Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Tuesday, September 16
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»விளையாட்டு»சத்தமின்றி பதிலடி கொடுத்த சூர்யகுமார் யாதவின் படை!
    விளையாட்டு

    சத்தமின்றி பதிலடி கொடுத்த சூர்யகுமார் யாதவின் படை!

    adminBy adminSeptember 16, 2025No Comments4 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    சத்தமின்றி பதிலடி கொடுத்த சூர்யகுமார் யாதவின் படை!
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    ஐக்​கிய அரபு அமீரகத்​தில் ஆசிய கோப்பை டி20 கிரிக்​கெட் தொடர் நடை​பெற்று வரு​கிறது. இதில் நேற்று முன்​தினம் துபா​யில் நடை​பெற்ற ஆட்​டத்​தில் இந்​தியா – பாகிஸ்​தான் அணி​கள் மோதின. எப்​போதுமே இந்​திய அணி, பாகிஸ்​தானுக்கு எதி​ராக விளை​யாடும் போது அதன் எதிர்​பார்ப்பு என்​பது பலமடங்கு அதி​க​மாக இருக்​கும். ஆனால் நேற்று முன்​தினம் நடை​பெற்ற ஆட்​ட​மும், அதில் நிகழ்ந்த சில நிகழ்​வு​களும் எதிர்​பா​ராத விதத்​தில் புதி​தாக இருந்​தன.

    பஹல்​காம் தாக்​குதலின் தாக்​கம் மிக வெளிப்​படை​யாக தெரிந்​தது. இரு அணி​களின் வீரர்​களும் களத்​துக்கு வந்​த​போது அவர்​கள், பேசிக் கொள்​ள​வும் இல்​லை, வழக்​க​மான கை குலுக்​கலும் இல்​லை. கடந்த ஏப்​ரல் 22-ம் தேதி நடந்த பஹல்​காம் தீவிர​வாத தாக்​குதலில் 26 பேர் இறந்​தனர். தொடர்ந்து இந்​தியா – பாகிஸ்​தான் இடையே பதற்​றம் அதி​கரித்​தது. ஆபரேஷன் சிந்​தூர் மூலம் இந்​தியா பதிலடி கொடுத்த பின்​னர், போர் நிறுத்​தம் ஏற்​பட்​டது.

    இந்த நிகழ்​வுக்கு பின்​னர் இந்​தியா – பாகிஸ்​தான் அணி​கள் நேற்று முன்​தினம் முதல் முறை​யாக கிரிக்​கெட் போட்​டி​யில் விளை​யாடின. இந்த ஆட்​டத்​தில் 128 ரன்​கள் இலக்கை விரட்​டிய இந்​திய அணி 15.5-வது ஓவரில் சூர்​யகு​மார் யாதவ் விளாசிய சிக்​ஸருடன் 7 விக்​கெட்​கள் வித்​தி​யாசத்​தில் வெற்​றிகர​மாக போட்​டியை நிறைவு செய்​தது. சிக்​ஸர் விளாசி வெற்றி பெற்ற அடுத்த நொடி​யில் மறு​முனை​யில் நின்​றிருந்த ஷிவம் துபேவை அழைத்​துக் கொண்டு நேரடி​யாக இந்​திய அணி​யின் ஓய்வு அறைக்​குச் சென்​றார் சூர்​யகு​மார் யாதவ்.

    வழக்​க​மாக கிரிக்​கெட் போட்​டி​யில் வெற்றி உடன் எதிரணி வீரர்​களு​டன் கை குலுக்​கிக் கொள்​வது நடை​முறை​யாக உள்​ளது. ஆனால் களத்​தில் இருந்த பாகிஸ்​தான் வீரர்​களு​டன் கை குலுக்​காமலேயே திரும்​பிச் சென்​றார் சூர்​யகு​மார் யாதவ். இந்​திய அணி​யின் பயிற்சி குழு​வும் போட்டி முடிந்த பிறகு களத்​துக்கு வராமல் ஓய்​வறை​யிலேயே இருந்​தனர். பாகிஸ்​தான் கேப்​டன் சல்​மான் அலி ஆகா தனது சக வீரர்​களு​டன் வழக்​க​மான கைகுலுக்​கலுக்​காக வரிசை​யில் நின்​றார். மேலும் இந்​திய வீரர்​கள் அமர்ந்​திருந்த இடத்தை நோக்கி பாதி தூரம் கூட நடந்து சென்​றார், ஆனால் இந்​திய அணி தரப்​பில் இருந்து எந்த வீரர்​களும் பதிலளிக்​க​வில்​லை.

