புதுடெல்லி: ஆஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.
இரு அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடர் 1-1 என சமநிலையில் உள்ளது. முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 2-வது ஆட்டத்தில் 102 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இந்திய மகளிர் அணி பதிலடி கொடுத்தது.
இந்நிலையில், தொடரை வெல்வது யார் என்பதை தீர்மானிக்கும் கடைசி மற்றும் 3-வது ஒருநாள் போட்டியில் டெல்லியில் இன்று பிற்பகல் 1.30 மணிக்கு நடைபெறுகிறது. இந்த ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி பெற்றால் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக முதன்முறையாக இருதரப்பு தொடரை கைப்பற்றி சாதனை படைக்கும்.