Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Sunday, August 3
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»விளையாட்டு»ஜெய்ஸ்வால் சதம்: ஆகாஷ் தீப், ஜடேஜா, வாஷி அரை சதம்: இங்கிலாந்துக்கு 374 ரன்கள் இலக்கு – ஓவல் டெஸ்ட்
    விளையாட்டு

    ஜெய்ஸ்வால் சதம்: ஆகாஷ் தீப், ஜடேஜா, வாஷி அரை சதம்: இங்கிலாந்துக்கு 374 ரன்கள் இலக்கு – ஓவல் டெஸ்ட்

    adminBy adminAugust 3, 2025No Comments3 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    ஜெய்ஸ்வால் சதம்: ஆகாஷ் தீப், ஜடேஜா, வாஷி அரை சதம்: இங்கிலாந்துக்கு 374 ரன்கள் இலக்கு – ஓவல் டெஸ்ட்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    லண்டன்: இங்கிலாந்து அணிக்கு எதிரான கடைசி மற்றும் 5-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணி 396 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதன் மூலம் இங்கிலாந்து அணிக்கு 374 ரன்கள் இலக்கு நிர்ணயித்துள்ளது இந்தியா. தொடக்க வீரரான யஷஸ்வி ஜெய்ஸ்வால் சதம் விளாசினார். ஆகாஷ் தீப், ஜடேஜா, வாஷிங்​டன் சுந்​தர் ஆகியோர் அரை சதம் அடித்தனர்.

    லண்டன் கெனிங்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 224 ரன்களும், இங்கிலாந்து அணி 247 ரன்களும் எடுத்தன. 23 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்ஸை விளையாடிய இந்திய அணி 2-வது நாள் ஆட்டத்தின் முடிவில் 18 ஓவர்களில் 2 விக்கெட்கள் இழப்புக்கு 75 ரன்கள் எடுத்தது. கே.எல்.ராகுல் 7. சாய் சுதர்சன் 11 ரன்களில் ஆட்டமிழந்தனர்

    யஷஸ்வி ஜெய்​ஸ்​வால் 51, ஆகாஷ் தீப் 4 ரன்​களு​டன் களத்​தில் இருந்​தனர். 3-வது நாளான நேற்று இந்​திய அணி தொடர்ந்து விளை​யாடியது. சிறப்​பாக விளை​யாடிய ஆகாஷ் தீப் 70 பந்​துகளில், 9 பவுண்​டரி​களு​டன் தனது முதல் அரை சதத்தை விளாசி​னார். அவர், அரை சதம் கடந்​ததும் பால்​க​னி​யில் இருந்​த​படி ஒட்​டுமொத்த இந்​திய அணி​யினரும் எழுந்து கைதட்டி பாராட்​டினர். பயிற்​சி​யாளர் கவுதம் கம்​பீர் புன்​னகை​யால் வாழ்த்​தி​னார்.

    150பந்​துகளில் 107 ரன்​கள் விளாசிய இந்த ஜோடியை ஜேமி ஓவர்​டன் பிரித்​தார். ஆகாஷ் தீப் 94 பந்​துகளில், 12 பவுண்​டரி​களு​டன் 66 ரன்​கள் எடுத்த நிலை​யில் ஜேமி ஓவர்​டன் வீசிய பேக் ஆஃப்தி லென்ந்த் பந்தை லெக் திசை​யில் அடிக்க முயன்ற போது மட்டை விளிம்​பில் பட்டு பேக்​வேர்டு பாயின்ட் திசை​யில் நின்ற கஸ் அட்​கின்​சனிடம் கேட்ச் ஆனது. இதையடுத்து ஷுப்​மன் கில் களமிறங்க மதிய உணவு இடைவேளை​யில் இந்​திய அணி 44 ஓவர்​களில் 3 விக்​கெட்​கள் இழப்​புக்கு 189 ரன்​கள் எடுத்​தது.

    ஜெய்​ஸ்​வால் 85, ஷுப்​மன் கில் 11 ரன்​களு​டன் களத்​தில் இருந்​தனர். மதிய உணவுக்கு இடைவேளைக்கு பின்​னர் கஸ் அட்​கின்​சன் வீசிய முதல் பந்​திலேயே ஷுப்​மன் கில் எல்​பிடபிள்யூ முறை​யில் ஆட்​ட​மிழந்​தார். அவர், 9 பந்​துகளை சந்​தித்து 2 பவுண்​டரி​களு​டன் 11 ரன்​கள் சேர்த்​தார். இதையடுத்து கருண் நாயர் களமிறங்​கி​னார். சீராக ரன்​கள் சேர்த்த ஜெய்​ஸ்​வால் 127 பந்​துகளில், 2 சிக்​ஸர்​கள், 11 பவுண்​டரி​களு​டன் தனது 6-வது சதத்தை விளாசி​னார்.

    கருண் நாயர் தனக்கு கிடைத்த வாய்ப்பை மீண்​டும் ஒரு முறை சரி​யாக பயன்​படுத்​திக் கொள்​ளாமல் ஆட்​ட​மிழந்​தார். 32 பந்​துகளை எதிர்​கொண்ட அவர், 3 பவுண்​டரி​களு​டன் 17 ரன்​கள் எடுத்த நிலை​யில் கஸ் அட்​கின்​சன் பந்​தில் விக்​கெட் கீப்​பர் ஜேமி ஸ்மித்​திடம் பிடி​கொடுத்து வெளி​யேறி​னார். இதன் பின்​னர் ஜடேஜா களமிறங்​கி​னார். அற்​புத​மாக விளை​யாடி வந்த ஜெய்​ஸ்​வால் 164 பந்​துகளில், 2 சிக்​ஸர்​கள், 14 பவுண்​டரி​களு​டன் 118 ரன்​கள் எடுத்த நிலை​யில் ஜோஷ் டங்க் ஆஃப் ஸ்டெம்​புக்கு வெளியே வீசிய பந்தை விளாசிய போது பேக்​வேர்டு பாயின்ட் திசை​யில் ஜேமி ஓவர்​டனிடம் கேட்ச் ஆனது.

