புதுடெல்லி: இந்திய குத்துச்சண்டை கூட்டமைப்பு வரும் அக்டோர் 1 முதல் 7 வரை பிஎஃப்ஐ கோப்பைக்கான குத்துச்சண்டை போட்டியை சென்னையில் நடத்துகிறது.
ஆடவர், மகளிர் ஆகியோருக்கு 10 பிரிவுகளில் போட்டிகள் நடைபெறுகின்றன. இந்த போட்டியில் ஒவ்வொரு பிரிவிலும் தங்கம் மற்றும் வெள்ளிப் பதக்கங்கள் வெல்லும் வீரர், வீராங்கனைகள் உயரடுக்கு தேசிய பயிற்சி முகாமில் கலந்து கொள்வதற்கான வாய்ப்பை பெறுவார்கள்.
இந்த தகவலை இந்திய குத்துச்சண்டை கூட்டமைப்பின் தலைவர் அஜய் சிங் தெரிவித்துள்ளார்.