Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Friday, July 25
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»விளையாட்டு»தோனி பாணி… சரிவை நோக்கிச் செல்கிறாரா ரிஷப் பந்த்?
    விளையாட்டு

    தோனி பாணி… சரிவை நோக்கிச் செல்கிறாரா ரிஷப் பந்த்?

    adminBy adminApril 28, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    தோனி பாணி… சரிவை நோக்கிச் செல்கிறாரா ரிஷப் பந்த்?
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    இந்திய டெஸ்ட் அணியின் மிகப் பெரிய பொக்கிஷம் ரிஷப் பந்த். ஆனால், அவரை ஐபிஎல் கிரிக்கெட் காலி செய்து விடுமோ என்ற அச்சம் எழுந்துள்ளது. இப்போதைய தோனி போல் பேட்டிங் செய்வதை தவிர்ப்பது, பின்னால் இறங்குவது, சாக்குப் போக்குச் சொல்வது என்று அவர் மாறியிருப்பது கவலையளிக்கும் விஷயமாகும்.

    நடப்பு ஐபிஎல் தொடரில் ரிஷப் பந்த் நேற்றைய போட்டியில் இறங்கும் வரை 108 பந்துகளில் 106 ரன்களையே எடுத்துள்ளார். ஆனால் 110 பந்துகளில் 106 என்பதாகவே அவர் கதை உள்ளது. தான் இறங்குவதை தோனி போலவே ஒத்திப் போடுகிறார். தோனிக்கு வயதாகிறது, சரி. இவருக்கு என்னவாயிற்று?

    அதுவும் ஓர் அணியின் கேப்டனாக இருந்து கொண்டு அனைவருக்கும் ஓர் உத்வேகமான தலைமையாக வழிகாட்டியாக இல்லாமல் ஓ.பி. அடிக்கலாமா? திடீரென அவருக்கு இத்தகைய பின்னடைவு ஏற்படக் காரணம் என்ன என்பதை கம்பீர் உட்பட பிசிசிஐ நிர்வாகம் உடனடியாகக் கவனிக்க வேண்டும்.

    ஓப்பனிங் இறங்கினார், 4-ம் நிலையில் இறங்கினார், டவுன் ஆர்டரை மாற்றிக் கொண்டே இருக்கிறார். நேற்று கடைசி 2 பந்துகள் இருக்கும் போது இறங்குகிறார். அப்துல் சமது, டேவிட் மில்லர், ஆயுஷ் பதோனி ஆகியோரை இறக்கி விட்டு இவர் பின்னால் இறங்குகிறார் அதுவும் 2 பந்துகளே மீதமுள்ள போது இறங்குகிறார். என்ன ஆயிற்று பந்த்துக்கு?

    அதுவும் அவர்தான் இறங்காமல் இவர்களை இறக்கி விட்டதற்குக் கூறிய காரணம் மேலும் விசித்திரமாக உள்ளது, “என்னவென்றால் பிட்ச் இப்படியிருக்கும் போது அப்துல் சமதை அனுப்பி அதன் மூலம் சாதகப் பலன்களை அடைய விரும்பினோம். மில்லரை இறக்கிப் பார்த்தோம் ஆனால் இத்தகைய விஷயங்கள் குறித்து ஆலோசித்து முன்னோக்குகையில் சிறந்த அணிச்சேர்க்கையை உருவாக்க வேண்டும்” என்கிறார்.

    ஏன் இவர் இறங்கவில்லை என்பதற்குப் பதிலா இது? அப்துல் சமது, டேவிட் மில்லர் சரி, ஆனால் கேப்டனாக இவர் ஏன் இறங்கவில்லை, அணி நிர்வாகம்தான் அனைத்தையும் முடிவு செய்து இவரை ஒப்புக்குச் சப்பாணியாக வைத்திருக்கிறதா லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ். ஏற்கெனவே கே.எல்.ராகுலை அவமானப்படுத்திதான் அனுப்பியது லக்னோ. சரி இப்படி டவுன் ஆர்டரை மாற்றி பயன் கண்டாரா என்றால் அதுவும் இல்லை.