    இதையடுத்து துருவ் ஜூரெல் களமிறங்​கி​னார். தேநீர் இடைவேளை​யில் இந்​திய அணி 71 ஓவர்​களில் 6 விக்​கெட்​கள் இழப்​புக்கு 304 ரன்​கள் எடுத்திருந்​தது. ஜடேஜா 26 ரன்​களு​ட​னும், துருவ் ஜூரெல் 25 ரன்​களு​ட​னும் களத்தில் இருந்​தனர். தேநீர் இடைவேளைக்கு பின்​னர் இரு​வரும் தொடர்ந்து விளை​யாடி​னார்​கள்.

    துருவ் ஜூரெல் 46 பந்​துகளில், 4 பவுண்​டரி​களு​டன் 34 ரன்​கள் எடுத்த நிலை​யில் ஜேமி ஓவர்​டன் பந்​தில் எல்​பிடபிள்யூ ஆனார். இதையடுத்து வாஷிங்​டன் சுந்​தர் களமிறங்​கி​னார். ஜடேஜா 72 பந்​துகளில், 5 பவுண்​டரி​களு​டன் அரை சதம் அடித்​தார். இது அவரது 27-வது அரை சதமாக அமைந்​தது. 82 ஓவர்​கள் வீசப்​பட்ட நிலை​யில் இந்​திய அணி 7 விக்​கெட்​கள் இழப்​புக்கு 354 ரன்​கள் எடுத்​திருந்​தது.

    அடுத்த 6 ஓவர்களில் ஜடேஜா 53, சிராஜ் 0, வாஷிங்​டன் சுந்​தர் 53 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். இரண்டாவது இன்னிங்ஸில் இந்தியா 88 ஓவருக்கு 396 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. இங்​கிலாந்து அணி சார்​பில் கஸ் அட்​கின்​சன் 3, ஜோஷ் டங்க் 5, ஜேமி ஓவர்​டன்​ 2 விக்​கெட்​கள்​ கைப்​பற்​றி இருந்​தனர்​.

    இதையடுத்து 374 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியது. மூன்றாம் நாள் ஆட்ட முடிவில் இங்கிலாந்து அணி 1 விக்கெட் இழப்புக்கு 13.5 ஓவர்களில் 50 ரன்கள் எடுத்திருந்தது. ஸாக் கிராவ்லியை சிராஜ் போல்ட் செய்தார். பென் டக்கெட் 34 ரன்களுடன் களத்தில் உள்ளார். அந்த அணியின் வெற்றிக்கு இன்னும் 324 ரன்கள் தேவை. இந்தியாவின் வெற்றிக்கு 9 விக்கெட்டுகள் தேவை.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    விளையாட்டு

    கேப்டனாக டான் பிராட்மேனுக்கு அடுத்த இடத்தில் கில்: ஜடேஜாவின் பல அதிரடி சாதனைகள்!

    August 3, 2025
    விளையாட்டு

    டிவில்லியர்ஸ் சதம்: பாகிஸ்தானை வீழ்த்தி பட்டம் வென்ற தென் ஆப்பிரிக்கா | WCL 2025

    August 3, 2025
    விளையாட்டு

    லயோனல் மெஸ்ஸி டிசம்பரில் இந்தியாவில் 4 நாட்கள் சுற்றுப்பயணம்: கங்குலி உள்ளிட்ட பிரபலங்களுடன் கால்பந்து விளையாடுகிறார்

    August 3, 2025
    விளையாட்டு

    இந்திய கால்பந்து அணியின் புதிய பயிற்சியாளர் காலித் ஜமீல் முன் உள்ள சவால்கள் என்னென்ன?

    August 2, 2025
    விளையாட்டு

    ஓவல் டெஸ்ட்டில் இந்திய அணி வாகை சூடுமா? – ஒரு விரைவுப் பார்வை

    August 2, 2025
    விளையாட்டு

    ஓவல் டெஸ்ட் | இந்தியாவை பந்தாடிய டக்கெட், கிராவ்லி; இங்கிலாந்து பேட்டர்களை தட்டித் தூக்கிய சிராஜ்

    August 2, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • ஆக. 7ல் ராகுல் காந்தி இல்லத்தில் இண்டியா கூட்டணி தலைவர்கள் கூட்டம்!
    • தீரன் சின்னமலை 220வது நினைவு நாள்: அதிமுக நிர்வாகிகள் மலர்தூவி மரியாதை
    • ஆப்டிகல் மாயை: 9 வினாடிகளில் 3 UNARBED பூசணிக்காயைக் கண்டுபிடி | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • தேர்தல் ஆணையத்தின் முறைகேடுகளை காங். ஆக. 5 அன்று அம்பலப்படுத்தும்: கே.சி. வேணுகோபால்
    • பஞ்சலிங்க அருவியில் வெள்ளப்பெருக்கு – திருமூர்த்தி மலையில் ஆடி பெருக்கு பூஜைகள் நிறுத்தம்

    Recent Comments

    No comments to show.

    Archives

    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.