Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Monday, January 12
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»விளையாட்டு»பாக். வீரர் ஃபர்ஹானின் துப்பாக்கிச் சூடு போஸும் சர்ச்சையும் – IND vs PAK
    விளையாட்டு

    பாக். வீரர் ஃபர்ஹானின் துப்பாக்கிச் சூடு போஸும் சர்ச்சையும் – IND vs PAK

    adminBy adminSeptember 22, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    பாக். வீரர் ஃபர்ஹானின் துப்பாக்கிச் சூடு போஸும் சர்ச்சையும் – IND vs PAK
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    துபாய்: இந்திய அணி உடனான நடப்பு ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் ‘சூப்பர் 4’ சுற்றில் பாகிஸ்தானின் சாஹிப்சாதா ஃபர்ஹான் அரைசதம் விளாசினார். அதை அவர் கொண்டாடிய விதம் சர்ச்சை ஆகியுள்ளது.

    துபாயில் ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற்ற இந்த ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி முதலில் பேட் செய்தது. பஹர் ஸமான் உடன் சாஹிப்சாதா ஃபர்ஹான் இணைந்து இன்னிங்ஸை ஓப்பன் செய்தார். ஸமான் 15 ரன்களில் ஆட்டமிழந்தார்.

    மறுமுனையில் விரைந்து ரன் குவித்த சாஹிப்சாதா ஃபர்ஹான் 35 பந்துகளில் அரைசதம் எட்டினார். பும்ராவுக்கு எதிராக அதிரடி காட்டினார். 10-வது ஓவரில் அக்சர் வீசிய பந்தை சிக்ஸருக்கு விளாசி அரைசதம் கடந்தார். அதை அவர் கொண்டாடியதுதான் சர்ச்சை ஆகியுள்ளது.

    வழக்காக சதம் அல்லது அரைசதம் கடந்ததும் பேட்ஸ்மேன்கள் பேட்டை உயர்த்தி காட்டுவார்கள். சிலர் அதை இன்னும் கொஞ்சம் வித்தியாசமாக கொண்டாடுவார்கள். அது அனைவரும் ரசிக்கும் வகையில் இருக்கும். ஆனால், ஃபர்ஹான் நேற்றைய ஆட்டத்தில் அரைசதம் விளாசியதும் பேட்டை துப்பாக்கியை தூக்கி சுடுவது போல செய்தார். அதுதான் இப்போது சர்ச்சை ஆகியுள்ளது. இந்த ஆட்டத்தை அவர் 45 பந்துகளில் 58 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

    கடந்த ஏப்ரல் மாதம் ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இதை தொடர்ந்து பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத அமைப்புகளின் புகலிடங்களில் ‘ஆபரேஷன் சிந்தூர்’ ராணுவ நடவடிக்கையை இந்தியா மேற்கொண்டது. தொடர்ந்து இந்தியா – பாகிஸ்தான் எல்லையை ஒட்டியுள்ள இந்திய மாநிலங்கள் மீது பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியது. அதை இந்திய ராணுவம் இடைமறித்தது. பின்னர் போர் நிறுத்தம் அமலுக்கு வந்தது.

    இந்நிலையில், ஆசிய கோப்பை தொடரில் பாகிஸ்தான் உடனான ஆட்டத்தில் இந்தியா புறக்கணிக்க வேண்டுமென்ற குரல்கள் எழுந்தன. இருப்பினும் இந்தியா – பாகிஸ்தான் போட்டி திட்டமிட்டபடி நடந்தது. அதேநேரத்தில் போட்டியின் போது இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் மற்றும் இந்திய வீரர்கள், பாகிஸ்தான் வீரர்கள் உடன் கைகுலுக்க மறுத்துவிட்டனர். இந்த நிலையில் ஃபர்ஹான் செயல் சர்ச்சையாகி உள்ளது.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    விளையாட்டு

    528 பந்துகளில் 1,000 ரன்கள்: அபிஷேக் சர்மா அசத்தல் சாதனை!

    December 3, 2025
    விளையாட்டு

    தென் ஆப்பிரிக்கா உடனான ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் வென்றது பாகிஸ்தான் அணி!

    December 3, 2025
    விளையாட்டு

    உலக துப்பாக்கி சுடுதலில்: தங்கம் வென்றார் ரவீந்தர்

    December 3, 2025
    விளையாட்டு

    ரஞ்சி கோப்பையில் தமிழகம் 182 ரன்களுக்கு சுருண்டது

    December 3, 2025
    விளையாட்டு

    என்எஸ்டபிள்யூ ஓபன் ஸ்கு​வாஷ் இறுதிப் போட்டியில் ராதிகா சீலன்

    December 3, 2025
    விளையாட்டு

    91-வது கிராண்ட் மாஸ்டரானார் சென்னையை சேர்ந்த ராகுல்

    December 3, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • ஒவ்வொரு நாளும் 10 நிமிடங்களில் ஜப்பானிய வீடுகள் எவ்வாறு மீட்டமைக்கப்படுகின்றன: மைக்ரோ-ரீசெட்டின் மந்திரத்தைப் புரிந்துகொள்வது – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • இமாச்சல பிரதேசம்: ஜனவரி 14 முதல் சிம்லாவை குலு மற்றும் கின்னூருடன் இணைக்க தினசரி ஹெலிகாப்டர் சேவைகள் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • புளூட்டோ சூரியனைச் சுற்றி வர 248 ஆண்டுகள் ஆகும், அது 2178 இல் தனது சுற்றுப்பாதையை நிறைவு செய்யும் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • இந்த அரிய இமாலய மலர் அதிர்ஷ்டத்தைத் தருவதாகக் கூறப்படுகிறது – வீட்டில் புனிதமான பிரம்ம கமலத்தை வளர்ப்பது எப்படி? – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • வரலாற்றில் ஜனவரி 12 அன்று நடந்தது: ஆண்டுகளில் நடந்த மிக முக்கியமான நிகழ்வுகள் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    Recent Comments

    No comments to show.

    Archives

    • January 2026
    • December 2025
    • November 2025
    • October 2025
    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2026 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.