Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Saturday, July 26
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»விளையாட்டு»மும்பை இந்தியன்ஸுக்கு ஆப்பு வைத்த மும்பையின் ஸ்ரேயஸ் அய்யர்!
    விளையாட்டு

    மும்பை இந்தியன்ஸுக்கு ஆப்பு வைத்த மும்பையின் ஸ்ரேயஸ் அய்யர்!

    adminBy adminJune 2, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    மும்பை இந்தியன்ஸுக்கு ஆப்பு வைத்த மும்பையின் ஸ்ரேயஸ் அய்யர்!
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    ஐபிஎல் 2025 பிளே ஆப் சுற்றில் மும்பை இந்தியன்ஸ் அணியை வெளியேற்றியது பஞ்சாப் கிங்ஸ் இதன் மூலம் ஐபிஎல் இறுதிப்போட்டியில் முதல் முறையாக பஞ்சாப் கிங்ஸ், ஆர்சிபி அணிகள் மோதுகின்றன. இதில் எந்த அணி கோப்பையை வென்றாலும் அந்த அணி முதல் முறையாக ஐபிஎல் கோப்பையைக் கைப்பற்றும் அணியாக இருப்பதும் இந்த ஐபிஎல் தொடரில் விசேடமாகும்.

    இதன் மூலம் ஸ்ரேயஸ் அய்யர் 3-வது அணியை ஐபிஎல் இறுதிப்போட்டிக்குத் தன் கேப்டன்சியினால் அழைத்துச் சென்றுள்ளார். அய்யர் 41 பந்துகளில் 5 பவுண்டரிகள் 8 சிக்சர்களுடன் 87 நாட் அவுட் என்று மும்பை இந்தியன்ஸுக்கு இறுதி ஆப்பு வைத்து இறுக்கினார். ஐபிஎல் வரலாற்றில் மும்பை இந்தியன்ஸின் 200 ரன்கள் இலக்கை வெற்றிகரமாக விரட்டிச் சாதித்தது பஞ்சாப் கிங்ஸ்.

    இந்தப் போட்டிக்கு முன்னதாக நாக் அவுட் சுற்றுக்களில் மும்பை இந்தியன்ஸ் 18-7 என்ற வெற்றி தோல்வி விகிதத்தை வைத்திருக்கும் பவர்ஃபுல் அணி. அதுவும் கோப்பை வெற்றியாளர் என்று கருதப்படும் குஜராத் டைட்டன்ஸை வீழ்த்திய பிறகே மும்பைக்கு அடுத்து கோப்பைதான் என்று அனைவரும் கனவு கண்டபோது கனவை சிதைத்தார் இன்னொரு மும்பை வீரர் ஸ்ரேயஸ் அய்யர்.

    ஆட்டத்தின் 11வது ஓவரில் அஷ்வனி குமார் 4 ரன்களையும் முதல் ஓவரில் 20 ரன்கள் விளாசப்பட்ட பும்ரா 7 ரன்களையும் விட்டுக் கொடுத்தனர். பும்ராவை அவரது முதல் ஓவரில் ஜாஷ் இங்லிஸ் 4,6, 4, 6 என்று விளாசித்தள்ளியது அனைவருக்கும் அதிர்ச்சியே.

    8 ஓவர்கள் மீதமிருக்க பந்துக்கு 2 ரன்கள் அடிக்க வேண்டும். பும்ராவுக்கு 2 ஓவர்கள் மீதமிருந்தன, இது மும்பைக்கு சாதகம். ஹர்திக் பாண்டியா கேப்டன்சியில் பெரிய தவறிழைத்தது இங்குதான். முதல் போட்டியில் இந்த சீசனில் ஆடும் ரீசி டாப்லியை வீச அழைத்தார். அய்யர் அப்போது 15 பந்துகளில் 19 ரன்களில் இருந்தார், டாப்லியை கொண்டு வந்தவுடன் குஷியானார்.

