக்​களே கொதித்​தெழுந்து போராடும் நிலைக்கு வந்​து​விட்​டனர்.

    இலங்கையை சீனா முழுமையாக ஆக்கிரமித்துவிட்டதாகச் சொல்வது உண்மையா?

    ஆம். சீனா அனைத்து வகை​யிலும் ஒரு வல்​லரசு. பொருளா​தார ரீதி​யிலும் சீனா வலிமை​யாக உள்​ளது. இலங்கை ஒரு சிறிய நாடு. இலங்​கை​யுடன் நட்​புறவு கொண்​டால், அந்த நாட்​டின் சந்​தையை கைப்​பற்​றலாம் என சீனா கணக்குப் போட்​டது. அதனால் இலங்​கைக்கு சீனா அள்ளி அள்​ளித் தரு​கிறது. இலங்​கை​யின் அம்​பன் தோட்டா பகு​தி​யில் சீனா பெரிய கடற்​படை தளம் அமைத்​துள்​ளது. இந்​து​மகா சமுத்​திர கடல் மார்க்​கம், வணி​கத்​துக்கு மிக​வும் முக்​கிய​மானது. வணிக போக்​கு​வரத்து அதி​கம் நடப்​பது இந்து மகாச​முத்​திரத்​தில் தான். இந்​த வணி​கப் போக்​கு​வரத்து நடக்​கும் முக்​கிய இடத்​தில் தான் சீனா தனது கடற்​படை தளத்தை அமைத்​துள்​ளது.

    இந்த விவகாரத்தில் இந்திரா, ராஜீவ் காலங்களில் இந்தியா எடுத்த ராஜதந்திர நடவடிக்கைகள் என்ன?

    திரி​கோணமலை​யில் அமெரிக்கா கடற்​படை தளம் அமைக்க ஜெய​வர்த்​தனே பேச்​சு​வார்த்தை நடத்​தி​னார். இந்​தி​ரா​காந்​தி, இந்து மகா சமுத்​திர கடலோர நாடு​களின் மாநாட்டை டெல்​லி​யில் கூட்​டி​னார். அதில், அமெரிக்​கா, சோவி​யத் என எந்த வல்​லரசுக்​கும் ராணுவத்​தளமோ, கடற்​படைத்​தளமோ அமைக்க அனு​மதி தரக்​கூ​டாது என தீர்​மானம் நிறை​வேற்​றப்​பட்​டது. இதில் ஜெய​வர்த்​தனே​யும் கையெழுத்​திட்​ட​தால் அமெரிக்கா பின்​வாங்​கியது.

    அதேசம​யம், ஜெய​வர்த்​தனேயை பழி​வாங்​கும் நோக்​கில் விடு​தலைப்​புலிகள் உட்பட 2 ஆயிரம் போராளி​களுக்கு இந்​தி​ரா​ காந்தி இந்​திய ராணுவத்​தில் ரகசிய ராணுவ பயிற்சி அளித்​தார். அவர்​களுக்கு பயிற்​சி​யுடன் ஆயுதங்​களை​யும் வழங்கி அனுப்பி வைத்​தார். சிங்கள ராணுவத்தை இவர்​கள் அடிக்க வேண்​டும் என இந்​திரா காந்தி விரும்​பி​னார். இதனிடையே இந்​தி​ரா​காந்தி இறந்​து​விட்​டார். ராஜீவ் காந்தி ஆயுதங்​களை திரும்​பப்​பெற, இந்​திய ராணுவத்தை இலங்​கைக்கு அனுப்​பி​வைத்​தார். விடு​தலைப்​புலிகளுக்கு செய்​யும் உதவி, நாளை தமிழ்​நாட்​டுக்​கும் ஆபத்​தாக வரலாம் என தவறான தகவல் தரப்​பட்​டதே அதற்​குக் காரணம்.

    எல்லையில் நமக்கு அதிகம் தொல்லை கொடுப்பது யார்?

    சீனா தான். ராஜபக்ச ஆட்​சிக்கு வந்​ததும், இந்​தி​யா​வின் அழுத்​தம் இருக்​கும் வரை ஈழத்​தமி​ழர்​களை நாம் எது​வும் செய்ய முடி​யாது என நினைத்து சீனா​வுடன் கைகோத்​தார். அம்​பன் தோட்டா துறை​முகம், கொழும்பு துறை​முகம், ரயில் பாதை மற்​றும் சாலை​கள் அமைப்​பது என பல்​லா​யிரம் கோடிகளை இலங்​கைக்கு தந்​தது சீனா. அதனால் தான் இன்​றைக்கு அங்கு சீனா​வின் கை ஓங்கி இருக்​கிறது. இதன் மூலம் இந்​தி​யா​வுக்​கும் எல்​லை​யோரத்​தில் அபா​யம் அதி​கரித்​துள்​ளது.

