Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Tuesday, September 16
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»விளையாட்டு»“நான் அப்படி சொல்லவே இல்லை!’ – ரிக்கி பான்ட்டிங்கை பதறவைத்த போலிச் செய்தி!
    விளையாட்டு

    “நான் அப்படி சொல்லவே இல்லை!’ – ரிக்கி பான்ட்டிங்கை பதறவைத்த போலிச் செய்தி!

    adminBy adminSeptember 16, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    “நான் அப்படி சொல்லவே இல்லை!’ – ரிக்கி பான்ட்டிங்கை பதறவைத்த போலிச் செய்தி!
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    போலிச் செய்திகளின் சதி வலைப்பின்னலின் சர்ச்சையின் மையக் கதாபாத்திரமாகி, பிறகு அந்தச் செய்திகளைக் கடுமையாகக் கண்டித்து மீண்டு வந்துள்ளார் ஆஸ்திரேலிய கிரிக்கெட் லெஜண்ட் ரிக்கி பான்டிங்.

    என்ன நடந்தது? – இந்தியா – பாகிஸ்தான் ஆசியக் கோப்பை டி20 போட்டியில் இந்திய வீரர்கள், பாகிஸ்தான் வீரர்களுடன் போட்டி முடிந்தவுடன் பரஸ்பர கைகுலுக்கல் சடங்கைப் புறக்கணித்தது முரண்பட்ட எதிர்வினைகளை இரு நாட்டு ரசிகர்களிடத்தில் ஏற்படுத்தி வரும் நிலையில், இந்திய வீரர்கள் கைகுலுக்க மறுத்தது பற்றிய போலிச் செய்தி ஒன்று ரிக்கி பான்டிங் கூறியதாக எக்ஸ் வலைத்தளத்தில் பரவியது. இதனையடுத்து பான்டிங் நெட்டிசன்களின் வசை வலையில் சிக்கினார்.

    ரிக்கி பான்டிங் மீது கடும் விமர்சனங்கள் குவிய ஆரம்பித்தன. அப்படி என்னதான் பான்டிங் கூறியதாக வெளியான போலி மேற்கோள் கூறிற்று?

    “இந்தப் போட்டி என்றென்றும் இந்தியாதான் இங்கே பெரிய தோல்வியாளர் என்றே நினைவில் இருக்கும்” என்பதே பான்டிங் கூறியதாக வெளியான போலிச் செய்தி.

    உண்மையில், பாண்டிங் இதுபோன்ற எந்தவொரு கருத்தையும் கூறவில்லை என்றும், இந்தப் போலி மேற்கோள் முற்றிலும் கற்பனையாகப் புனையப்பட்டக் கட்டுக்கதையே என்பது உறுதியாகியுள்ளது.

    ரிக்கி பான்டிங் ஸ்கை ஸ்போர்ட்ஸ் சேனலில் கூறியதாக போலியாக உருவாக்கப்பட்ட அந்த வாசகத்தில், “இந்திய அணியுடன் பாகிஸ்தான் வீரர்கள் கைகுலுக்க வேண்டும் என்று விரும்பிய விதம் ஜெண்டில்மென்களின் ஆட்டமாகிய இதில் பாகிஸ்தானை சாம்பியன்களாக அழியாப் புகழுக்கு இட்டுச் செல்ல இந்திய வீரர்களை நிரந்தர இழப்பாளர்களாக்கிவிட்டது” என்று கூறபட்டது.

    இதனையடுத்து பான்டிங் மீது கடுமையான வசைகளும் இழிவுபடுத்தல்களும் பதிவு செய்யப்பட, ரிக்கி பான்டிங் இதனை மறுத்துக் கூறும்போது, “சமூக வலைத்தளத்தில் நான் கூறியதாக வெளியான செய்திகள் பற்றி அறிவேன். தயவுகூர்ந்து தெரிந்து கொள்ளுங்கள், நான் நிச்சயமாக, உறுதியாக அதுபோன்று எதுவும் கூறவில்லை. இன்னும் சொல்லப்போனால் ஆசியக் கோப்பை பற்றி நான் எந்தவித கருத்தையுமே பொதுவில் கூறவே இல்லை” என்று விளக்கமளித்துள்ளார்.

    செய்யாத தவறுக்கு, பேசாத பேச்சுக்கு ரிக்கி பான்டிங் அகப்பட்டுக் கொண்டார், இப்போது அந்தச் செய்தி அவதூறுகள் நீக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    விளையாட்டு

    கேண்டிடேட்ஸ் தொடருக்கு ஆர்.வைஷாலி தகுதி!

    September 16, 2025
    விளையாட்டு

    சத்தமின்றி பதிலடி கொடுத்த சூர்யகுமார் யாதவின் படை!

    September 16, 2025
    விளையாட்டு

    ‘சூப்பர் 4’ சுற்றுக்கு இந்திய அணி தகுதி @ ஆசிய கோப்பை கிரிக்கெட்

    September 16, 2025
    விளையாட்டு

    120 பந்துகளில் 63 ‘டாட் பால்’கள் – இந்திய பந்துவீச்சில் திணறிய பாகிஸ்தான்!

    September 15, 2025
    விளையாட்டு

    பாகிஸ்தான் வீரர்களுடன் கைகுலுக்க இந்திய வீரர்கள் மறுப்பு – நடந்தது என்ன?

    September 15, 2025
    விளையாட்டு

    உலக குத்துச்சண்டை போட்டி: இந்திய வீராங்கனைகள் ஜாஸ்மின், மினாக் ஷிக்கு தங்கம்

    September 15, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • தகுதி வாய்ந்த ஆசிரியர்களை அரசு பாதுகாக்கும்: அமைச்சர் அன்பில் மகேஸ் உறுதி
    • சுற்றி வளைக்கப்படும் எடப்பாடி பழனிசாமி – என்ன செய்யப் போகிறது அதிமுக?
    • இந்த ஈரானிய ஒப்பனை கலைஞர் தன்னை கஜோலாக மாற்றிக்கொண்டார், ரசிகர்கள் தங்கள் கண்களை நம்ப முடியாது! | – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • மதமாற்றத் தடை சட்டங்களுக்கு எதிரான வழக்கில் மாநில அரசுகள் பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு
    • உரங்களை விரைந்து வழங்கிட உடனடி நடவடிக்கை தேவை: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்

    Recent Comments

    No comments to show.

    Archives

    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.