பாரிஸ்: பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் ஜன்னிக் சின்னர், மிர்ரா ஆண்ட்ரீவா உள்ளிட்டோர் 3-வது சுற்றுக்கு முன்னேறினர்.
பாரிஸ் நகரில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் ஆடவர் ஒற்றையர் பிரிவு 2-வது சுற்றில் முதல் நிலை வீரரான இத்தாலியின் ஜன்னிக் சின்னர், 166-ம் நிலை வீரரான பிரான்ஸின் ரிச்சர்ட் காஸ்கெட்டுடன் மோதினார். இதில் ஜன்னிக் சின்னர் 6-3, 6-0, 6-4 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று 3-வது சுற்றுக்கு முன்னேறினார்.
3-ம் நிலை வீரரான ஜெர்மனியின் அலெக்ஸாண்டர் ஜிவேரேவ் 3-6, 6-1, 6-2, 6-3 என்ற செட் கணக்கில் 88-ம் நிலை வீரரான நெதர்லாந்தின் ஜெஸ்பர் டி ஜாங்கை வீழ்த்தி 3-வது சுற்றில் நுழைந்தார்.
மகளிர் ஒற்றையர் பிரிவு 2-வது சுற்றில் 6-ம் நிலை வீராங்கனையான ரஷ்யாவின் மிர்ரா ஆண்ட்ரீவா 6-3, 6-4 என்ற நேர் செட் கணக்கில் அமெரிக்காவின் ஆஷ்லின் க்ரூகரையும் 3-ம் நிலை வீராங்கனையான அமெரிக்காவின் ஜெசிகா பெகுலா 6-3, 7-6 (7-3) என்ற செட் கணக்கில் சகநாட்டைச் சேர்ந்த அன் அலியையும் வீழ்த்தி 3-வது சுற்றில் நுழைந்தனர்.