Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Monday, August 4
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»விளையாட்டு»பெங்களூரு நெரிசலில் உயிரிழந்தோரின் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம்: ஆர்சிபி அறிவிப்பு
    விளையாட்டு

    பெங்களூரு நெரிசலில் உயிரிழந்தோரின் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம்: ஆர்சிபி அறிவிப்பு

    adminBy adminJune 5, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    பெங்களூரு நெரிசலில் உயிரிழந்தோரின் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம்: ஆர்சிபி அறிவிப்பு
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    பெங்களூரு: பெங்களூரு நெரிசலில் சிக்கி உயிரிழந்த ஒவ்வொருவரின் குடும்பத்துக்கும் ரூ.10 லட்சம் நிவாரணத் தொகை வழங்கப்படும் என ஆர்சிபி அணி நிர்வாகம் அறிவித்துள்ளது.

    ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணி (ஆர்சிபி) வெற்றி பெற்றதைக் கொண்டாடுவதற்காக பெங்களூருவில் நேற்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விழாவின்போது கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்தனர். நாடு முழுவதும் பேரதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவத்தில், உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு அரசு தரப்பில் ரூ.10 லட்சம் வழங்கப்படும், காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படும் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

    இந்நிலையில், நெரிசலில் சிக்கி உயிரிழந்த ஒவ்வொருவரின் குடும்பத்துக்கும் ரூ.10 லட்சம் நிவாரணத் தொகை வழங்கப்படும் என ஆர்சிபி அணி நிர்வாகம் இன்று (ஜூன் 5) அறிவித்துள்ளது. மேலும், காயமடைந்தவர்களின் உதவிக்காக ‘ஆர்சிபி கேர்ஸ்’ என்ற நிதி தொகுப்பு உருவாக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

    இது குறித்து ஆர்சிபி தரப்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “நேற்று பெங்களூருவில் நடந்த துரதிருஷ்டவசமான சம்பவம் ஆர்சிபி குடும்பத்துக்கு மிகுந்த வேதனையைத் தந்துள்ளது. இந்தத் தருணத்தில் மரியாதை நிமித்தமாகவும், பாதிக்கப்பட்டோருக்கு துணை நிற்கும் வகையிலும் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி சார்பில் வழங்கப்படும்.

    காயமடைந்தவர்களுக்கு உதவும் வகையில் ‘RCB Cares’ என்ற பெயரில் நிதித் தொகுப்பும் உருவாக்கப்படும். அதன் மூலம் காயமடைந்தவர்களுக்கு தேவையான உதவிகள் செய்யப்படும். நாங்கள் முன்னெடுக்கும் எல்லா காரியங்களிலும் எங்களின் ரசிகர்களே பிரதானமாக இருப்பார்கள் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம். இந்தச் சோதனையான நேரத்தில் நாங்கள் ஒன்றுபட்டு நிற்கிறோம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மன்னிப்பு கேட்ட பிசிசிஐ செயலாளர்: முன்னதாக, நேற்று பிசிசிஐ செயலாளர் தேவஜித் சைக்கியா, “எனக்கு மிகுந்த அதிர்ச்சியாகவும் வருத்தமாகவும் இருக்கிறது. நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தவர்கள் முறையாக திட்டமிடவில்லை. இதற்காக பாதிக்கப்பட்டோரின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். இது தவறான முன்னுதாரணம் ஆகும்” என்று குறிப்பிட்டிருந்தார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    விளையாட்டு

    டெஸ்ட் கிரிக்கெட்டில் மிகக் குறைந்த ரன் வித்தியாசத்தில் இந்தியா வென்ற போட்டிகள்!

    August 4, 2025
    விளையாட்டு

    சிராஜ் அபாரம்: ஓவல் டெஸ்ட்டில் த்ரில் வெற்றியுடன் தொடரை சமன் செய்தது இந்தியா!

    August 4, 2025
    விளையாட்டு

    லெக்சிங்டன் ஓபன் டென்னிஸ்: இந்திய ஜோடி சாம்பியன்

    August 4, 2025
    விளையாட்டு

    இங்கிலாந்து வீரர்கள் புரூக், ஜோ ரூட் சதம்: 6 விக்கெட் இழப்புக்கு 339 ரன்கள் சேர்ப்பு

    August 4, 2025
    விளையாட்டு

    டி20 கிரிக்கெட் தொடர்: மேற்கு இந்தியத் தீவுகள் அணி வெற்றி

    August 4, 2025
    விளையாட்டு

    “மீண்டும் முயற்சி செய்கிறேன்” – விவாகரத்து முடிவை கைவிட்ட சாய்னா நேவால்!

    August 4, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • டெஸ்ட் கிரிக்கெட்டில் மிகக் குறைந்த ரன் வித்தியாசத்தில் இந்தியா வென்ற போட்டிகள்!
    • துல்கர் சல்மானின் புதிய படம் பூஜையுடன் தொடக்கம்
    • காவல் துறைக்கு தேர்வாகியும் பணி ஆணைக்கு காத்திருப்பு: புலம்பும் புதிய எஸ்.ஐ-க்கள்
    • உங்கள் உடலுக்கு என்ன கிரீம் பிஸ்கட் செய்கிறது: டிரான்ஸ் கொழுப்புகள், சேர்க்கைகள் மற்றும் பல | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • திரிணமூல் காங்கிரஸ் மக்களவைத் தலைவராக அபிஷேக் பானர்ஜி நியமனம்

    Recent Comments

    No comments to show.

    Archives

    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.