Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Thursday, August 28
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»உலகம்»பஹல்காம் பயங்கரம் | ”முடிந்த அனைத்து உதவிகளையும் இந்தியாவுக்கு வழங்குவோம்”: அமெரிக்க சபாநாயகர்
    உலகம்

    பஹல்காம் பயங்கரம் | ”முடிந்த அனைத்து உதவிகளையும் இந்தியாவுக்கு வழங்குவோம்”: அமெரிக்க சபாநாயகர்

    adminBy adminMay 6, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    பஹல்காம் பயங்கரம் | ”முடிந்த அனைத்து உதவிகளையும் இந்தியாவுக்கு வழங்குவோம்”: அமெரிக்க சபாநாயகர்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    வாஷிங்டன்: பயங்கரவாதத்துக்கு எதிரான போராட்டத்தில் இந்தியாவுக்கு ஆதரவளிக்க அனைத்து விதமான முயற்சிகளையும் அமெரிக்க மேற்கொள்ளும் என்று அந்நாட்டு பிரதிநிதிகள் சபையின் சபாநாயகர் மைக் ஜான்சன் தெரிவித்துள்ளார். அமெரிக்காவுக்கு இந்தியா பல வழிகளில் மிகவும் முக்கியமான நட்பு நாடு என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

    ஜம்மு காஷ்மீரில் கடந்த மாதம் 22ம் தேதி நடந்த கொடூரத் தாக்குதலைத் தொடர்ந்து எல்லை தாண்டிய பயங்கரவாதம் தொடர்பாக பாகிஸ்தான் மீது குற்றம்சாட்டி அந்நாட்டுக்கு எதிரான நடவடிக்கைகளை இந்தியா கடுமையாக்கி வரும் நிலையில் அமெரிக்க சபாநாயகர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், “இந்தியா பல வழிகளில் அமெரிக்காவுக்கு மிகவும் முக்கியமான கூட்டாளி என்று நான் கருதுகிறேன். இந்தியா பயங்கரவாதத்துக்கு எதிராக நிற்க வேண்டும். அந்த முயற்சிகளுக்கு ஆதரவளிக்கும் வகையில் முடிந்த அனைத்தையும் செய்வோம். தீவிரவாதத்துக்கு எதிரான போரட்டத்துக்கு அதிபர் ட்ரம்ப் நிர்வாகம் இந்தியாவுக்குத் தேவையான ஆற்றல் மற்றும் வளங்களை வழங்கும்.

    ட்ரம்ப் நிர்வாகம் இந்தியா அமெரிக்கா உறவின் முக்கியத்துவத்தை உணர்ந்துள்ளது. அதேபோல், பயங்கரவாத அச்சுறுத்தல் குறித்த முக்கியத்துவத்தையும் உணர்ந்துள்ளது. அந்த அச்சுறுத்தல் அதிகரிக்கும் போது அதற்கு எதிரான போராட்டத்துக்கு உதவ ட்ரம்ப் நிர்வாகம் அதில் அதிக கவனம் செலுத்தி அதற்காக அதிக வளங்களையும், நேரத்தையும் செலவழிக்கும் என்பது எனது நம்பிக்கை.” இவ்வாறு அவர் பேசினார்.

    கடந்த மாதம் 22-ம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் சுற்றுலா தலத்தில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 26 அப்பாவி சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர். இந்த கொடூர தாக்குதலை நடத்தியது பாகிஸ்தான் ஆதரவு பெற்ற லஷ்கர்-இ-தொய்பா என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் அந்த தீவிரவாதிகளுக்கு பாகிஸ்தான் ராணுவத்தின் உளவு அமைப்பு தேவையான உதவிகளை செய்து கொடுத்து இருப்பதும் தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) நடத்திய முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

    இந்தத் தாக்குதலைக் கண்டித்திருந்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப், “பயங்கரவாதத்துக்கு எதிராக இந்திய மக்களுடன் அமெரிக்கா உறுதியாக நிற்கிறது. பிரதமர் மோடி மற்றும் இந்திய மக்களுக்கு எங்களின் முழு ஆதரவும், அனுதாபங்களும் உண்டு” என்று தெரிவித்திருந்தார்.

    தாக்குதல் சம்பவத்தைத் தொடர்ந்து, “இரு நாடுகளுக்கும் இடையிலான சூழலை அமெரிக்கா உன்னிப்பாக கவனித்து வருகிறது. இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாட்டு அரசுடன் நாங்கள் தொடர்பில் இருக்கிறோம். இந்தியா – பாகிஸ்தான் இடையே உரிய தீர்வு காண அமெரிக்கா ஊக்குவிக்கிறது. அதே நேரத்தில் பஹல்காமில் நடந்த தீவிரவாத தாக்குதலை அமெரிக்கா வன்மையாக கண்டிக்கிறது. இந்த விஷயத்தில் நாங்கள் இந்தியாவின் பக்கம் நிற்கிறோம்” என அமெரிக்க அரசு துறையின் செய்தித் தொடர்பாளர் கூறியிருந்தார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    உலகம்

    இந்தியா – பாகிஸ்தான் உட்பட 7 போர்களை நிறுத்தியுள்ளேன்: அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கருத்து

    August 27, 2025
    உலகம்

    வட கொரிய அதிபர் கிம்மை மீண்டும் சந்திக்க விரும்புகிறேன்: டொனால்டு ட்ரம்ப்

    August 26, 2025
    உலகம்

    இந்தியா – பாக் மோதலின்போது 7 ஜெட் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன: மீண்டும் ட்ரம்ப் சர்ச்சைப் பேச்சு

    August 26, 2025
    உலகம்

    நாளை முதல் இந்தியப் பொருட்களுக்கு 50% வரி: வரைவு அறிவிப்பை வெளியிட்டது அமெரிக்கா

    August 26, 2025
    உலகம்

    காசா மருத்துவமனை மீது இஸ்ரேல் தாக்குதல்: பத்திரிகையாளர்கள் 5 பேர் உட்பட 20 பேர் உயிரிழப்பு

    August 26, 2025
    உலகம்

    மேற்கத்திய நாடுகள் குடியேற்ற விதிகளை கடுமையாக்கிய நிலையில் இந்தியர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் ரஷ்யா

    August 26, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • நாயகனாக அறிமுகமாகும் கண்ணா ரவி
    • கோடநாடு பங்களாவை ஆய்வு செய்ய அனுமதி கிடையாது: மனுவை தள்ளுபடி செய்து நீதிமன்றம் உத்தரவு
    • 30 மற்றும் விரைவில் கர்ப்பத்தைத் திட்டமிடவில்லையா? இந்த சோதனையை முடிக்க டாப் கினாக் அறிவுறுத்துகிறார் | – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • நிஜ சிங்கத்துடன் படமாக்கப்படும் ‘சிங்கா’
    • மேட்டூர் அணை நீர்மட்டம் 119 அடியாக சரிவு

    Recent Comments

    No comments to show.

    Archives

    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.