> செக்குடியரசின் ஆஸ்ட்ராவா நகரில் நடைபெற்ற கோல்டன் ஸ்பைக் தடகள போட்டியில் ஆடவருக்கான ஈட்டி எறிதலில் இந்தியாவின் நட்சத்திர வீரரான நீரஜ் சோப்ரா 85.29 மீட்டர் தூரம் எறிந்து முதலிடம் பிடித்து பட்டம் வென்றார்.
> இலங்கை அணிக்கு எதிரான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் வங்கதேச அணி 71 ஓவர்களில் 8 விக்கெட்கள் இழப்புக்கு 220 ரன்கள் எடுத்தது. அதிகபசட்மாக ஷத்மான் இஸ்லாம் 46 ரன்கள் சேர்த்தார்.
> டிஎன்பிஎல் டி 20 கிரிக்கெட் தொடரில் நேற்று முன்தினம் திருநெல்வேலியில் நடைபெற்ற ஆட்டத்தில் கோவை கிங்ஸ் அணியை 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது திருப்பூர் தமிழன்ஸ் அணி. 138 ரன்கள் இலக்கை விரட்டிய திருப்பூர் அணி 16.5 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 140 ரன் எடுத்து வெற்றி பெற்றது.
> ஆஸ்திரேலியா – மேற்கு இந்தியத் தீவுகள் இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பிரிட்ஜ்டவுனில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்று முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி 15 ஓவர்கள் வீசப்பட்ட நிலையில் 2 விக்கெட் இழப்புக்கு 22 ரன்கள் எடுத்திருந்தது. சாம் கான்ஸ்டாஸ் 3, கேமரூன் கிரீன் 3 ரன்களில் ஆட்டமிழந்தனர். உஸ்மான் கவாஜா 10, ஜோஷ் இங்லிஷ் 5 ரன்களுடன் களத்தில் இருந்தனர்.
> டெஸ்ட் கிரிக்கெட் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசை பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது. இதில் லீட்ஸ் போட்டியில் இரு இன்னிங்ஸிலும் சதம் விளாசிய இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ரிஷப் பந்த் 801 புள்ளிகளுடன் 7-வது இடத்துக்கு முன்னேறி உள்ளார். டெஸ்ட் தரவரிசையில் ரிஷப் பந்த் 7-வது இடத்தை பிடிப்பது இதுவே முதன்முறை.