Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Wednesday, September 10
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»விளையாட்டு»“பும்ரா செய்வது சரியல்ல… புதிய சூப்பர் ஸ்டார் சிராஜ்!” – அசாருதீன் மனம் திறப்பு
    விளையாட்டு

    “பும்ரா செய்வது சரியல்ல… புதிய சூப்பர் ஸ்டார் சிராஜ்!” – அசாருதீன் மனம் திறப்பு

    adminBy adminAugust 13, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    “பும்ரா செய்வது சரியல்ல… புதிய சூப்பர் ஸ்டார் சிராஜ்!” – அசாருதீன் மனம் திறப்பு
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    “இங்கிலாந்துக்கு எதிராக 2 முக்கியமான டெஸ்ட் போட்டிகளில் பும்ரா ஆடாமல் விலகியது இந்திய அணியின் தொடரை வெல்லும் வாய்ப்புகளைக் கெடுத்து விட்டது. பும்ரா தான் விளையாடும் போட்டிகளை அவரே தேர்வு செய்ய அனுமதிக்க முடியாது” என்று இந்திய அணியின் முன்னாள் கேப்டன் அசாருதீன் சாடியுள்ளார்.

    “தேச அணிக்கு எப்போது தேவைப்படுகிறதோ அப்போது அந்த வீரர் தயாராகத்தான் இருக்க வேண்டும். அணியில் தேர்வான பிறகே இந்தப் போட்டியில் ஆடுவேன், அதில் ஆட மாட்டேன், தொடரில் 3 போட்டிகளில் தான் ஆடுவேன் என்பதையெல்லாம் பும்ரா தேர்வு செய்ய அனுமதிக்கக் கூடாது” என்கிறார் அசார்.

    “காயம் பிரச்சனையென்றால் வாரியமும் வீரரும் கலந்து ஆலோசிக்க வேண்டும். ஆனால், நான் என்ன நினைக்கிறேன் என்றால், ஒரு வீரர் ஒரு தொடருக்கான அணியில் தேர்வு செய்யப்பட்டு விட்டார் என்றால், அவர் அந்தத் தொடரில் இதில் ஆடுவேன், இன்னொன்றில் ஆடமாட்டேன் என்றெல்லாம் சுயதேர்வு செய்து கொள்ள முடியாது.

    பணிச்சுமை இருக்கிறது என்பதை மறுக்கவில்லை, ஆனால், இந்தக் காலத்தில் அதையெல்லாம் மேலாண்மை செய்துதான் ஆகவேண்டும். ஏனெனில் அவர் நாட்டுக்காக ஆடுகிறார். சிராஜ், பிரசித் கிருஷ்ணா, ஆகாஷ் தீப் பிரமாதமாக அவர் இல்லாதபோது ஒருங்கிணைந்து அணியை வெற்றி பெறச் செய்தனர் என்பது வேறு விஷயம். பும்ரா இல்லாமல் வெற்றி பெற்றது நம் அதிர்ஷ்டமே. ஆனால், ஒரு குறிப்பிட்ட சூழலில் பும்ரா வேண்டும் என்று தேவை எழும்போது நெருக்கடி எழும்போது என்ன செய்வது?

    சிராஜ் தனிச்சிறப்பு வாய்ந்த பவுலிங்கை வீசினார். நள்ளி கோஷ்ட் பிரியாணி மற்றும் பாயாவுக்கு நன்றி. அவர் நல்ல உடல் வலுவை ஏற்படுத்திக் கொண்டுள்ளார். குறிப்பாக அவர் கால்கள் பலம் வாய்ந்ததாக உள்ளன.

    உற்சாகமும் ஆற்றலையும் காட்டுகிறார் சிராஜ். இந்தியாவுக்காக ஆடும் வேட்கையும் தாகமும் தொடர் முழுதும் சிராஜிடம் தெரிந்தது. அதுவும் அதிக ஓவர்களை தொடரில் வீசிய போதும் களைப்பு இல்லாமல் கஸ் அட்கின்ஸனை கிளீன் பவுல்டு செய்த அந்தப் பந்து மணிக்கு 143 கிமீ வேகம் கொண்டது. இது அவரது உடல்தகுதிக்கும் அவரது மன/உடல் வலுவுக்குமான ஆதாரமாகும். இன்று அவர் ஒரு சூப்பர் ஸ்டார்.

    ஓவலில் வீசிய ஸ்பெல் மிகப் பிரமாதம், பும்ரா இல்லாத நிலையில் பொறுப்புகளை அவர் சுமந்த விதம் பாராட்டுக்குரியது. இங்கிலாந்து பேட்டர்களை கடும் சவாலுக்குள்ளாக்கினார். தீவிரமாக வீசினார், இந்திய அணியின் புதிய சூப்பர் ஸ்டார் யார் என்றால் அது சிராஜ் தான்” என்றார் அசார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    விளையாட்டு

    “உடல் எடையை காரணம் காட்டாமல் சர்ஃபராஸ் கானை டெஸ்ட்டுக்கு கொண்டு வாங்க” – கிறிஸ் கெய்ல்

    September 9, 2025
    விளையாட்டு

    சஞ்சு சாம்சன் இடத்தைத் தொந்தரவு செய்ய வேண்டாம், வேறு வீரருக்குப் பதிலாக கில் ஆடட்டும்: ரவி சாஸ்திரி

    September 9, 2025
    விளையாட்டு

    ஆசிய கோப்பை டி20 தொடர் இன்று தொடக்கம்: முதல் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் – ஹாங் காங் மோதல்

    September 9, 2025
    விளையாட்டு

    யுஎஸ் ஓபன் டென்னிஸ்: ஜன்னிக் சின்னரை வீழ்த்தி பட்டம் வென்றார் அல்கராஸ்

    September 9, 2025
    விளையாட்டு

    ஹாக்கி ஜூனியர் உலகக் கோப்பையில் இந்தியா – பாக். நவ.29-ல் மோதல்

    September 9, 2025
    விளையாட்டு

    வீரர்களின் உடல்நிலை குறித்து அணி நிர்வாகம் அக்கறை கொள்வதில்லை – ஷர்துல் தாக்கூர் வேதனை!

    September 8, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • ​திண்டுக்கல், தருமபுரி உள்ளிட்ட 12 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
    • புரோஸ்டேட் புற்றுநோய்: ஆண்களில் 5 ஆரம்ப அறிகுறிகள் மற்றும் பிஎஸ்ஏ இரத்த பரிசோதனை ஏன் முக்கியமானது
    • குடியரசு துணைத் தலைவர் தேர்தல்: 452 வாக்குகளுடன் சி.பி.ராதாகிருஷ்ணன் அபார வெற்றி
    • இந்தியாவில் முதல்முறையாக கடல்சார் வள அறக்கட்டளை: அமைச்சர் தங்கம் தென்னரசு தொடங்கி வைத்தார்
    • கருவுறுதல் மற்றும் ஆரோக்கியமான கருத்தாக்கத்திற்கு ஆண்களின் ஊட்டச்சத்து ஏன் முக்கியமானது | – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா

    Recent Comments

    No comments to show.

    Archives

    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.