Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Monday, June 30
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»விளையாட்டு»காகிசோ ரபாடா மீதான தடை முடிவுக்கு வந்ததாக அறிவிப்பு
    விளையாட்டு

    காகிசோ ரபாடா மீதான தடை முடிவுக்கு வந்ததாக அறிவிப்பு

    adminBy adminMay 6, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    காகிசோ ரபாடா மீதான தடை முடிவுக்கு வந்ததாக அறிவிப்பு
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    மும்பை: தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளரான காகிசோ ரபாடா, நடப்பு ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக விளையாடி வந்தார். முதல் இரு ஆட்டங்களில் மட்டும் விளையாடிய அவர், அதன் பின்னர் அவசரமாக தாயகம் புறப்பட்டுச் சென்றார். குஜராத் அணி நிர்வாகம், ரபாடா சொந்த காரணங்களுக்காக தாய்நாட்டுக்கு சென்றிருப்பதாக தெரிவித்திருந்தது.

    இந்நிலையில் கடந்த 3-ம் தேதி தென் ஆப்பிரிக்க வீரர்கள் சங்கத்தின் வாயிலாக அறிக்கை ஒன்றை வெளியிட்ட ரபாடா அதில், ஊக்கமருந்து பயன்படுத்தியதால் தனக்கு கிரிக்கெட் விளையாட இடைக்காலத் தடை விதிக்கப்பட்டிருப்பதாக கூறியிருந்தார். இது கிரிக்கெட் உலகை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

    ரபாடா கடந்த ஜனவரி மாதம் தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்ற எஸ்ஏ20 தொடரில் பங்கேற்றார். இதில் 21-ம் தேதி எம்ஐ கேப்டவுன், டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதிய ஆட்டத்துக்கு பின்னர் ரபாடாவுக்கு சோதனை நடத்தப்பட்டுள்ளது. போதைப்பொருள் இல்லாத விளையாட்டுக்கான தென்னாப்பிரிக்க நிறுவனம் (SAIDS) நடத்திய இந்த சோதனையில் ரபாடா தேர்ச்சி பெறத்தவறியுள்ளார்.

    இந்த சோதனை முடிவு கடந்த ஏப்ரல் 1-ம் தேதி வெளியாகி உள்ளது. அப்போது ரபாடா ஐபிஎல் தொடரில் குஜராத் அணியுடன் இருந்தார். அடுத்த நாள் (ஏப்ரல் 2) குஜராத் அணி, ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணியுடன் மோதியது. இந்த ஆட்டத்தில் ரபாடா கலந்து கொள்ளாத நிலையில் ஏப்ரல் 3-ம் தேதி தாயகம் புறப்பட்டுச் சென்றார். இந்த விவகாரத்தில் தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் ரபாடாவுக்கு 3 மாதம் தடை விதித்ததாக கூறப்படுகிறது.

    இந்நிலையில் தென் ஆப்பிரிக்க ஊக்கமருந்து எதிர்ப்பு விதிகளின்படி ரபாடா போதைப்பொருள் தடுப்பு கல்வி மற்றும் விழிப்புணர்வு திட்டத்தில் பங்கேற்றார். இதில் 2 அமர்வுகளை ரபாடா நிறைவு செய்ததை தொடர்ந்து அவர் மீதான தடை நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே ரபாடா கடந்த சனிக்கிழமை அகமதாபாத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியுடன் இணைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

    தடை நீக்கப்பட்டுள்ளதால் ராபாடா உடனடியாக ஐபிஎல் தொடரில் விளையாட முடியும். இன்று (செவ்வாய்க்கிழமை) மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக குஜராத் அணி விளையாட உள்ளது. வான்கடே மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் அநேகமாக ரபாடா களமிறங்க வாய்ப்பு உள்ளதாக கருதப்படுகிறது. மேலும் அடுத்த மாதம் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெற்ற ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் ரபாடா கலந்துகொள்வதில் எந்தவித சிக்கலும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    விளையாட்டு

    ‘நான் ஏன் கிளப் உலகக் கோப்பை தொடரில் விளையாடவில்லை என்றால்…’ – ரொனால்டோ ஓபன் டாக்

    June 29, 2025
    விளையாட்டு

    மறக்குமா நெஞ்சம் | இந்தியாவின் அசாத்திய வெற்றியும்; டி20 உலகக் கோப்பை பட்டமும் OTD

    June 29, 2025
    விளையாட்டு

    வங்கதேசத்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் அபாரம்: தொடரை கைப்பற்றியது இலங்கை அணி

    June 29, 2025
    விளையாட்டு

    வங்கதேச கேப்டன் ஷாண்டோ ராஜினாமா

    June 29, 2025
    விளையாட்டு

    ஹேசில்வுட் அபார பந்துவீச்சு: பார்படோஸ் டெஸ்டில் ஆஸ்திரேலிய அணி வெற்றி

    June 29, 2025
    விளையாட்டு

    ஜூனியர் ரோல் பால் இந்திய அணி சாம்பியன்

    June 29, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • திமுக கூட்டணி மறுபரிசீலனைக்கு அவசியமில்லை: நிர்வாக குழு கூட்டத்துக்கு பிறகு வைகோ திட்டவட்டம்
    • இந்தியாவில் பெண் தொழில்முனைவோர் உலக சராசரியைவிட மிகவும் குறைவு
    • ஹரியானாவில் முன்னாள் காங். எம்எல்ஏ-வின் ரூ.557 கோடி சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை நடவடிக்கை
    • தேசிய ஜனநாயக கூட்டணியில் இன்னும் பல கட்சிகள் இணையும்: மத்திய அமைச்சர் எல்​.​முருகன் தகவல்
    • அதிக கலோரிகளை எரிக்கக்கூடிய “பவர் வாக்கிங்” ஆக தினசரி உலாவும் மேம்படுத்த 5 எளிய உதவிக்குறிப்புகள் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    Recent Comments

    No comments to show.

    Archives

    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.