சென்னை: சென்னை மாவட்ட பி-டிவிஷன் ஆடவர் வாலிபால் சாம்பியன்ஷிப் மற்றும் மாவட்ட மகளிர் சாம்பியன்ஷிப் போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் விளையாட்டரங்கில் நடைபெற்று வருகிறது.
இதில் ஆடவர் பிரிவு கால் இறுதி ஆட்டத்தில் எஸ்ஆர்எம் அகாடமி 3-0 என்ற கணக்கில் ஜேப்பியார் பல்கலைக்கழக அணியை வீழ்த்தி அரை இறுதிக்கு முன்னேறியது.
எஸ்டிஏடி 3-1 என்ற கணக்கில் தமிழக காவல்துறை அணியையும், ஜிஎஸ்டி அணி 3-0 என்ற கணக்கில் டிபி ஜெயின் கல்லூரியையும், லயோலா கல்லூரி 3-0 என்ற கணக்கில் சென்னை மாநகர காவல்துறை அணியையும் வீழ்த்தி அரை இறுதியில் கால்பதித்தன.
மகளிர் பிரிவு கால் இறுதியில் எஸ்டிஏடி 2-1 என்ற கணக்கில் தமிழக காவல்துறை அணியையும், தெற்கு ரயில்வே 2-0 என்ற கணக்கில் எம்ஓபி வைஷ்ணவா கல்லூரியையும், கிறிஸ்டியன் ஸ்போர்ட்ஸ் பெல்லோஷிப் அணி 2-0 என்ற கணக்கில் சென்னை பிரண்ட் கிளப்பையும் வீழ்த்தி அரை இறுதிக்கு முன்னேறின.