ஐபிஎல் தொடரின் இன்றைய ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாசத்தில் சிஎஸ்கே அணியை வீழ்த்தியது ராஜஸ்தான்
ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரின் 62வது ஆட்டம் இரவு 7.30 மணிக்கு டெல்லி அருண் ஜேட்லி மைதானத்தில் நடைபெற்றது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி – ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின.
டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பவுலிங் தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் இறங்கிய சிஎஸ்கே அணியின் ஆயுஷ் மாத்ரே, டெவான் கான்வே இருவரும் இன்னிங்ஸை தொடங்கினர். இதில் ஆயுஷ் மாத்ரே 20 ரன்களில் 43 ரன்கள் விளாசி அசத்தினார். கான்வே 10 ரன்களில் வெளியேறினார். ரவிச்சந்திரன் அஸ்வின் 13, ஜடேஜா 1, ப்ரெவிஸ் 42, துபே 39, தோனி 16 என 20 ஓவர்களில் 187 ரன்கள் எடுத்தது சிஎஸ்கே.
188 ரன்கள் என்ற இலக்குடன் இறங்கிய ராஜஸ்தான் அணியின் ஜெய்ஸ்வால், சூர்யவன்ஷி இருவரும் ஓப்பனிங் இறங்கினர். இதில் சூர்யவன்ஷி 57 ரன்களும் ஜெய்ஸ்வால் 36 ரன்களும் குவித்தனர். சஞ்சு சாம்சன் 41, ரியான் பராக் 3, த்ருவ் ஜுரேல் 31, ஹெட்மெயர் 12 என 6 விக்கெட் வித்தியாசத்தில் சிஎஸ்கே அணியை வீழ்த்தியது ராஜஸ்தான். இந்த சீசனில் ராஜஸ்தான் அணிக்கு இது கடைசி ஆட்டமாகும். இந்த வெற்றியுடன் ராஜஸ்தான் அணி இந்த சீசனை நிறைவு செய்துள்ளது.