Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Sunday, July 27
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»விளையாட்டு»​போட்டியில் பங்கேற்க அர்ஷத் நதீமை அழைத்ததற்காக என்னுடைய நேர்மையை கேள்வி கேட்காதீர்கள்: நீரஜ் சோப்ரா வேதனை
    விளையாட்டு

    ​போட்டியில் பங்கேற்க அர்ஷத் நதீமை அழைத்ததற்காக என்னுடைய நேர்மையை கேள்வி கேட்காதீர்கள்: நீரஜ் சோப்ரா வேதனை

    adminBy adminApril 28, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    ​போட்டியில் பங்கேற்க அர்ஷத் நதீமை அழைத்ததற்காக என்னுடைய நேர்மையை கேள்வி கேட்காதீர்கள்: நீரஜ் சோப்ரா வேதனை
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    புதுடெல்லி: ஒலிம்​பிக் ஈட்டி எறிதலில் இரு முறை பதக்​கம் வென்ற நட்​சத்​திர வீர​ரான இந்​தி​யா​வின் நீரஜ் சோப்​ரா வரும் மே 24-ம் தேதி பெங்​களூரு​வில் ‘நீரஜ் சோப்ரா கிளாசிக் ஈட்டி எறிதல்’ என்ற போட்​டியை நடத்த திட்​ட​மிட்​டுள்​ளார்.

    இந்த போட்​டி​யில் பங்​கேற்க பாரிஸ் ஒலிம்​பிக்​கில் தங்​கப் பதக்​கம் வென்ற பாகிஸ்​தானைச் சேர்ந்த அர்​ஷத் நதீ​முக்​கு, நீரஜ் சோப்ரா அழைப்பு விடுத்​திருந்​தார். ஆனால் நீரஜ் சோப்​ரா​வின் அழைப்பை அர்​ஷத் நதீம் நிராகரித்​தார். மே 22-ம் தேதி தென் கொரி​யா​வில் நடை​பெற உள்ள ஆசிய தடகள சாம்​பியன்​ஷிப் தொடரில் பங்​கேற்க உள்​ள​தால் தன்​னால் கலந்​து​கொள்ள முடி​யாது என்று அர்​ஷத் நதீம் விளக்​கமளித்​திருந்​தார்.

    இதற்​கிடையே கடந்த செவ்​வாய்​கிழமை ஜம்மு – காஷ்மீரின் பஹல்​காமில் உள்ள சுற்​றுலாதலத்​தில் தீவிர​வா​தி​கள் நடத்​திய துப்​பாக்​கிச் சூடு தாக்​குதலில் 2 வெளி​நாட்​டினர் உட்பட 26 பேர் கொல்​லப்​பட்​டனர். இது நாடு முழு​வதும் பெரும் அதிர்​வலையை ஏற்​படுத்​தி​யது. இத்​தகைய சூழலில் பாகிஸ்​தான் வீரருக்கு நீரஜ் சோப்ரா அழைப்பு விடுத்​ததை சிலர் சமூக வலை​தளங்​களில் கடுமை​யாக விமர்​சித்​தனர்.

    இந்​நிலை​யில் இந்த விமர்​சனங்​களுக்கு நீரஜ் சோப்ரா எக்ஸ் தளத்​தில் விளக்​கம் அளித்​துள்​ளார். அதில் அவர் கூறி​யிருப்​ப​தாவது: கிளாசிக் போட்​டி​யில் பங்​கேற்க அர்​ஷத் நதீ​முக்கு நான் அழைப்பு விடுத்​தது குறித்து அதி​கம் பேசப்​படு​கிறது, அதில் பெரும்​பாலானவை வெறுப்பு மற்​றும் துஷ்பிரயோக​மாக உள்​ளது. என் குடும்​பத்​தைக் கூட அவர்​கள் விட்​டு​வைக்​க​வில்​லை.

    அர்​ஷத்​துக்கு நான் விடுத்த அழைப்பு ஒரு தடகள வீரரிட​மிருந்து மற்​றொரு விளை​யாட்டு வீரருக்கு சென்​றது. இதில் அதி​க​மாகவோ, குறை​வாகவோ எது​வும் இல்​லை. நீரஜ் சோப்ரா கிளாசிக்​கின் நோக்​கம் சிறந்த விளை​யாட்டு வீரர்​களை இந்​தி​யா​வுக்​குக் கொண்​டு​வரு​வதும், நம் நாடு உலகத் தரம் வாய்ந்த விளை​யாட்டு நிகழ்​வு​களின் தாயக​மாக இருக்க வேண்​டும் என்​ப​தற்​காகத்​தான்.

