Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Friday, August 1
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»விளையாட்டு»ஓவல் டெஸ்ட் போட்டி மழையால் பாதிப்பு: இந்திய அணி 6 விக்கெட் இழப்புக்கு 204 ரன் சேர்ப்பு
    விளையாட்டு

    ஓவல் டெஸ்ட் போட்டி மழையால் பாதிப்பு: இந்திய அணி 6 விக்கெட் இழப்புக்கு 204 ரன் சேர்ப்பு

    adminBy adminAugust 1, 2025No Comments3 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    ஓவல் டெஸ்ட் போட்டி மழையால் பாதிப்பு: இந்திய அணி 6 விக்கெட் இழப்புக்கு 204 ரன் சேர்ப்பு
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    லண்டன்: இந்தியா – இங்கிலாந்து அணிகள் இடையிலான கடைசி மற்றும் 5-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மழையால் பாதிக்கப்பட்டது.

    லண்டன் கெனிங்டன் ஓவல் மைதானத்தில் நேற்று தொடங்கிய இந்த டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் ஆலி போப் பீல்டிங்கை தேர்வு செய்தார். இரு அணியிலும் மாற்றங்கள் செய்யப்பட்டு இருந்தன. இந்திய அணியில் ரிஷப் பந்த், ஷர்துல் தாக்குர், ஜஸ்பிரீத் பும்ரா, அன்ஷுல் கம்போஜ் ஆகியோர் நீக்கப்பட்டு துருவ் ஜூரெல், கருண் நாயர், பிரசித் கிருஷ்ணா, ஆகாஷ் தீப் ஆகியோர் சேர்க்கப்பட்டனர்.

    பேட்டிங்கை தொடங்கிய இந்திய அணிக்கு தொடக்கமே சற்று அதிர்ச்சியாக இருந்தது. யஷஸ்வி ஜெய்ஸ்வால் 9 பந்துகளில், 2 ரன்கள் எடுத்த நிலையில் கஸ் அட்கின்சன் பந்தில் எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார். களநடுவர் முதலில் அவுட் கொடுக்காத நிலையில் இங்கிலாந்து அணி மேல்முறையீடு செய்தது. இதில் பந்து ஸ்டெம்புகளை தாக்குவது தெரியவந்ததை தொடர்ந்து ஜெய்ஸ்வால் வெளியேறினார்.

    இதையடுத்து களமிறங்கிய சாய் சுதர்சன், கே.எல்.ராகுலுடன் இணைந்து பொறுமையாக விளையாடினார். கே.எல்.ராகுல் 40 பந்துகளில், ஒரு பவுண்டரியுடன் 14 ரன்கள் எடுத்த நிலையில் கிறிஸ் வோக்ஸ் பந்தில் போல்டானார். கிறிஸ் வோக்ஸ் ஆஃப் ஸ்டெம்புக்கு வெளியே கூடுதல் பவுன்ஸுடன் வீசிய பந்தை கே.எல்.ராகுல் கட் செய்ய முயன்றார். ஆனால் பந்து மட்டை உள்விளிம்பில் பட்டு ஸ்டெம்பை பதம் பார்த்தது.

    38 ரன்களுக்கு 2 விக்கெட்களை இழந்த நிலையில் கேப்டன் ஷுப்மன் கில் களமிறங்கினார். இந்திய அணி 23 ஓவர்களில் 2 விக்கெட்கள் இழப்புக்கு 72 ரன்கள் எடுத்திருந்த நிலையில் மழை காரணமாக ஆட்டம் தடைபட்டது. தொடர்ந்து மதிய உணவு இடைவேளை வழங்கப்பட்டது. இதன் பின்னர் ஆடுகளம் ஈரப்பதமாக இருந்ததால் போட்டியை தொடங்குவதில் தாமதம் நிலவியது.

    அப்போது ஷுப்மன் கில் 15, சாய் சுதர்சன் 25 ரன்களுடன் களத்தில் இருந்தனர். மைதானத்தில் உள்ள ஈரதப்பதம் உலர்த்தப்பட்டு சுமார் 2 மணி நேரத்துக்கு பிறகு ஆட்டம் மீண்டும் தொடங்கப்பட்டது. ஷுப்மன் கில் 35 பந்துகளில், 4 பவுண்டரிகளுடன் 21 ரன்கள் எடுத்த நிலையில் ரன் அவுட் ஆனார்.

    கஸ் அட்கின்சன் பந்தில் தடுப்பாட்டம் மேற்கொண்ட ஷுப்மன் கில் ரன் ஓட முயற்சி செய்தார். ஆடுகளத்தின் மையப்பகுதிக்கு அவர், வந்த நிலையில் எதிர்முனையில் இருந்த சாய் சுதர்சன் ஓட வேண்டாம் என பின் வாங்கினார். அப்போது ஷுப்மன் கில் திரும்பி கிரீஸ் பகுதிக்குள் செல்வதற்குள் கஸ் அட்கின்சன் பந்தை விரைவாக எடுத்து ஸ்டெம்பை தகர்த்தார்.

