Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Sunday, July 6
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»விளையாட்டு»மழையால் 5-ம் நாள் ஆட்டம் தொடங்குவதில் தாமதம் | ENG vs IND பர்மிங்காம் டெஸ்ட்
    விளையாட்டு

    மழையால் 5-ம் நாள் ஆட்டம் தொடங்குவதில் தாமதம் | ENG vs IND பர்மிங்காம் டெஸ்ட்

    adminBy adminJuly 6, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    மழையால் 5-ம் நாள் ஆட்டம் தொடங்குவதில் தாமதம் | ENG vs IND பர்மிங்காம் டெஸ்ட்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    பர்மிங்காம்: இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் 5-ம் நாள் ஆட்டம் தொடங்குவதில் மழை காரணமாக தாமதம் ஏற்பட்டுள்ளது.

    இந்தப் போட்டியில் 608 ரன்கள் இலக்கை இங்கிலாந்துக்கு நிர்ணயித்துள்ளது ஷுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி. 5-ம் நாள் ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 536 ரன்கள் எடுத்தால் இதில் வெற்றி பெறலாம். அந்த அணி தற்போது 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 72 ரன்கள் எடுத்துள்ளது. ஸாக் கிராவ்லி, பென் டக்கெட், ஜோ ரூட் ஆகியோர் ஆட்டமிழந்துள்ளனர்.

    இந்திய அணி இதில் வெற்றி பெற இந்தப் போட்டியின் கடைசி நாளான இன்று இங்கிலாந்தின் வசம் உள்ள 7 விக்கெட்டுகளையும் கைப்பற்ற வேண்டும். இந்நிலையில், மழை காரணமாக 5-ம் நாள் ஆட்டம் தொடங்குவதில் தாமதம் ஏற்படலாம் என வானிலை அறிக்கைகள் தெரிவித்தன. அதன்படி தற்போது போட்டி நடைபெறும் பர்மிங்காம் – எட்ஜ்பாஸ்டன் மைதானம் மற்றும் அதையொட்டி உள்ள பகுதிகளில் மழை பொழிந்து வருகிறது.

    மழை காரணமாக ஆடுகளம் ‘கவர்’ செய்யப்பட்டுள்ளது. மைதானத்தை பராமரித்து வரும் பணியாளர்கள் பிட்ச்சில் மழைநீர் புகாத வண்ணம் திரைகளை கொண்டு கவர் செய்துள்ளனர். அங்கு நண்பகல் நேரம் வரை மழை பொழிவு இருக்கும் என வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மழை நின்ற பிறகே ஆட்டம் தொடர வாய்ப்புள்ளதாக களத்தில் இருந்து வரும் நேரடி தகவல்கள் உறுதி செய்துள்ளன.

    ஷுப்மன் கில் தாமதமாக டிக்ளேர் செய்தாரா? – இந்தப் போட்டியில் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 180 ரன்கள் முன்னிலை பெற்றது. இரண்டாவது இன்னிங்ஸில் 427 ரன்கள் எடுத்த பிறகே டிக்ளேர் செய்தது. இந்நிலையில், இந்த ஆட்டத்தில் கேப்டன் ஷுப்மன் கில் டிக்ளேர் செய்யும் முடிவை சற்று தாமதமாக எடுத்தாரா என்ற வாதம் சமூக வலைதளங்கள் மற்றும் கிரிக்கெட் வல்லுநர்கள் மத்தியில் விவாதப் பொருளாகி உள்ளது.

    இங்கிலாந்து ஆடுகளங்கள் ரன் குவிப்புக்கு ஏதுவாக தட்டையாக இருப்பதே கேப்டன் கில் கொஞ்சம் தாமதமாக 600+ ரன்கள் முன்னிலை எடுத்த பிறகு டிக்ளேர் செய்ய காரணம் என வல்லுநர்கள் தெரிவித்து வருகின்றனர். இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு காரணமும் அங்குள்ள ஆடுகளங்கள் தான் என்ற வாதம் முன்வைக்கப்பட்டு வருகிறது. இதை வைத்து பார்க்கும்போது இந்தியா இந்த போட்டியில் வென்றால் ஆடுகள அமைப்பில் இங்கிலாந்து அணி நிர்வாகம் கொஞ்சம் மாற்றி யோசிக்க வாய்ப்புள்ளது.

    5-ம் நாள் ஆட்டம் மழை காரணமாக சுமார் ஒரு மணி நேரம் வரை தாமதம் அடைந்தாலும் 90 ஓவர்கள் முழுவதுமாக வீசப்படும் என கிரிக்கெட் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். அந்த நேரத்தை கடக்கும் பட்சத்தில் தான் ஓவர்களின் எண்ணிக்கை குறைக்கப்படும்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    விளையாட்டு

    கால் இறுதியில் பேயர்ன் மூனிச்சை வீழ்த்திய பிஎஸ்ஜி: அரை இறுதியில் ரியல் மாட்ரிட் உடன் மோதல் – Club WC

    July 6, 2025
    விளையாட்டு

    பர்மிங்காம் வானிலை: எட்ஜ்பாஸ்டனில் இந்தியாவின் முதல் வெற்றி வாய்ப்பை பறிக்குமா மழை?

    July 6, 2025
    விளையாட்டு

    4-வது சுற்றில் ஜன்னிக் சின்னர்: விம்பிள்டன் டென்னிஸ்

    July 6, 2025
    விளையாட்டு

    அரை இறுதியில் கிடாம்பி ஸ்ரீகாந்த்: கனடா ஓபன் பாட்மிண்டன்

    July 6, 2025
    விளையாட்டு

    வாலிபால் இறுதிப் போட்டியில் ஐஓபி அணி

    July 6, 2025
    விளையாட்டு

    ஷுப்மன் கில் 162 பந்துகளில் 161 ரன்கள் விளாசல்: இங்கிலாந்து அணிக்கு 536 ரன்கள் இலக்கு

    July 6, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • தனுஷுக்கு நாயகியாகும் பூஜா ஹெக்டே?
    • பட்டாசு ஆலை வெடிவிபத்தில் உயிரிழந்தவர் குடும்பத்துக்கு ரூ. 4 லட்சம் நிவாரணம் – முதல்வர் அறிவிப்பு
    • மீண்டும் மீண்டும் வரும் யுடிஐக்கள் என்ன: அவற்றை வளைகுடாவில் வைத்திருக்க 5 எளிய வழிகள்
    • “ஏன் முடியாது?!” – அஜித்தின் ‘ரேஸ்’ பட விருப்பம்   
    • கீழடி விவகாரத்தில் மத்திய அரசின் மாற்றாந்தாய் மனப்பான்மை: சகாயம் விமர்சனம்

    Recent Comments

    No comments to show.

    Archives

    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.