    பஹல்​காமில் தீவிர​வாத தாக்​குதல் நடை​பெறு​வதற்கு இரண்டு நாட்​களுக்கு முன்பு போட்​டிகளில் பங்​கேற்க வரு​மாறு அனைத்து விளை​யாட்டு வீரர்​களுக்​கும் அழைப்பு விடுக்​கப்​பட்​டிருந்​தது. கடந்த 48 மணி நேரத்​தில் நடந்த எல்​லா​வற்​றிற்​கும் பிறகு, என்​.சி கிளாசிக்​கில் அர்​ஷத் பங்​கேற்​பது முற்​றி​லும் கேள்விக்​குறி​யாக இருந்​தது. எனது நாடும் அதன் நலன்​களும் எப்​போதும் முதன்​மை​யாக இருக்​கும்.

    தீவிர​வாத தாக்​குதலில் தங்​களது உறவினர்களை இழந்து தவிப்​பவர்​களு​டன் எனது எண்​ணங்​களும் பிரார்த்​தனை​களும் உள்​ளன. நடந்த சம்​பவத்​தால் ஒட்​டுமொத்த தேசத்​துட​னும் சேர்த்து நானும் காய​மும் கோப​மும் அடைகிறேன். நம் நாட்​டின் பதில், ஒரு தேச​மாக நமது வலிமை​யைக் காண்​பிக்​கும் மற்​றும் நீதி வழங்​கப்​படும் என்று நம்​பு​கிறேன்.

    பல ஆண்​டு​களாக எனது நாட்டை பெரு​மை​யுடன் சுமந்து வரு​கிறேன், எனவே எனது நேர்மை கேள்விக்​குள்​ளாக்​கப்​படு​வதைப் பார்ப்​பது வேதனையளிக்​கிறது. எந்​தக் காரண​மும் இல்​லாமல் என்​னை​யும் என் குடும்​பத்​தை​யும் குறிவைக்​கும் மக்​களிடம் நான் விளக்க வேண்​டி​யிருப்​பது எனக்கு வேதனையளிக்​கிறது. நாங்​கள் எளிய மக்​கள், தயவுசெய்து எங்​களை வேறு எது​வாக​வும் காட்ட வேண்​டாம். ஊடகங்​களின் சில பிரிவு​கள் என்​னைச் சுற்றி பல தவறான கதைகளை உரு​வாக்​கி​யுள்​ளன, ஆனால் நான் பேச​வில்லை என்​ப​தால், அது உண்​மை​யாகி​வி​டாது. மக்​கள் எவ்​வாறு கருத்​துக்​களை மாற்​றுகிறார்​கள் என்​ப​தைப் புரிந்​து​கொள்​வதும் எனக்கு கடின​மாக உள்​ளது. இவ்​வாறு நீரஜ் சோப்​ரா கூறியுள்​ளார்​.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    விளையாட்டு

    669 ரன்கள் குவித்த இங்கிலாந்து: 2 விக்கெட்களை இழந்து இந்திய அணி போராட்டம்

    July 27, 2025
    விளையாட்டு

    டிம் டேவிட் 37 பந்துகளில் சதம் விளாசி சாதனை: 3-வது டி20-ல் ஆஸி. வெற்றி

    July 27, 2025
    விளையாட்டு

    அரை இறுதியில் சாட்விக், ஷிராக் ஜோடி தோல்வி

    July 27, 2025
    விளையாட்டு

    பாட்மிண்டனில் வெண்கலம் வென்றார் தன்வி ஷர்மா!

    July 27, 2025
    விளையாட்டு

    வா.சுந்தரை 69-வது ஓவர் வரை ஓரங்கட்டியது ஏன்? – இந்திய அணியின் வரலாற்று வெற்றிக்குப் பின் சர்ச்சைகள்!

    July 26, 2025
    விளையாட்டு

    டெஸ்ட்டில் தனது சாதனையை ஜோ ரூட் முறியடித்தபோது ரிக்கி பாண்டிங் ரியாக்‌ஷன் என்ன?

    July 26, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • 669 ரன்கள் குவித்த இங்கிலாந்து: 2 விக்கெட்களை இழந்து இந்திய அணி போராட்டம்
    • பொன்னேரி முதல் பிரகதீஸ்வரர் கோயில் வரை 2 கி.மீ. தொலைவுக்கு ‘ரோடு ஷோ’ செல்கிறார் மோடி
    • தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் ஆக.4 முதல் கலை திருவிழா போட்டிகள்
    • டிம் டேவிட் 37 பந்துகளில் சதம் விளாசி சாதனை: 3-வது டி20-ல் ஆஸி. வெற்றி
    • நீலகிரி, கோவை மாவட்டங்களில் இன்று கனமழை

    Recent Comments

    No comments to show.

    Archives

    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.