Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Saturday, September 20
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»விளையாட்டு»“எப்போதுமே தேசத்தின் ஆதரவு எங்களுக்கு உள்ளது” – பாக். உடனான போட்டி குறித்து சூர்யகுமார் யாதவ்
    விளையாட்டு

    “எப்போதுமே தேசத்தின் ஆதரவு எங்களுக்கு உள்ளது” – பாக். உடனான போட்டி குறித்து சூர்யகுமார் யாதவ்

    adminBy adminSeptember 20, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    “எப்போதுமே தேசத்தின் ஆதரவு எங்களுக்கு உள்ளது” – பாக். உடனான போட்டி குறித்து சூர்யகுமார் யாதவ்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    துபாய்: “எப்போதுமே தேசத்தின் ஆதரவு எங்களுக்கு உள்ளது” என்று பாகிஸ்தான் உடனான போட்டி குறித்து இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் தெரிவித்தார்.

    நடப்பு ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் ‘சூப்பர் 4’ சுற்றில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் நாளை விளையாட உள்ளன. இந்நிலையில், இந்த போட்டிக்கு முன்னதாக செய்தியாளர்களை இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் சந்தித்தார்.

    “கடந்த ஏப்ரல் மாதம் ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இதை தொடர்ந்து பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத அமைப்புகளின் புகலிடங்களில் ‘ஆபரேஷன் சிந்தூர்’ ராணுவ நடவடிக்கையை இந்தியா மேற்கொண்டது. தொடர்ந்து இந்தியா – பாகிஸ்தான் எல்லையை ஒட்டியுள்ள இந்திய மாநிலங்கள் மீது பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியது. அதை இந்திய ராணுவம் இடைமறித்தது. பின்னர் போர் நிறுத்தம் அமலுக்கு வந்தது.

    இந்நிலையில், நடப்பு ஆசிய கோப்பை தொடரில் பாகிஸ்தானுடன் இந்திய அணி கிரிக்கெட் விளையாட கூடாது என்ற குரல் எழுந்தது. இருப்பினும் இந்த தொடரில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் லீக் ஆட்டத்தில் விளையாடின. இப்போது சூப்பர்-4 சுற்றிலும் இரு அணிகளும் விளையாட உள்ளன. இந்தப் போட்டி நாளை நடைபெறுகிறது. இந்நிலையில் தான் செய்தியாளர்களை இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ் சந்தித்தார்.

    அப்போது, “எப்போதும் அணிக்கு வெளியே பேசப்படும் குரல்களை கேட்காமல் தவிர்ப்பது எளிதான காரியம் அல்ல. ஆனால், என்னிடம் அதற்கு ஒரு மந்திரம் உள்ளது. அது என்னவென்றால் அறையின் கதவை அடைத்து, மொபைல் போனை ஸ்விட்ச் ஆஃப் செய்துவிட்டு தூங்குவதுதான். அதுதான் இந்த பேச்சுகளை தவிர்ப்பதற்கான சிறந்த வழி.

    இதை சொல்வது எளிது. ஆனால், செய்வதுதான் கடினம். ஏனெனில், நாம் அதிகளவில் நண்பர்களை சந்திப்போம், இரவு உணவுக்கு வெளியில் செல்வோம். நம்மை சுற்றியுள்ள வீரர்களும் அதை பார்க்க விரும்புவார்கள். இது மிக கடினம். ஆனால், மனம் சொல்வதை கேட்பதா வேண்டாமா என்பதை நீங்கள்தான் முடிவு செய்ய வேண்டும். இதை அணி வீரர்களிடம் நான் கூறியுள்ளேன்.

    இந்தத் தொடரில் அவர்களுக்கு (பாகிஸ்தான்) எதிராக நாங்கள் சிறந்த ஆட்டம் ஆடி வெற்றி பெற்றோம். ஆனால், அது போதாது. நாளைய போட்டியில் நாங்கள் மீண்டும் அடிப்படையில் இருந்து அனைத்தையும் சரியாக செய்ய வேண்டும். எங்களுக்கு எப்போதுமே தேசத்தின் ஆதரவு உள்ளது. அது இந்த ஆட்டத்திலும் இருக்கும்” என அவர் தெரிவித்தார்.

    சுமார் 12 நிமிடங்கள் இந்த செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் ஒரே ஒருமுறை கூட ‘பாகிஸ்தான்’ என சூர்யகுமார் யாதவ் எங்கும் குறிப்பிட்டு பேசவில்லை. கடந்த ஞாயிறு அன்று இந்தியா – பாகிஸ்தான் இடையிலான ஆட்டத்தில் டாஸின் போதும், வெற்றிக்கு பிறகும் பாகிஸ்தான் அணி வீரர்களுடன் இந்திய வீரர்கள் கைகுலுக்க மறுத்தனர். இதை பாகிஸ்தான் தரப்பு விவாத பொருளாக்கியது.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    விளையாட்டு

    களத்தில் காயமடைந்த அக்சர் படேல்: பாகிஸ்தான் உடனான போட்டியில் விளையாடுவாரா?

    September 20, 2025
    விளையாட்டு

    சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 100 விக்கெட்டுகளை கைப்பற்றிய முதல் இந்தியர்: அர்ஷ்தீப் சாதனை

    September 20, 2025
    விளையாட்டு

    வரலாறு படைக்குமா இந்திய மகளிர் அணி?

    September 20, 2025
    விளையாட்டு

    சீனா மாஸ்டர்ஸ் பாட்மிண்டன்: அரை இறுதி சுற்றில் சாட்விக் – ஷிராக் ஜோடி

    September 20, 2025
    விளையாட்டு

    ஆஸ்திரேலியா ‘ஏ’ – இந்தியா ‘ஏ’ டெஸ்ட் டிரா

    September 20, 2025
    விளையாட்டு

    ஆசிய கோப்பை கிரிக்கெட்: ஓமனை 21 ரன்களில் வீழ்த்திய இந்தியா!

    September 20, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • அக்.1 முதல் நயினார் நாகேந்திரன் யாத்திரை: பாஜக மாநில பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம் தலைமையில் குழு
    • இந்த பொதுவான மூலப்பொருளை உணவில் சேர்ப்பது நினைவகத்தை மேம்படுத்தலாம் மற்றும் அல்சைமர் ஆபத்தை குறைக்கும் – இந்தியாவின் டைம்ஸ்
    • சிறுபான்மையினர் நலத்திட்டங்களை ஆய்வு செய்ய சிறப்புக் குழு
    • ரூ.105 கோடி இன்சூரன்ஸ் மோசடிகளை விசாரிக்க உத்தரவு
    • ‘மோடிக்கு ட்ரம்ப் அனுப்பும் பரிசுகள்…’ – எச்1பி விசா கட்டண உயர்வை முன்வைத்து காங். விமர்சனம்

    Recent Comments

    No comments to show.

    Archives

    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.