துபாய்: தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வீரர் பிரேனலன் சுப்ராயன் போட்டிகளில் பந்துவீச சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்(ஐசிசி) அனுமதி வழங்கியுள்ளது.
தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணிக்காக போட்டிகளில் பங்கேற்று வருகிறார் சுப்ராயன். இந்நிலையில் கடந்த மாதம் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அவர் பங்கேற்றார்.
அப்போது அவர் பந்துவீசுவதில் சந்தேகம் இருப்பதாக புகார் எழுப்பப்பட்டது. இதைத் தொடர்ந்து ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேனி
லுள்ள நேஷனல் கிரிக்கெட் சென்டரில், அவரது பந்துவீச்சு பரிசோதனை செய்யப்பட்டது. சுயபரிசோதனை பந்துவீச்சு மதிப்பீடு என்ற பெயரில் இந்த சோதனை நடத்தப்பட்டது. இதன்படி அவர் பந்துவீசும்போது முழங்கை 15 டிகிரி அளவுக்குள் இருப்பதாகவும், அது ஐசிசி-யின் பந்துவீச்சு விதிமுறைக்கு உட்பட்டு இருப்பதாகவும் அறிக்கை தரப்பட்டது. இதைத் தொடர்ந்து அவர் போட்டிகளில் பங்கேற்கலாம் என ஐசிசி அனுமதியை வழங்கியுள்ளது.