    இரு அணி​களுக்கு இடையி​லான இறுக்​கம் டாஸ் போடும் போதே வெளிப்​பட்​டது. பாகிஸ்​தான் டாஸ் வென்ற போது அந்த அணி​யின் கேப்​டன் சல்​மான் ஆகா​வுடன், சூர்​யகு​மார் கை குலுக்​க​வில்​லை. நேருக்கு நேர் பார்த்​துக் கொள்​வதை​யும் தவிர்த்​தனர். மேலும் அணி விவரங்​கள் அடங்​கிய பட்டியலையும் இரு அணி​களின் கேப்​டன்​களும் பரஸ்​பரம் மாற்​றிக்​கொள்​வது உண்​டு. இது​வும் நிகழ​வில்​லை. மாறாக இரு​வரும் போட்டி ரெஃப்ரீ ஆண்டி பைக்​ராஃப்​டிடம் வழங்​கிச் சென்​றனர்.

    ஒட்டுமொத்தமாக இந்திய அணி அமைதியான முறையில், பதிலடி கொடுத்தது போன்றே இந்த ஆட்டம் அமைந்தது. இது ஒருபுறம் இருக்க போட்டி நடைபெற்ற மைதான அரங்குகளில் பல்வேறு பகுதிகளில் காலி இருக்கைகள் காணப்பட்டன. 35 ஓவர்கள் நடைபெற்ற போட்டியில் இரு நாட்டு வீரர்களும் ஒருமுறை கூட இன்னொருவருடன் பேசிக்கொள்ளவும் இல்லை. வார்த்தை போர்களும், வம்பிழுக்கும் வகையில் சைகைகளும் இடம் பெறவில்லை.

    போட்டிக்குப் பிறகு இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் கூறும்போது, “நாங்கள் அரசாங்கத்துடனும் பிசிசிஐயுடனும் இணைந்துள்ளோம். அணியாக நாங்கள் ஒரு முடிவை எடுத்தோம். நாங்கள் இங்கு விளையாடுவதற்காக மட்டுமே வந்திருக்கிறோம். அவர்களுக்கு பதில் அளித்திருக்கிறோம். இது ஒரு சிறந்த உணர்வு. நாட்டுக்கு சிறந்த முறையில் ‘ரிட்டர்ன் கிஃப்ட்’ கொடுத்துள்ளோம்.

    ஒரு விளையாட்டு வீரராக வாழ்க்கையில் ஒருசில விஷயங்களை விளையாட்டு மரபைவிட முதன்மையானதாகக் கருத வேண்டும். பஹல்காமில் நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்துடன் நாங்கள் இருக்கிறோம். இந்த போட்டியின் வெற்றியை ஆபரேஷன் சிந்தூரில் ஈடுபட்ட ஆயுதப்படை வீரர்களுக்கு அர்ப்பணிக்கிறோம்” என்றார்.

    எதற்காக இந்த முடிவு? – ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் முழுவதுமே பாகிஸ்தான் அணியுடன் கைகுலுக்கக் கூடாது என்ற முடிவை இந்திய அணி நிர்வாகம் எடுத்திருக்ககூடும் என கருதப்படுகிறது. இதற்கு பஹல்காம் தாக்குதலும், அதைத் தொடர்ந்து இரு அணிகள் இடையிலான போட்டிக்கு எதிர்க்கட்சிகள் தெரிவித்த எதிர்ப்பும் காரணமாக அமைந்திருக்கக்கூடும்.

