Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Saturday, August 23
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»விளையாட்டு»என் மகன் அபிமன்யூ ஈஸ்வரனை தேர்வு செய்ய மறுப்பது ஏன்? – தந்தையின் வேதனை
    விளையாட்டு

    என் மகன் அபிமன்யூ ஈஸ்வரனை தேர்வு செய்ய மறுப்பது ஏன்? – தந்தையின் வேதனை

    adminBy adminAugust 1, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    என் மகன் அபிமன்யூ ஈஸ்வரனை தேர்வு செய்ய மறுப்பது ஏன்? – தந்தையின் வேதனை
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    இந்திய டெஸ்ட் அணியில் இடம்பெற முடியாமல் போனதால் தன் மகன் அபிமன்யூ ஈஸ்வரன் மனச்சோர்வடைந்து விட்டதாக அவரது தந்தை அணித்தேர்வுக்குழு மீது சாடல் தொடுத்துள்ளார்.

    சில வீரர்கள் ஐபிஎல் ஆட்டங்களை வைத்து என் மகனைத் தாண்டி டெஸ்ட் அணியில் இடம்பிடித்து விடுகின்றனர், என் மகன் பரிசீலிக்கப்படமால் போய் விட்டான், இது நியாயமற்றது என்கிறார் அபிமன்யூ ஈஸ்வரனின் தந்தை ரங்கநாதன் ஈஸ்வரன்.

    ஆங்கில நாளேடு ஒன்றிற்கு அவர் அளித்த பேட்டியில் கூறும்போது, “என் மகன் அபிமன்யூ மனச்சோர்வில் இருக்கிறான். இப்படித்தான் நடக்கும். ஐபிஎல் ஆட்டங்களை வைத்து சில வீரர்கள் டெஸ்ட் அணியில் இடம்பிடிக்கின்றனர். நீண்ட நாள் வடிவத்தில் ஐபிஎல் ஆட்டத்திறனை கணக்கில் எடுத்துக் கொள்வதா? ரஞ்சி, துலீப், இரானி கோப்பைகளில் ஆடும் ஆட்டங்கள்தான் டெஸ்ட் அணியில் இடம்பெற அளவுகோலாக இருக்க வேண்டும்.” என்று சாடினார்.

    அபிமன்யூ ஈஸ்வரன் டெஸ்ட் அணி சாத்தியங்களுக்குள் 2022ம் ஆண்டு பங்களாதேஷ் டூரின் போதே வந்து விட்டார். ஆனால் அதன் பிறகு 15 வீரர்கள் இந்திய அணியில் அறிமுகமாகி விட்டனர். கடைசியாக அன்ஷுல் காம்போஜ் அறிமுகமானார்.

    பார்டர் -கவாஸ்கர் டிராபியிலும் அபிமன்யூ ஈஸ்வரன் இந்திய அணியில் இருந்தார், ஆனால் டெஸ்ட் வாய்ப்பு கிடைக்கவில்லை. அபிமன்யூ ஈஸ்வரனின் தந்தை தன் மகன் இந்திய அணியில் இணைந்து இன்னும் அறிமுகமாகாத நாட்களை எண்ணி வருகிறார். துலீப் டிராபி, இரானி டிராபி அணிகளில் இல்லாத கருண் நாயரை எப்படி தேர்வு செய்தார்கள் என்று கேள்வி எழுப்புகிறார்.

    “என் மகன் அணியில் இணைந்து இன்னும் அறிமுகமாகாத நாட்களை மட்டும் நான் எண்ணவில்லை, ஆண்டுகளைக் கணக்கிட்டு வருகிறேன். ஒரு வீரரின் வேலை என்ன ரன்களை எடுக்க வேண்டும். அபிமன்யூ அதைச் செய்திருக்கிறானே. ஆஸ்திரேலியா பயணத்தில் இரண்டு இந்தியா ஏ மேட்சில் என் மகன் சரியாக ஆடவில்லை என்று சிலர் கூறுகின்றனர். இது நியாயமானதுதான்.

    ஆனால் பார்டர் கவாஸ்கர் டிராபிக்கு முந்தைய போட்டிகளில் அபிமன்யூ நன்றாக ரன்களை எடுத்த போது கருண் நாயர் அணியிலேயே இல்லையே. கருண் நாயரை துலீப், இரானி கோப்பை அணிகளில் தேர்வு செய்யவில்லை. பெர்பார்மன்ஸ் பற்றிப் பேசினால் கடந்த ஆண்டு முதல் நடப்பு ஆண்டு வரை அபிமன்யூ ஈஸ்வரன் 864 ரன்களை எடுத்திருக்கிறான்.” என்கிறார் ரங்கநாதன் ஈஸ்வரன்.

    இதுவரை அபிமன்யூ ஈஸ்வரன் பெங்காலுக்காக 103 முதல் தரப் போட்டிகளில் 7,841 ரன்களை 48.70 என்ற சராசரியில் 31 அரைசதங்கள், 27 சதங்கள் என்று எடுத்துள்ளார்.

    அபிமன்யூ ஈஸ்வரனின் தந்தைக்கு இத்தனை ஆற்றாமை இருந்தால் காரணமின்றி அணியிலிருந்து ஒதுக்கி வைக்கப்பட்டுள்ள ச்ர்பராஸ் கானுக்கும் அவரது தந்தைக்கும் எத்தனை வேதனை இருக்குமென்பதை நாம் யூகிக்க முடிகிறது.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    விளையாட்டு

    கேரளாவில் அர்ஜெண்டினா உடன் விளையாடும் அணி எது? – ஆஸி., சவுதி, கத்தாருக்கு வாய்ப்பு

    August 23, 2025
    விளையாட்டு

    “தடகள வீரர்களுக்கு மலைப்பகுதி பயிற்சி அவசியம்” – இந்திய தடகள வீராங்கனை ஷர்வானி சாங்லே

    August 23, 2025
    விளையாட்டு

    மெஸ்ஸி தலைமையிலான அர்ஜெண்டினா கால்பந்து அணியின் கேரள பயணம் உறுதி: நவம்பரில் விளையாடுகிறது

    August 23, 2025
    விளையாட்டு

    ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப்: தங்கம் வென்றார் இளவேனில் வாலறிவன்

    August 23, 2025
    விளையாட்டு

    புரோ கபடி லீக்கில் ‘ஷூட் அவுட்’ முறை!

    August 23, 2025
    விளையாட்டு

    மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட்: பெங்களூருவில் நடைபெற இருந்த போட்டிகள் மும்பைக்கு மாற்றம்

    August 23, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • உங்கள் தக்காளி செடிகள் பூக்கும் என்பதற்கான 10 காரணங்கள் மற்றும் அவற்றை எவ்வாறு சரிசெய்வது | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • “ஆட்டோ வாங்க ரூ.75,000 மானியம் கொடுப்போம்” – எடப்பாடி பழனிசாமி வாக்குறுதி
    • காலை உணவைத் தவிர்ப்பது டீன் உடல்நலம் மற்றும் பல் சுகாதாரத்தை எவ்வாறு பாதிக்கிறது | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • ‘ஜனநாயகன்’ படத்தில் நடிக்கிறாரா புஸ்ஸி ஆனந்த்? 
    • பரமக்குடி அருகே சகோதரிகளான 2 சிறுமிகள் மின்னல் பாய்ந்து உயிரிழப்பு

    Recent Comments

    No comments to show.

    Archives

    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.