    முதலில் பேட்டிங் செய்யும் லக்னோ அணி பேட்டரை இம்பாக்ட் சப் ஆகப் பயன்படுத்தியதும் புரியாத புதிர், ரிஷப் பந்த் என்னும் பேட்டரை இறக்காமல் இம்பாக்ட் சப் இறக்குவது ஏன்?

    ரிஷப் பந்த்துக்கு என்னதான் நடக்கிறது என்று செடேஷ்வர் புஜாரா கூறும்போது, “உண்மையிலேயே எனக்கும் புரியவில்லை, என்ன சிந்தனை ஓடிக்கொண்டிருக்கிறது என்று. ரிஷப் பந்த் முன்னால்தான் இறங்க வேண்டும், தோனி செய்வது போல் ரிஷப் பந்த் செய்யக் கூடாது, தோனிக்கு வயதாகி விட்டது, ரிஷப் பந்த் இன்னும் இளைஞர்தான்.

    ரிஷப் பந்த் பினிஷர் அல்ல, ஆனால் 6வது ஓவர் முதல் 15வது ஓவர் வரை பேட் செய்யும் திறமைப் படைத்தவர்தான் ரிஷப் பந்த். வேகப்பந்து வீச்சிற்கு எதிராக ரன்களைக் குவிக்கும் ரிஷப் பந்த் பிற்பாடு ஸ்பின்னர்களிடம் திணறுகிறார் என்பதுதான் இப்போதைய கவலை” என்றார்.

    ஐபிஎல் அணிகள் புதிய திறமைகளைக் கொண்டு வருகிறேன் என்று அனுபவ வீரர்களைப் பலி வாங்க அனுமதிக்கக் கூடாது. பிசிசிஐ இது தொடர்பாக யோசிக்க வேண்டும்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    விளையாட்டு

    ரிஷப் பந்த் காயத்துடன் போராடி அரை சதம் விளாசல்: இந்திய அணி 358 ரன்களுக்கு ஆட்டமிழப்பு

    July 25, 2025
    விளையாட்டு

    WWE மல்யுத்த வீரர் ஹல்க் ஹோகன் மாரடைப்பால் காலமானார்!

    July 25, 2025
    விளையாட்டு

    டெஸ்ட்டில் முதல் விக்கெட்டை வீழ்த்திய அன்ஷுல் காம்போஜ்: டக்கெட்டை 94 ரன்களில் வெளியேற்றினார்!

    July 24, 2025
    விளையாட்டு

    வாஷிங்டன் சுந்தருக்கு முன்பு ஷர்துலை இறக்குவதா? – தினேஷ் கார்த்திக் விமர்சனம்

    July 24, 2025
    விளையாட்டு

    எலும்பு முறிவால் ரிஷப் பந்த் விலகல்: இங்கிலாந்து தொடரில் இந்திய அணிக்கு பின்னடைவு

    July 24, 2025
    விளையாட்டு

    ரிட்டயர்டு ஹர்ட் ஆன ரிஷப் பந்த் மீண்டும் பேட் செய்ய வருவாரா?

    July 24, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • பிரதமர் மோடி நாளை இரவு வருகை: தூத்துக்குடி விமான நிலையத்தை சுற்றி 5 அடுக்கு பாதுகாப்பு
    • அதிர்ச்சியூட்டும் கண்டுபிடிப்பு: பொதுவான வயிற்று பாக்டீரியாக்கள் 12 மில்லியன் புற்றுநோய் நிகழ்வுகளுடன் இணைக்கப்படலாம் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • 6 பாக். டிரோன்களை சுட்டு வீழ்த்திய பிஎஸ்எப்: ஹெராயின், துப்பாக்கிகள் பறிமுதல்
    • சாத்தான்குளம் இரட்டை கொலை வழக்கு: காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் அப்ரூவராக மாற சிபிஐ ஆட்சேபம்
    • மோசமான கொழுப்பைக் குறைக்க 4 பயனுள்ள வழிகள் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    Recent Comments

    No comments to show.

    Archives

    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.