துபாய்: 2026-ம் ஆண்டுக்கான டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியா மற்றும் இலங்கை நாடுகளில் நடைபெற உள்ளது. 2024-ம் ஆண்டு அமெரிக்கா, மேற்கு இந்தியத் தீவுகள் நாட்டில் நடைபெற்ற தொடர் போலவே இந்தத் தொடருக்கும் மொத்தமாக 20 அணிகள் 4 பிரிவுகளாகப் பிரிக்கப்பட உள்ளன.
இந்தத் தொடருக்கு டி20 தரவரிசைப் பட்டியலில் உள்ள முதல் 8 அணிகள் நேரடியாகத் தகுதி பெற்று விடும். எஞ்சிய அணிகள் தகுதிச் சுற்றில் விளையாடி வெற்றி பெறும் அடிப்படையில் தகுதி பெறும்.
அதன்படி, ஜிம்பாப்வே அணி, தனது கடைசி நான்கு தகுதிச் சுற்றுப் போட்டிகளில் கென்யா, தான்சானியா ஆகிய அணிகளை வீழ்த்தி அடுத்த டி20 உலகக் கோப்பையில் விளையாடுவதற்கான வாய்ப்பைப் பெற்றுள்ளது. அதேபோல, நமீபியா அணியும் உலகக் கோப்பையில் பங்கேற்க தகுதிபெற்றுள்ளது.