Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Tuesday, July 1
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»தேசியம்»ராணுவ நடவடிக்கை மூலம் ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்க இந்தியா திட்டம்?
    தேசியம்

    ராணுவ நடவடிக்கை மூலம் ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்க இந்தியா திட்டம்?

    adminBy adminMay 6, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    ராணுவ நடவடிக்கை மூலம் ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்க இந்தியா திட்டம்?
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    புதுடெல்லி: ராணுவ நடவடிக்கை மூலம் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியை இந்தியாவுடன் இணைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படலாம் என்று சர்வதேச பாதுகாப்பு நிபுணர்கள் கணித்துள்ளனர்.

    கடந்த மாதம் 22-ம் தேதி ஜம்மு – காஷ்மீரின் பஹல்காமில் தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் இந்தியாவை சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் 26 பேர் உயிரிழந்தனர். பாகிஸ்தான் ஆதரவு பெற்ற தீவிரவாத அமைப்புதான் இந்த தாக்குதலை நடத்தியதாக இந்தியா குற்றம்சாட்டியுள்ளது. இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து பாகிஸ்தானுடனான அனைத்து உறவுகளையும் இந்தியா படிப்படியாக துண்டித்து வருகிறது.

    சிந்து நதிநீர் ஒப்பந்தம் ரத்து, பாகிஸ்தான் பொருட்களை இறக்குமதி செய்ய தடை, பாகிஸ்தான் விமானங்கள் இந்திய வான்வெளியில் பறக்க தடை, பாகிஸ்தானியர்கள் வெளியேற்றம், பாகிஸ்தான் தூதரக அதிகாரிகளை வெளியேற்றுதல் என தொடர்ந்து இந்தியா அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

    இதனால் இந்தியா, பாகிஸ்தான் இடையே போர்ப் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த பதற்றத்தை தணிக்க வேண்டும் என உலக நாடுகள் கோரிக்கை விடுத்து வருகின்றன. இந்த நிலையில் ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் நேற்று அவசரமாக கூடியது. கூட்டத்தில் பாகிஸ்தானின் ஆதரவு பெற்ற தீவிரவாத அமைப்பினர் பஹல்காமில் ந டத்திய தாக்குதல் குறித்து இந்தியாவின் சார்பில் பங்கேற்ற பிரதிநிதி கடும் கண்டனத்தை பதிவு செய்ததாகத் தெரிகிறது.

    அதேபோல், பாகிஸ்தான் மீதான இந்தியாவின் ஆக்ரோஷமான நடவடிக்கை, சிந்து நதிநீர் ஒப்பந்தம் ரத்து உள்ளிட்டவை தொடர்பாக பாகிஸ்தான் சார்பிலும் புகார் பதிவு செய்யப்பட்டதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

    ஆக்கிரமிப்பு காஷ்மீர் மீட்பு? – பாகிஸ்தான் மீது என்ன வகையான தாக்குதல் நடத்தப்படும் என்பது குறித்து சர்வதேச பாதுகாப்பு நிபுணர்கள் கூறியதாவது: பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் உள்ள ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் இருந்தே ஜம்மு காஷ்மீருக்குள் தீவிரவாதிகள் ஊடுருவி வருகின்றனர். 2014-ல் உக்ரைனின் கிரிமியா பகுதியை ரஷ்யா தன்னுடன் இணைத்துக் கொண்டது.

    இதேபோல ராணுவ நடவடிக்கை மூலம் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியை இந்தியாவுடன் இணைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படலாம். சிம்லா ஒப்பந்தத்தை பாகிஸ்தான் அரசு ரத்து செய்திருக்கிறது. இது இந்தியாவுக்கு சாதகமானதாக அமைந்திருக்கிறது.