    இந்த ரன் அவுட்டை ஓய்வறையில் இருந்து பார்த்த பயிற்சியாளர் கவுதம் கம்பீர் விரக்தியடைந்தார். இதையடுத்து கருண் நாயர் களமிறங்கினார். இந்திய அணி 29 ஓவர்களில் 3 விக்கெட்கள் இழப்புக்கு 85 ரன்கள் எடுத்திருந்த நிலையில் மழை காரணமாக ஆட்டம் மீண்டும் நிறுத்தப்பட்டது. அப்போது சாய் சுதர்சன் 84 பந்துகளை எதிர்கொண்டு 4 பவுண்டரிகளுடன் 28 ரன்களும், கருண் நாயர் 8 பந்துகளை சந்தித்து ரன் ஏதும் எடுக்காமலும் களத்தில் இருந்தனர்.

    பின்னர் சாய் சுதர்சன் 108 பந்துகளில் 38 ரன்கள் எடுத்து ஜாஷ் டங் பந்தில் ஆட்டமிழந்தார். ஜடேஜாவையும் 9 ரன்களில் டங் வெளியேற்றினார். இந்த தொடரில் முதல் முறையாக விளையாடும் வாய்ப்பை பெற்ற துருவ் ஜூரெல் 19 ரன்களில் அட்கின்சன் பந்தில் ஆட்டமிழந்தார். முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 64 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 204 ரன்கள் எடுத்திருந்தது இந்தியா. கருண் நாயர் 52 ரன்கள் உடனும், வாஷிங்டன் சுந்தர் 19 ரன்கள் உடனும் களத்தில் உள்ளனர்.

    கவாஸ்கர் சாதனை முறியடிப்பு: இங்கிலாந்து அணிக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் கேப்டனான ஷுப்மன் கில் 21 ரன்களில் ஆட்டமிழந்தார். முன்னதாக அவர், 11 ரன்களை எடுத்திருந்த போது டெஸ்ட் தொடர் ஒன்றில் அதிக ரன்கள் குவித்த இந்திய கேப்டன் என்ற சாதனையை படைத்தார். இதற்கு முன்னர் அதிகபட்சமாக இந்திய அணியின் கேப்டனாக1978-79-ம் ஆண்டு மேற்கு இந்தி

    யத் தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சுனில் கவாஸ்கர் 732 ரன்கள் குவித்திருந்தார். இந்த சாதனையை தற்போது ஷுப்மன் கில் முறியடித்து புதிய சாதனையை நிகழ்த்தி உள்ளார். நடப்பு இங்கிலாந்து தொடரில் ஷுப்மன் கில் இதுவரை 743 ரன்கள் குவித்துள்ளார்.

    5-வது முறையாக டாஸில் தோல்வி: இங்கிலாந்து அணிக்கு எதிராக நேற்று லண்டனில் தொடங்கிய 5-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ஷுப்மன் கில் டாஸில் தோல்வி அடைந்தார். இந்த தொடர் முழுவதுமே ஷுப்மன் கில் டாஸில் வெற்றி பெறவில்லை. 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஒரு அணி அனைத்து ஆட்டங்களிலும் டாஸை இழப்பது இது 14-வது முறையாகும். இதில் 13 தொடர்களில் 3 தொடர்கள் டிராவில் முடிவடைந்திருந்தன. 1953-ம் ஆண்டு சொந்த மண்ணில் நடைபெற்ற ஆஷஸ் தொடரில் இங்கிலாந்து அனைத்து ஆட்டங்களிலும் டாஸை இழந்த போதிலும் தொடரை வென்று அசத்தியிருந்தது.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    விளையாட்டு

    என் மகன் அபிமன்யூ ஈஸ்வரனை தேர்வு செய்ய மறுப்பது ஏன்? – தந்தையின் வேதனை

    August 1, 2025
    விளையாட்டு

    கருண் நாயரின் 3,149 நாள் காத்திருப்பு, இந்திய அணி 3,393 ரன்கள் – சாதனைத் துளிகள்!

    August 1, 2025
    விளையாட்டு

    மக்காவ் ஓபன் பாட்மிண்டன்: தருண், லக்‌ஷயா சென் காலிறுதிக்கு முன்னேற்றம்

    August 1, 2025
    விளையாட்டு

    சென்னையில் ஆக.2-ல் மாஸ்டர்ஸ் தேசிய ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப்!

    August 1, 2025
    விளையாட்டு

    புரோ கபடி லீக் சீசன் 12: தொடக்க ஆட்டத்தில் தெலுகு டைட்டன்ஸுடன் தமிழ் தலைவாஸ் மோதல்

    August 1, 2025
    விளையாட்டு

    ஜிம்பாப்வே அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி: 307 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது நியூஸி.

    August 1, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • புதுச்சேரியில் பேனர் தடைச் சட்டம் இருந்தும் ரங்கசாமியின் பிறந்த நாளுக்காக நகரெங்கும் பேனர்கள்!
    • பருவமழை தோட்ட துயரங்கள்? உண்மையில் வேலை செய்யும் இந்த 7 கரிம பூச்சி கட்டுப்பாட்டு தந்திரங்களை முயற்சிக்கவும் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • ட்ரம்ப்பின் ‘போர் நிறுத்த’ விழைவுகளும், ‘அமைதி’ நோபல் பரிசு தாகமும்! – ஒரு பார்வை
    • ‘சமச்சீரான கல்வி கிடைக்க இறுதி மூச்சு வரை போராடியவர் வசந்தி தேவி’ – தலைவர்கள் புகழஞ்சலி
    • வீட்டில் ஒரு நன்னீர் மீன்வளத்தை அமைப்பதற்கு முன் தெரிந்து கொள்ள வேண்டிய 5 முக்கியமான விஷயங்கள்

    Recent Comments

    No comments to show.

    Archives

    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.