    நேரு காலத்​தில் இலங்கை நம்​முடைய நட்பு நாடு என்று நம்​பி​னார். அதனால் வட இந்​தி​யா​வில் உள்ள ராணுவ முக்​கி​யத்​து​வம் வாய்ந்த அமைப்​பு​களை தென்​னிந்​தி​யா​வுக்கு மாற்​றி​னார். தென்​னிந்​தி​யா​வில் 700-க்​கும் மேற்​பட்ட ராணுவ தளவாட உற்​பத்தி தொழிற்​சாலை​கள் இருக்​கின்​றன. இப்​போது இலங்​கை​யில் சீனா காலூன்​றி​யிருப்​ப​தன் மூலம், தென்​னிந்​தி​யா​வில் இருக்​கும் நம்​முடைய ராணுவ அமைப்​பு​களுக்​கும் பேர​பா​யம் ஏற்​பட்​டுள்​ளது. ஈழத்​தமி​ழர்​களுக்கு ஏற்​பட்​டுள்ள அபா​யத்தை விட இது பேர​பா​யம் என்​பதை டெல்​லி​யில் இருப்​பவர்​கள் உணர்ந்​த​தாகத் தெரிய​வில்​லை.

    பிரதமர் மோடியின் சமீபத்திய இலங்கை பயணம்..?

    கோடி, கோடி​யாக அள்​ளித்​தந்​து, இலங்​கையை நம்​பக்​கம் திருப்​பி​விடலாம் என மோடி தப்​புக்​கணக்கு போடு​கி​றார். ஆனால், இலங்​கை​யால் சீனா உடனான உறவை கைவிடவே முடி​யாது. அவ்​வளவு கடனை சீனா அள்​ளித்​தந்​துள்​ளது. இலங்​கை​யின் உட்​கட்​டமைப்​பில் சீனா வலு​வாக காலூன்றி உள்​ளது. சீனா​வின் உளவுக்​கப்​பல் இலங்கை எல்​லைக்கு அடிக்​கடி வந்து செல்​கிறது. இந்​தி​யாவை சுற்றி உள்ள அனைத்து நாடு​களி​லும் சீனா​வின் ஆதிக்​கம் உள்​ளது. இதை இந்​தியா எப்​படி எதிர்​கொள்​ளப் போகிறது என்று தெரிய​வில்​லை.

    தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையின் தாக்குதல் தொடர்கதையாகவே இருக்கிறதே..?

    தமிழக மீன​வர்​களை இந்​திய குடிமக்​களாகவே இந்​திய அரசு கருத​வில்​லை. அதைத் தெரிந்து கொண்டு இலங்கை கடற்​படை​யினர் எடுத்த எடுப்​பில் சுடு​கி​றார்​கள்; சிறைபிடித்​துச் செல்​கி​றார்​கள். இது​வரை 800-க்​கும் அதி​க​மானோர் சுட்​டுக்​கொல்​லப்​பட்​டுள்​ளனர். அந்​நிய நாட்டு ராணுவம் சுட்​டுக்​கொல்​கிறது என்​றால், அதற்கு பதில் நடவடிக்கை இந்​தி​யா​விடம் எது​வும் இல்​லை.

    இப்​போது, ராணுவம் சுட்​டால் தானே பிரச்​சினை என்று சொல்லி கடற்​கொள்​ளை​யர்​களை வைத்து தாக்​கு​கி​றார்​கள். கச்​சத்​தீவை திரும்ப பெற்​றாலும் மீன​வர் பிரச்​சினை தீரா​து. கச்​சத்​தீவை திரும்ப பெறு​வதற்​கான வழி​யும் இல்​லை. ஏனென்​றால், சாஸ்​திரி – சிறி​மாவோ உடன்​படிக்​கை​யில் கச்​சத்​தீவு இலங்​கைக்கு சொந்​த​மானது என ஒப்​புக்​கொள்​ளப்​பட்​டுள்​ளது. ஒப்​புக்​கொண்ட பிறகு திரும்ப எப்​படி கேட்க முடி​யும்?

    மத்திய, மாநில அரசுகளிடம் உலகத் தமிழர் பேரமைப்பு எதிர்பார்ப்பது என்ன?

    உலக நாடு​களில் உள்ள தமிழ் குழந்​தைகளுக்கு தமிழ்ச்​சங்​கம் மூலம் தமிழ் கற்​றுத்தர வேண்​டும். இதை செய்ய வேண்​டியது தாய்த்​தமிழ் உறவு​களான நமது கடமை. தமிழ்​நாடு முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் இது தொடர்​பாக ஒரு திட்​டத்தை அறி​வித்​துள்​ளார். அந்த திட்​டத்தை முழு​மை​யாக நிறை​வேற்ற மாநில அரசின் கையில் அதி​காரம் இல்​லை. இந்​திய அரசு தான் இதனைச் செய்ய வேண்​டும்.

