
கொல்கத்தா: தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின்போது காயமடைந்த இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ஷுப்மன் கில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கொல்கத்தாவில் நடைபெற்ற முதல் போட்டியின் முதல் இன்னிங்ஸில் ஷுப்மன் கில் விளையாடிக் கொண்டிருந்த போது கழுத்தில் சுளுக்கு ஏற்பட்டு பெவிலியன் திரும்பினார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஓய்வு எடுக்குமாறு அறிவுறுத்தினர். இதனால் அவர் 2-வது இன்னிங்ஸிலும் விளையாடவில்லை.

