சென்னை: 71-வது தமிழ்நாடு சீனியர் வாலிபால் சாம்பியன்ஷிப் போட்டி சென்னையில் நடைபெற்று வருகிறது.
இதில் நேற்று மகளிர் பிரிவில் அரை இறுதி ஆட்டங்கள் நடைபெற்றன. முதல் அரை இறுதி ஆட்டத்தில் சென்னை ஐசிஎஃப் அணி 25-15, 25-19, 25-17 என்ற செட் கணக்கில் எஸ்ஆர்எம் ஐஎஸ்டி அணியை தோற்கடித்தது.
ஆடவர் பிரிவில் நடைபெற்ற அரை இறுதி ஆட்டம் ஒன்றில் சென்னை ஐஓபி 20-25, 22-25, 25-15, 25-20, 15-9 என்ற செட் கணக்கில் போராடி ஜிஎஸ்டி அணியை தோற்கடித்து இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.