    உலக தமிழ் குழந்​தைகளுக்கு தமிழ் கற்​றுத்தர வானொலி மற்​றும் தொலைக்​காட்​சிகளில் ஒரு நாளைக்கு சுமார் 2-3 மணி நேரத்தை ஒதுக்க வேண்​டும். அதன் மூலம் தமிழ் குழந்​தைகளுக்கு தமிழ் பாடம் சொல்​லித்தர வேண்​டும். குறைந்​த​பட்​சம் தமி​ழர்​கள் அதி​க​மாக வாழும் இலங்​கை, பர்​மா, மலேசி​யா, சிங்​கப்​பூர், மொரிஷியஸ் போன்ற நாடு​களிலா​வது தமி​ழர்​களை இந்​தி​யத் தூது​வர்​களாக நியமிக்க தமிழ்​நாடு அரசு இந்​திய அரசை வலி​யுறுத்த வேண்​டும்.

    புலம்பெயர்ந்த இலங்கை தமிழர்களுக்காக தமிழக அரசும் திட்டங்களை தந்து வருகிறதுதானே?

    1983-ம் ஆண்​டுக்கு பிறகு புலம்​பெயர்ந்த ஈழத்​தமி​ழர்​கள் உலகெங்​கும் சுமார் 15 லட்​சம் பேர் வாழ்​கி​றார்​கள். கனடா போன்ற நாடு​களில் 3 ஆண்​டு​களில் குடி​யுரிமை கிடைக்​கிறது. இலங்​கை​யில் இருந்து வந்த தமி​ழர்​கள் இந்​தி​யா​வில் அரசுப் பள்​ளி​களில் படிக்​கி​றார்​கள். பட்​டம் பெறுகி​றார்​கள். ஆனால், அரசாங்க வேலை​வாய்ப்பு இல்​லை. அவர்​களுக்கு வேலை​வாய்ப்பை வழங்க வேண்​டியது அரசின் கடமை. இதனை தமிழ்​நாடு முதல்​வர் மு.க.ஸ்​டாலினிடம் வேண்டி விரும்​பிக் கேட்​டுக்​கொள்​கிறேன்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    காஞ்சிபுரம் தேவராஜ சுவாமி கோயில் சாய்தள பாதை பணிகளுக்கு ஐகோர்ட் அனுமதி

    July 1, 2025
    மாநிலம்

    ‘சாரி’தான் பதிலா? அஜித்குமாரின் உயிரை திருப்பித் தர முடியுமா? – முதல்வர் ஸ்டாலினுக்கு பழனிசாமி கேள்வி

    July 1, 2025
    மாநிலம்

    “தமிழகத்தில் 4 ஆண்டுகளில் 63.6% மின் கட்டணம் உயர்வு” – தொழில்முனைவோர் கூட்டமைப்பினர் விரக்தி

    July 1, 2025
    மாநிலம்

    அஜித்குமார் கொலை வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி முதல்வர் ஸ்டாலின் உத்தரவு

    July 1, 2025
    மாநிலம்

    21 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி புதுச்சேரியில் ஜூலை 9 தொழிற்சங்கங்கள் பந்த்

    July 1, 2025
    மாநிலம்

    பாமக-வை சிதைக்கும் நோக்கத்துடன் திமுக செயல்படுகிறது: கட்சி நிர்வாகிகள் கூட்டாக பேட்டி

    July 1, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • காஞ்சிபுரம் தேவராஜ சுவாமி கோயில் சாய்தள பாதை பணிகளுக்கு ஐகோர்ட் அனுமதி
    • குடல் ஆரோக்கியம்: செரிமான பிரச்சினைகளுடன் போராடுகிறீர்களா? ஹார்வர்ட் டாக்டர் இயற்கையாகவே குடலை குணப்படுத்தக்கூடிய 6 பானங்களைப் பகிர்ந்து கொள்கிறார் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • ‘சாரி’தான் பதிலா? அஜித்குமாரின் உயிரை திருப்பித் தர முடியுமா? – முதல்வர் ஸ்டாலினுக்கு பழனிசாமி கேள்வி
    • மெக்ஸிகோவின் பொம்மைகளின் தீவு: மரங்களிலிருந்து தொங்கும் சிதைந்துபோகும் பொம்மைகளுக்குப் பின்னால் உள்ள உண்மை என்ன
    • யூடியூப் வீடியோ பார்த்து பயிற்சி; ஸ்டம்பர் பந்து டூ டிஎன்பிஎல் – உத்வேகம் தரும் கனிபாலன்!

    Recent Comments

    No comments to show.

    Archives

    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.