Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Wednesday, September 3
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»விளையாட்டு»ரஞ்சி – ஐபிஎல் இடைவெளியும், சமத்துவம் இல்லாத இந்திய கிரிக்கெட்டும்: கவாஸ்கர் சாடல்
    விளையாட்டு

    ரஞ்சி – ஐபிஎல் இடைவெளியும், சமத்துவம் இல்லாத இந்திய கிரிக்கெட்டும்: கவாஸ்கர் சாடல்

    adminBy adminApril 28, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    ரஞ்சி – ஐபிஎல் இடைவெளியும், சமத்துவம் இல்லாத இந்திய கிரிக்கெட்டும்: கவாஸ்கர் சாடல்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    ஒரு வெற்றிகரமான ரஞ்சி டிராபி சீசனை விட ஒரு சுமாரான ஐபிஎல் சீசனே வீரர்களுக்குப் போதுமானதாக இருக்கிறது என்று கூறும் சுனில் கவாஸ்கர், ஐபிஎல் தொடருக்கு கொடுக்கும் மீடியா கவரேஜ், ரஞ்சி டிராபிகளுக்குக் கொடுக்கப்படுவதில்லை, சம்பளங்களிலும் பெரும் இடைவெளியும் சமத்துவமின்மையும் உள்ளது என்று சாடியுள்ளார்.

    ஐபிஎல் மூலம் நல்ல வீரர்கள் இந்திய கிரிக்கெடுக்குக் கிடைத்து வருவதை வரவேற்கும் கவாஸ்கர், ரஞ்சி டிராபி இதனால் பெறும் மிக மிகக் குறைவான கவன ஈர்ப்பினால் உள்ளூரிலிருந்து ஒரு வீரர் வருவது மிக மிகக் கடினமாகியுள்ளது என்று சூசகமாகத் தெரிவித்துள்ளார்.

    ‘தி இந்து ஸ்போர்ட் ஸ்டார்’ இதழுக்கு எழுதிய பத்தி ஒன்றில் கவாஸ்கர் பகிர்ந்தவை: ‘நடப்பு ஐபிஎல் மீண்டும் காட்டுவது என்னவெனில் ஒரு நல்ல ஆட்டம் ஆடிவிட்டால் போதும், உடனே அவரை உயர்ந்த கவுரவங்களுக்கு உரியவராக உயர்த்துகின்றனர். ஆனால், தேசிய சாம்பியன்ஷிப் ஆன ரஞ்சி உள்ளிட்ட போட்டிகளில் ஆடினால் அந்த ஆட்டத்துக்கோ, வீரருக்கோ போதிய வெளிச்சம் கிடைப்பதில்லை. ரஞ்சியில் ஒருவர் செய்யும் ஆகச் சிறந்த சாதனை கூட ஊடகத் தலைப்புச் செய்தியாக மாறுவதில்லை.

    ஆனால், இந்த ஒரு மேட்ச் தீரர்கள் காணாமல் போய்விடும் சந்தர்ப்பங்களும் உண்டு. ஒரு ரஞ்சி சீசன் முழுதும் பிரமாதமாக ஆடினாலும் இந்த ஐபிஎல் ஒரு போட்டி ஆட்டச் சலசலப்பு ஏற்படுத்தும் கீர்த்தி, ரஞ்சி பிளேயர்களுக்குக் கிடைப்பதில்லை. இதற்குக் காரணம், ஐபிஎல் தொடருக்கு மக்களிடம் கிடைத்துள்ள வரவேற்பு, மீடியா கூட்டாளிகளாக அதிக முக்கியத்துவம் கொடுப்பது, பெரிய ஸ்பான்சர்ஷிப் உரிமைகள் ஆகியவையே.

    இதில் வெந்த புண்ணில் உப்பைத் தடவுவது போல் ரஞ்சி, சையத் முஷ்டக் அலி டிராபி, விஜய் ஹசாரே டிராபி என்று ஒரு வீரர் கன்னாபின்னாவென்று முழு தொடரிலும் ஆடி சரியான பெர்பாமென்சைக் கொடுத்தாலும் ஐபிஎல் ஏலத்தில் அன் கேப்டு வீரர்களுக்கான குறைந்தப்பட்சத் தொகையான ரூ.30 லட்சத்திற்குக் கூட விலை போவதில்லை.

    ஆனால், மும்பை கிரிக்கெட் சங்கம், ரஞ்சி டிராபி வீரர்களுக்கும் ஐபிஎல் வீரர்களுக்குமான சம்பள இடைவெளியைக் குறைக்க முயற்சிகள் எடுத்துச் செயல்படுத்தி வருகிறது. இதே பாணியை பிசிசிஐ-யின் மற்ற சங்கங்களும் கடைப்பிடித்தால் நன்றாக இருக்கும் என்று சுனில் கவாஸ்கர் குறிப்பிட்டுள்ளார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    விளையாட்டு

    சர்வதேச டி 20-ல் இருந்து மிட்செல் ஸ்டார்க் ஓய்வு

    September 3, 2025
    விளையாட்டு

    புச்சிபாபு தொடர்: டிஎன்சிஏ பிரெசிடெண்ட் லெவன் 567 ரன்கள் குவித்து டிக்ளேர்

    September 3, 2025
    விளையாட்டு

    யுஎஸ் ஓபன் டென்னிஸ்: ஜன்னிக் சின்னர், ஸ்வியாடெக் கால் இறுதிக்கு முன்னேற்றம் 

    September 3, 2025
    விளையாட்டு

    பாகிஸ்தானை 18 ரன்களில் வென்று ஆப்கானிஸ்தான் அபாரம்: முத்தரப்பு டி20 போட்டி

    September 3, 2025
    விளையாட்டு

    கேசவ் மகாராஜ் அபாரம்: முதல் ஒருநாள் போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்திய தென் ஆப்பிரிக்கா!

    September 3, 2025
    விளையாட்டு

    மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட்: சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு ரூ.40 கோடி பரிசு

    September 2, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • ‘த பெங்கால் ஃபைல்ஸ்’ படத்தைத் தடை செய்ய வேண்டாம்: மம்தா பானர்ஜிக்கு இயக்குநர் கோரிக்கை
    • ஒக்கியம் மடுவு நீர்வழிப் பாதை விரிவாக்கம்: திட்டமிடப்பட்ட காலத்துக்கு முன்பே பணிகளை முடிக்க இலக்கு நிர்ணயம்
    • வாயுவால் அவதிப்படுவது மற்றும் ஒரு வாரத்திற்கும் மேலாக வீங்கியதா? இது நடப்பதற்கான 5 காரணங்கள், ஏன் அதை புறக்கணிக்கக்கூடாது – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • ​பாலியல் வன்​கொடுமை வழக்கில் கைதான ஆம் ஆத்மி எம்​எல்ஏ ஹர்​மீத்: துப்​பாக்​கி​யால் சுட்​டு​விட்டு தப்​பியோட்​டம்
    • சர்வதேச டி 20-ல் இருந்து மிட்செல் ஸ்டார்க் ஓய்வு

    Recent Comments

    No comments to show.

    Archives

    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.