Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Saturday, June 28
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»விளையாட்டு»ENG vs IND: கே.எல்.ராகுல், ரிஷப் பந்த் சதம்: இந்தியா பொறுப்பான ஆட்டம்!
    விளையாட்டு

    ENG vs IND: கே.எல்.ராகுல், ரிஷப் பந்த் சதம்: இந்தியா பொறுப்பான ஆட்டம்!

    adminBy adminJune 23, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    ENG vs IND: கே.எல்.ராகுல், ரிஷப் பந்த் சதம்: இந்தியா பொறுப்பான ஆட்டம்!
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    லீட்ஸ்: இங்கிலாந்து அணி உடனான லீட்ஸ் டெஸ்ட் போட்டியில் இரண்டாவது இன்னிங்ஸில் 300+ ரன்கள் என்ற முன்னிலையை பெற்றுள்ளது இந்திய அணி. இதற்கு கே.எல்.ராகுல் மற்றும் ரிஷப் பந்த் இடையிலான அபார கூட்டணி முக்கிய காரணமாக அமைந்தது. இருவரும் அடுத்தடுத்து சதம் கடந்து அசத்தினர்.

    இங்கிலாந்தின் லீட்ஸ் நகரில் நடைபெற்று வரும் இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்து வீச முடிவு செய்தது. இதையடுத்து, இந்தியா இந்த போட்டியில் முதலில் பேட் செய்தது. இரு அணிகளும் முதல் இன்னிங்ஸில் முறையே 471 (இந்தியா) மற்றும் 465 (இங்கிலாந்து) ரன்கள் எடுத்தான்.

    6 ரன்கள் முன்னிலை உடன் இரண்டாவது இன்னிங்ஸை இந்தியா தொடங்கியது. 2 விக்கெட் இழப்புக்கு 90 ரன்கள் எடுத்த நிலையில் மூன்றாம் நாள் ஆட்டம் முடிந்தது. இன்று (ஜூன் 23) நான்காம் ஆட்டம் தொடங்கியது. இந்த நாளில் இங்கிலாந்து தரப்பில் வீசப்பட்ட 7-வது பந்தில் இந்திய கேப்டன் ஷுப்மன் கில் ஆட்டம் இழந்தார். பிரைடன் கார்ஸ் வீசிய பந்து அவரது பேட்டில் பட்டு இன்ஸைட் எட்ஜ் ஆகி ஸ்டம்புகளை தகர்த்தது. தொடர்ந்து ரிஷப் பந்த் களத்துக்கு வந்தார். அவருடன் இணைந்து கே.எல்.ராகுல் பொறுப்பாக ஆடினார்.

    முதல் செஷனில் நிதானம்: 4-ம் நாள் ஆட்டத்தின் முதல் செஷனில் இந்தியா 24.1 ஓவர்கள் ஆடி ஒரு விக்கெட் இழப்புக்கு 63 ரன்கள் மட்டுமே எடுத்தது. இங்கிலாந்து அணியின் பவுலர்கள் தங்களது லைன் மற்றும் லெந்த் சார்ந்து துல்லியமாக இருந்தனர். ஆடுகள சூழலும் அவர்களுக்கு உதவியது. இந்த செஷனில் இந்தியாவின் ரன் ரேட் வெறும் 2.60 என இருந்தது.

    அதிரடி மோடில் ரிஷப் பந்த்: உணவு நேர முடிவுக்கு பிறகு தொடங்கிய இரண்டாவது செஷனில் பந்த் தனது ஆட்டத்தில் வேகத்தை கூட்டினார். 83 பந்துகளில் அவர் அரை சதம் கடந்தார். மறுமுனையில் 202 பந்துகளை எதிர்கொண்டு சதம் விளாசினார் கே.எல்.ராகுல்.

    அரை சதம் கடந்த பிறகு வெறும் 21 பந்துகளில் 90 ரன்களை எட்டினர் பந்த். அதன் பிறகு 100 ரன்களை கடக்க கொஞ்சம் டைம் எடுத்துக் கொண்டார். 130 பந்துகளில் பந்த் சதம் கடந்தார். இந்த போட்டியின் முதல் இன்னிங்ஸிலும் அவர் சதம் எடுத்திருந்தார். 140 பந்துகளில் 118 ரன்கள் எடுத்த நிலையில் பஷீர் சூழலில் தனது விக்கெட்டை இழந்தார் பந்த். 15 பவுண்டரி, 3 சிக்ஸர்களை அவர் விளாசி இருந்தார். அதன் மூலம் கே.எல்.ராகுல் மற்றும் பந்த் இடையிலான 195 ரன்கள் கூட்டணி முடிவுக்கு வந்தது. ராகுல் 137 ரன்களில் ஆட்டமிழந்தார்.

    இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸில் 86 ஓவர்களுக்கு 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 335 ரன்கள் எடுத்துள்ளது. இதன் மூலம் ஆட்டத்தில் 340+ ரன்கள் முன்னிலையில் உள்ளது இந்தியா. கருண் நாயர் 20 ரன்களில் ஆட்டமிழந்தார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    விளையாட்டு

    டி20-யில் முதல் சதம் விளாசிய ஸ்மிருதி மந்தனா: இங்கிலாந்துக்கு எதிராக அபாரம்!

    June 28, 2025
    விளையாட்டு

    முதல் டெஸ்ட் போட்டியில் பந்துவீச்சு சொதப்பியது எப்படி? – பிரசித் கிருஷ்ணா ஓபடன் டாக்

    June 28, 2025
    விளையாட்டு

    ஹேசில்வுட் அபார பவுலிங்: மே.இ.தீவுகளை ஊதித்தள்ளி ஆஸி. வெற்றி!

    June 28, 2025
    விளையாட்டு

    இந்​திய தடகள வீராங்​கனை சஸ்​பெண்ட்

    June 28, 2025
    விளையாட்டு

    இலங்கைக்கு எதிரான டெஸ்ட்: இன்னிங்ஸ் தோல்வியை தவிர்க்க போராடும் வங்கதேசம்

    June 28, 2025
    விளையாட்டு

    நெல்லை ராயல்ஸ் கிங்ஸை வீழ்த்திய திண்டுக்கல் டிராகன்ஸ்!

    June 28, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • கிராம சுகாதார செவிலியர்கள் ஜூலை 10-ல் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம்
    • உத்தரகண்ட் பயணம், உத்தரகண்ட் சுற்றுலா, உத்தரகண்டில் பார்வையிட வேண்டிய இடங்கள், உத்தரகண்டில் செய்ய வேண்டிய விஷயங்கள், உத்தரகண்டில் உள்ள மலை நிலையங்கள் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • டி20-யில் முதல் சதம் விளாசிய ஸ்மிருதி மந்தனா: இங்கிலாந்துக்கு எதிராக அபாரம்!
    • போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் கைதான நடிகர் கிருஷ்ணா ஜாமீன் கோரி மனு
    • உணவு லேபிள்களைப் படிப்பது போதாது! இந்த அன்றாட பொருட்கள் ஆரோக்கியத்திற்கு அழிவை ஏற்படுத்துகின்றன; ஏன் என்று தெரியும் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    Recent Comments

    No comments to show.

    Archives

    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.