    இந்த முடிவுக்கு பிசிசிஐ-யும் இசைவு தெரிவித்திருக்கக்கூடும். நடப்பு தொடரில் வரும் ஞாயிற்றுக்கிழமை இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மீண்டும் மோத உள்ளன. இதைத் தொடந்து 28-ம் தேதி நடைபெறும் இறுதிப் போட்டியிலும் இரு அணிகளும் நேருக்கு நேர் சந்திக்க வாய்ப்பு உள்ளன. இந்த ஆட்டங்களிலும் இந்திய அணியின் பதிலடி தொடரக்கூடும்.

    எதிர்ப்புகளை மீறி விளையாடுவது ஏன்? – பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா கிரிக்கெட் விளையாட அரசும் பிசிசிஐயும் அனுமதித்திருப்பதற்கு பல்வேறு தரப்பில் கண்டனம் எழுந்தது. எதிர்ப்புகளை மீறி இந்திய அணி, பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடுவதில் உள்ளார்ந்த காரணம் இருப்பது தெரியவந்துள்ளது. 2028-ம் ஆண்டு லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற உள்ள ஒலிம்பிக்கில் கிரிக்கெட் போட்டி சேர்க்கப்பட்டுள்ளது. மேலும் 2030-ம் ஆண்டு காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளையும் 2036-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளையும் அகமதாபாத்தில் நடத்த இந்தியா விரும்புகிறது.

    பெரிய அளவிலான போட்டிகளை நடத்த விரும்பும் நிலையில், உலகளாவிய அல்லது கண்டங்கள் அளவிலான பல நாடுகளும் பங்கேற்கும் போட்டிகளில் பாகிஸ்தானுடன் இந்திய அணி விளையாடாமல் இருப்பது சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் பார்வைக்கு செல்லக்கூடும். இது ஒலிம்பிக் விளையாட்டை நடத்துவதற்கான உரிமையை பெறும் வாய்ப்பை கடுமையாக பாதிக்கக்கூடும் என கருதப்படுகிறது. இதை கருத்தில் கொண்டே இந்திய அணி ஐசிசி நடத்தும் தொடர்களிலும், ஆசிய அளவிலான போட்டிகளிலும் பாகிஸ்தானுடன் விளையாடி வருகிறது.

    ‘இது ஒன்றும் புதிதல்ல’ – சர்வதேச விளையாட்டுகளில் வரலாற்று ரீதியாக, அரசியல் காரணங்களுக்காக கைகுலுக்காமல் இருப்பது புதிதல்ல. 2023-ம் ஆண்டு நடைபெற்ற விம்பிள்டன் டென்னிஸ் தொடரில் பெலாரஸ் வீராங்கனை விக்டோரியா அசரன்காவுக்கு எதிராக விளையாடிய உக்ரைனின் எலினா ஸ்விட்டோலினா போட்டியில் வெற்றி பெற்ற போதிலும் கைகுலுக்க மறுத்து விலகிச் சென்றார். தன்னுடைய நாட்டுக்கு எதிராக போர் தொடுத்து வருவதால் ரஷ்யா, பெலாரஸைச் சேர்ந்த எந்த வீராங்கனையுடனும் கைகுலுக்க மாட்டேன் என்று ஸ்விட்டோலினா தெளிவுபடுத்தியிருந்தார்.

    ‘விதிமுறையில் இல்லை’ – பிசிசிஐ மூத்த அதிகாரி ஒருவர் கூறும்போது, “விதிமுறை புத்தகத்தைப் படித்தால், எதிர் அணியுடன் கைகுலுக்குவது குறித்து எந்த விவரக்குறிப்பும் இல்லை. இது ஒரு நல்லெண்ண சைகை, ஒரு வகையான மரபு அவ்வளவுதான். விளையாட்டு துறையில் உலகளவில் பின்பற்றப்படும் சட்டம் அல்ல. கை குலுக்குவது சட்டம் இல்லையென்றால், நீண்ட காலமாக பதற்றமான உறவைக் கொண்ட ஒரு அணியுடன் கைகுலுக்க வேண்டிய கட்டாயம் இல்லை” என்றார்.