    இங்குதான் போட்டி பஞ்சாப் கிங்ஸ் பக்கம் சாய்ந்தது. டாப்லியின் முதல் பந்தை அய்யர் மகா அடி அடித்தார் சிக்ஸ். அதன் பிறகு மும்பை பவுலர்கள் ஸ்லாட்டில் வீச வீச அய்யர் மேலும் 7 சிக்சர்களை விளாசினார். அது மட்டுமல்ல 7 யார்க்கர் பந்துகளிலும் அய்யர் 13 ரன்களை எடுத்தார். இதில் பும்ரா யார்க்கரை அடித்த பவுண்டரியையும் சேர்த்து 3 யார்க்கர் பவுண்டரிகள் அடித்தார் அய்யர்.

    ஆகவே ஃபுல் லெந்த், ஸ்லாட்டில் விழும் பந்துகளை அய்யர் அடித்து நொறுக்கினார் என்றவுடன் மீதமுள்ள முயற்சி ஷார்ட் பிட்ச் பந்துதான். ஆனால் அய்யர் அதையும் விட்டு வைக்காமல் 13 ஷார்ட் பிட்ச் பந்துகளில் 28 ரன்களை விளாசினார். இவ்வளவு பிரமாதமாக ஆடும் ஸ்ரேயஸ் அய்யர் இன்னும் ஐபிஎல் சதம் எடுக்கவில்லை என்பது பிறழ்வுதான்.

    இங்கிலாந்து தொடரில் உண்மையில் கேப்டன்சி கொடுக்கப்பட்டிருக்க வேண்டியவர் ஸ்ரேயஸ் அய்யர்தான். ஏனோ கம்பீருக்கும் அகர்க்கருக்கும் இந்த யோசனையே எழாமல் போனது ஆச்சரியம் தான்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    விளையாட்டு

    வா.சுந்தரை 69-வது ஓவர் வரை ஓரங்கட்டியது ஏன்? – இந்திய அணியின் வரலாற்று வெற்றிக்குப் பின் சர்ச்சைகள்!

    July 26, 2025
    விளையாட்டு

    டெஸ்ட்டில் தனது சாதனையை ஜோ ரூட் முறியடித்தபோது ரிக்கி பாண்டிங் ரியாக்‌ஷன் என்ன?

    July 26, 2025
    விளையாட்டு

    10 ஆண்டுகளில் முதல் முறையாக அயலகத்தில் 500+ ரன்களை வாரி வழங்கிய இந்தியா | மான்செஸ்டர் டெஸ்ட்

    July 26, 2025
    விளையாட்டு

    ஃபிடே மகளிர் உலகக் கோப்பை செஸ் இறுதிப் போட்டியில் முதன்முறையாக இந்தியா சாம்பியன் பட்டம் வெல்கிறது

    July 26, 2025
    விளையாட்டு

    இந்திய அணிக்கு திரும்பினர் லோவ்லினா, நிகத் ஜரீன்

    July 26, 2025
    விளையாட்டு

    அரை இறுதியில் சாட்விக், ஷிராக் ஜோடி |  சீனா ஓபன் பாட்மிண்டன்

    July 26, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • நீர்நிலை ஆக்கிரமிப்புகளை 2 மாதங்களில் அகற்ற ஈரோடு மாவட்ட நிர்வாகத்துக்கு ஐகோர்ட் உத்தரவு
    • பொதுவான குளிர் அல்லது ஒவ்வாமை நாசியழற்சி? இங்கே வேறுபடுவது எப்படி
    • தூத்துக்குடி விமான நிலைய புதிய முனையத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார்; ரூ.4,874 கோடியில் திட்டங்கள் தொடக்கம்
    • விராட் கோஹ்லி முதல் ஹார்டிக் பாண்ட்யா: இந்திய கிரிக்கெட் வீரர்களால் ஈர்க்கப்பட்ட ஆண்களுக்கான சமீபத்திய ஹேர்கட்ஸ்
    • ஓரணியில் தமிழ்நாடு: திமுக நிர்வாகிகளுடன் அப்போலோ மருத்துவமனையில் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை

    Recent Comments

    No comments to show.

    Archives

    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.