    கடந்த காலங்களில் இந்தியா, பாகிஸ்தான் எல்லைப் பகுதிகளில் மட்டுமே போர் நடைபெற்றிருக்கிறது. இந்த முறை இந்திய விமானப் படை பாகிஸ்தானின் மேற்கு, வடக்கு எல்லைப் பகுதிகள் மீதும் தாக்குதல் நடத்த வாய்ப்பு இருக்கிறது. அதாவது பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள குவாதர் துறைமுகம், அந்த மாகாண விமானப்படை தளங்களை இந்திய போர் விமானங்கள் தாக்கலாம்.

    மத்திய ஆசிய நாடான தஜிகிஸ்தானின் ரூடாகி நகரில் இந்திய விமானப் படையின் ரகசிய தளம் உள்ளது. அங்கு சுகோய் ரக போர் விமானங்கள் தயார் நிலையில் நிறுத்தப்பட்டு உள்ளன. இந்த தளத்தில் இருந்து பாகிஸ்தானின் மேற்கு, வடக்கு பகுதியில் தாக்குதல் நடத்தப்படலாம்.

    ஆப்கன் முன்னாள் துணை அதிபர் அம்ருல்லா சலே சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், ‘இந்தியா தனது எதிரிக்கு மின்சார நாற்காலி தண்டனையை நிறைவேற்ற திட்டமிடவில்லை. மாறாக எதிரியின் கழுத்தை சுற்றி நீளமான கயிறால் இறுக்கி வருகிறது’ என்று கூறியுள்ளார். தற்போதைய சூழலில் ஆப்கன் முன்னாள் துணை அதிபரின் கருத்து முக்கியத்துவம் வாய்ந்தது. இவ்வாறு அவர்கள் கூறினர்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    தேசியம்

    தெலங்கானா ரசாயன ஆலை வெடிவிபத்து: உயிரிழப்பு 12 ஆக அதிகரிப்பு – நடந்தது என்ன?

    July 1, 2025
    தேசியம்

    தந்தை பேச்சை கேட்காத மனோஜித் மீது ஏற்கெனவே பல்வேறு வழக்குகள் உள்ளன: கொல்கத்தா போலீஸ் தகவல்  

    July 1, 2025
    தேசியம்

    65 ஆண்டுக்கு பிறகு ஜூன் மாதத்தில் கிருஷ்ணராஜ சாகர் அணை நிரம்பியது: பூஜை செய்து வழிபட்ட சித்தராமையா

    July 1, 2025
    தேசியம்

    வனத்துறை, நெடுஞ்சாலைத் துறை இடையே மோதல்: ரூ.100 கோடி சாலையின் நடுவே மரங்கள்

    July 1, 2025
    தேசியம்

    தெலுங்கு மாநிலங்களில் பாஜக தலைவர்கள் மாற்றம்: கட்சி எம்எல்ஏ ராஜினாமா

    July 1, 2025
    தேசியம்

    பயணிகள் ரயில் கட்டணம் உயர்வு: எத்தனை கி.மீ.-க்கு எவ்வளவு அதிகரிப்பு?

    June 30, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • சென்னையில் மின்சாரப் பேருந்துகள் இயக்கம்: வழித்தடங்கள், சிறப்பு அம்சங்கள் என்னென்ன?
    • சட்டம் ஒழுங்கை பாதுகாத்து நீதியை நிலைநாட்டுங்கள்: காவல் உயர் அதிகாரிகளுக்கு முதல்வர் அறிவுறுத்தல்
    • லாக்கப் மரணங்கள்: காவல் துறைக்கு முதல்வர் ஸ்டாலின் கடும் எச்சரிக்கை
    • டாஸ்மாக் கடைகளை அரசு நடத்த வேண்டிய அவசியம் என்ன? – ஐகோர்ட் கேள்வி
    • தெலங்கானா ரசாயன ஆலை வெடிவிபத்து: உயிரிழப்பு 12 ஆக அதிகரிப்பு – நடந்தது என்ன?

    Recent Comments

    No comments to show.

    Archives

    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.