    பாக். கிரிக்கெட் வாரியம் எதிர்ப்பு: ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி வீரர்கள் கைகுலுக்காமல் சென்ற விவகாரம் விவாதப்பொருளாகி உள்ளது. இந்நிலையில் இந்த போட்டியில் ரெஃப்ரீயாக இருந்த ஆண்டி பைக்ராஃப்ட்டை நீக்க வேண்டும் என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம், ஆசிய கிரிக்கெட் கவுன்சிலிடம் புகார் அளித்துள்ளது.

    இந்த விவகாரத்தில் தற்போது ஐசிசி தலையிட வேண்டிய நிலை உருவாகி உள்ளது. தற்போது ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் தலைவராக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக இருந்து வரும் மோஷின் நக்வி உள்ளார். அதேவேளையில் ஐசிசி தலைவராக இந்தியாவின் ஜெய் ஷா உள்ளார்.

    முன்னதாக டாஸ் போடும் போது, பாகிஸ்தான் கேப்டன் சல்மான் அலி ஆகாவை, இந்திய கேப்டனுடன் கைகுலுக்க வேண்டாம் என்று மேட்ச் ரெஃப்ரீ ஆன்டி பைக்ராஃப்ட் கேட்டுக் கொண்டதாக பாகிஸ்தான் அணி மேலாளர் நவேத் சீமா குற்றம் சாட்டியிருந்தார். இதற்கு

    பதிலடி கொடுக்கும் விதமாகவே போட்டி: முடிவடைந்ததும் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்புக்கு சல்மான் அலியை அனுப்பவில்லை என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

    பரிசளிப்பு விழாவில் என்ன நிகழும்? – பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் அறிக்கைகளுக்கு பிசிசிஐ பதிலளிக்கவில்லை. ஆனால் செப்டம்பர் 28 அன்று நடைபெறும் இறுதிப் போட்டி பரிசளிப்பு விழாவில் வெற்றி பெறும் அணிக்கு ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவராக மோஷின் நக்வி வெற்றி கோப்பையை வழங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒருவேளை இந்திய அணி வெற்றியாளராக இருந்தால் அப்போது என்ன நடைபெறும் என்பதை காண கிரிக்கெட் வட்டராங்கள் இப்போதே தயாராகிவிட்டன.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    விளையாட்டு

    கேண்டிடேட்ஸ் தொடருக்கு ஆர்.வைஷாலி தகுதி!

    September 16, 2025
    விளையாட்டு

    ‘சூப்பர் 4’ சுற்றுக்கு இந்திய அணி தகுதி @ ஆசிய கோப்பை கிரிக்கெட்

    September 16, 2025
    விளையாட்டு

    120 பந்துகளில் 63 ‘டாட் பால்’கள் – இந்திய பந்துவீச்சில் திணறிய பாகிஸ்தான்!

    September 15, 2025
    விளையாட்டு

    பாகிஸ்தான் வீரர்களுடன் கைகுலுக்க இந்திய வீரர்கள் மறுப்பு – நடந்தது என்ன?

    September 15, 2025
    விளையாட்டு

    உலக குத்துச்சண்டை போட்டி: இந்திய வீராங்கனைகள் ஜாஸ்மின், மினாக் ஷிக்கு தங்கம்

    September 15, 2025
    விளையாட்டு

    ஆசிய கோப்பை ஹாக்கி: சீனா சாம்பியன்

    September 15, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • திமுக நடத்திய ஓரணியில் தமிழ்நாடு முன்னெடுப்பில் ‘தமிழகத்தை தலைகுனிய விடமாட்டோம்’ உறுதிமொழி ஏற்பு
    • மின்வாரியம் சார்பில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை: தளவாடப் பொருட்களை இருப்பு வைக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்
    • கேண்டிடேட்ஸ் தொடருக்கு ஆர்.வைஷாலி தகுதி!
    • பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு மாதம் ரூ.2,000 வழங்கும் ‘அன்புக் கரங்கள்’ திட்டம் தொடக்கம்
    • உடன்குடி அனல்மின் நிலையத்தில் சோதனை மின்னுற்பத்தி தொடக்கம்: மின்வாரிய அதிகாரிகள் தகவல்

    Recent Comments

    No comments to show.

    Archives

    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.